Tuesday, February 21, 2017

ஸ்ரீ ஸ்வாமி சங்கிலிபூதத்தாரின் தியான ஸ்லோகம் மற்றும் விருத்தம்


*

அருள்மிகு  ஸ்ரீ ஸ்வாமி சங்கிலிபூதத்தாரின் முழுமையான தியான ஸ்லோகம் மற்றும் விருத்தம்*

பரிவார தேவதாக்கள் வரவு :

ஸ்ரீ பூதத்தார் வரவு பாடல்:

த்யானம் :

க்ருஷ்ணாபம் பீம தம்ஷ்ட்ரம்
ப்ரகடித வதனம் ரக்த நேத்ரம் கதாந்தே
ஸ்வயம்பாஹம் ப்ரஸார்ய ப்ருதுதரகதயா
ஸோத்ருதம் தக்ஷபாஹூ
அத்ரீந்த்ராகார ரூபம் மணிமகுடதரம்
பூஷணைர் பாஸமானம்
பீமம் பீமாட்டஹாஸம் ப்ரணத பயஹரம்
ஸ்ரீ பூதநாதம் நமாமி



விருத்தம் :

நீருண்ட மேகமது போலவே திருமேனியழகும்
நீண்டு வளர் மீசையழகும்

நெற்றியில் கஸ்தூரி திலகமும் மணி மகுடமும்
நேர் புருவ விழியினழகும்

பார் கொண்ட நவரத்னம் ஒளிர் பொற்பதக்கமும்
பல் வரிசை போல் அழகும்

பகைவரை வெல்லவே பிடித்திடும்
கதையுடன் பெருவிழி சிவந்த அழகும்

நேர் கொண்ட கச்சையது கட்டியே
ஜரிகையுடன் நின்று வளர் பாதமழகும்

நித்யமும் பக்தர்களை வாழ்கவென்று வாழ்த்தும்
நிறைந்த சங்கிலியின் அழகும்

சீர் கொண்டடிக்கடி சிரித்து அட்டஹாஸம் செய்யும்
சிறந்த முகஸோபை அழகும்

ஸ்ரீ லலிதை காணவே ஜெய பூத நாதனும்
தெருவில் வரும் பவனி பாரீர்


இடியிடி வாள் மின்ன
இடமலை பூதத்தானும்
கொடுமுடி மலையிலேறி
கூவி ஆர்ப்பாட்டம் செய்ய

வெட்டிடும் கொடுவாள் ஏந்தி
வெறிக்கலி முதலாயுள்ள
மலையடி கூடிச் சென்று
வணங்கினார் தலைவர் முன்னே

நவரச சேனைக்கெல்லாம்
நாயகன் ஸ்ரீ பூத நாதன்
சிவ ரெங்க மாலா போற்றி

தேச ப்ரதேசம் செய்ய
எவரெங்கே போனாலென்ன
என்று ஈ வண்ணம் ஸேனை
விவரங்களோடு கூட
விரவினால் வருவாரென்று

கட மலை யானை சூழ
காந்த மலையில் அய்யன்
மட மயில் நடனமேறும்
நல் மகிழ் குளத்தூரய்யன்
பவனி வரும் காட்சி பாங்குடன் பகருவேனே

காந்தமலை வாழ்கின்ற
மணிகண்டர் மந்திரியாய்
கயிலையில் உதித்த மெய்யன்
காரணமாய் வெகு கோடி
பூதகண ஸேனைகள்
கலி கொண்டு மாளுமய்யன்
மலை வாஸ ஏழைகளை காக்கவே


*சங்கிலி வலக்கரம் பிடித்த மெய்யன்*
அந்தமாய் வாமகரம் தன்னிலே
கதையும் அழகாய் தரித்த மெய்யன்
ஆரும் நிகர் என்னாமல் மாநிலம்
ஆள்கின்ற அரும்பணி தரித்த மெய்யன்

மந்தஹாஸமுடை பல்லொடு கிரீடமுடன்
மா லலிதை மகிழ்ந்த மெய்யன்
மஹாமேரு நிகரான மதயானை மீதினில்
மன்னன் இவர் வரவு பாரீர்.

* மாசி மாத மகாசிவராத்திரி விரதம் இருக்கும் அன்பர்கள், பக்தர்கள் தியானம் பாராயணம் செய்து அருள்மிகு ஐயன் சுவாமி சங்கிலி பூதத்தார் அருள் பெருக.*

Thursday, February 16, 2017

சுவாமி சங்கிலி பூதத்தார் துதி பாடல்


சட்டநாதா, சங்கிலிபூத ஐயா
சங்கடமெல்லாம் நீக்கும் ஐயா


மலைபோல் வரும் துன்பமெல்லாம்
பனி போல் விலக்கும் ஐயா

மலை மேல் ஏறி வந்தோம்
மனஅமைதி தாரும் ஐயா

மாசி மாதம் பிறந்ததையா
மன்னாதி மன்னன்
மகேசன் புதல்வன்
உன் அருளால்  மக்கள்
காசி போகும் பலன் கிடைத்ததையா


தண்டம் ஏந்தி நிற்கும் ஐயா
தங்கள் பிள்ளை நாங்கள்
தவறேதும் செய்தாலும்
தண்டனையின்றி தாங்கும் ஐயா

தளர்ந்து சாயும் நேரம்
தாங்கி பிடிக்கும் ஐயா

மக்கள் அகம் முகம்
மலர்ந்து மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் ஐயா  

கருவூலம் காக்கும் ஐயா
எங்கள் குறை நிர்மூலம் செய்யும் ஐயா

குழப்பத்திரை நீக்கி
குழந்தை போல் காக்கும் ஐயா

பழிக்கும் பகை போக்கி
பலன் பல தாரும் ஐயா

அமிர்தபால ஐயா அடியவர் எங்களுக்கு
எப்போதும் உன் ஆளுமை வேண்டும் ஐயா

உன்னை அறிந்த பிள்ளை எம்மை
ஊரறிய உன்புகழ் பாடி
உவகை கொள்ள செய்யும் ஐயா

ஷேத்ரபால ஐயா உம் பிள்ளை நாங்கள்
தேசம் எங்கு சென்றாலும்
சேதம் ஏதும் இன்றி நல்ல சேதி
பல சிறப்புடனே தாரும் ஐயா

நாங்கள் நம்பும் தெய்வம்
எத்தனையோ என்றாலும்
கூட இருந்தே காக்கும்
குடும்பதெய்வம் நீயே ஐயா

சிலையாய் நின்று சிரிக்கும் ஐயா
நிலையாய் உனக்கு ஏவல் செய்வோம் ஐயா

களையாய் காவல் கொண்டு காக்கும் ஐயா
உயர்வாய் உன் புகழ் சொல்வோம் ஐயா

சட்டநாதன், சங்கிலிபூதம் 
சரணம் போற்றி போற்றி

அமிர்தபாலன், அருள்நாதன்
அபயம் போற்றி போற்றி

தண்டநாதன், ஷேத்ரபாலன்
தவபாதம் போற்றி போற்றி