Wednesday, September 09, 2009

இழந்தவை ஏராளம்....


சம்பாதித்தவையை விட
இழந்தவையே ஏராளம்.
அப்பா அம்மா அன்பு
சகோதர பாசம்
நண்பர்கள் விருந்து
உறவினர் வீட்டு விசேஷங்கள்
மனைவியின் அருகாமை
குழந்தையின் மழலைமொழி
இன்னும் பலவாக
எல்லோர்க்கும் பொதுவாக
சம்பாதித்தவையை விட
இழ்ந்தவையே ஏராளம்.

8 comments:

லோகு said...

இது தற்காலிகம் தான்.. ஆனால் சம்பாதிக்காமல் இருந்தால் நீங்கள் சொன்னவற்றில் சிலதை தவிர மற்றவற்றை நிரந்தரமாக இழுந்திருப்பீர்கள்... பணமே பிரதானம்.. சம்பாதிக்கற வழிய பாருங்க பாஸ்..

ஹேமா said...

இழப்புக்கள் என்று கோர்த்து எடுத்தோமேயானால்,பாசம் முதல் பணம் ,உயிர்,காலநேரம் வரை.
ஆனால் ஈடு செய்யமுடியாததாயும் திருப்பிப் பெற்றுக்கொள்ள முடியாதவைகளுமாய் இருக்கே அதுதான் வேதனை ராஜா.

தங்கராசு நாகேந்திரன் said...

வெளிநாட்டுல வேலை பாக்குறது எப்படிப்பட்ட வலின்னு அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்,இதப்பத்தி நான் ஒரு பெரிய கட்டுரையே எழுதலாம்னு நினைச்சதுண்டு. நீங்க கவிதையில அழகா வெளிப்படுத்திட்டிங்க. நீங்க போட்டிருக்கிற படத்தோட வெறுமை மாதிரிதான் நம்ம வாழ்க்கையும்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமையான வரிகளில் உண்மை + வேதனை தெரிக்கிறது..!

Thamira said...

Good.!

அன்புடன் நான் said...

பணமாக சம்பாதிபதெல்லாம் பம்பாத்தியம் அல்ல. நீங்க சொன்ன அந்த இழந்தவை தான் உண்மையான சம்பாத்தியம். கருத்து கவிதை அருமை வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

வேலை பளுவினால்,வர இயலாமல் இருக்கு ராஜா.இந்த தத்துவார்த்தமான வெளிப்பாடு நல்லா இருக்கு.

Anbu said...

பிரிவின் ஏக்கம் நல்லா இருக்கு அண்ணா..