Thursday, December 31, 2009

அகம் மகிழ்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அனைவருக்கும் அகம் மகிழ்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Saturday, December 26, 2009

’வலையுலக சுஜாதா’ - திரு.ஜவர்லால் அவர்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு மத்தியில் தமிழ்மணத்தை நுகர்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு வலைப்பூவின் வாசம் என்னை மிகவும் கவர்ந்தது. படித்ததும் அதிர்ந்தேன். அந்த வலைப்பதிவரது புகைப்படத்தை பார்த்தவுடன் மீண்டும் ஆனந்த அதிர்ச்சி. அவரா, அவர்தானா, ஒரு வேளை அவரது குடும்ப உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் யாராவது அவரது பழைய படைப்புகளை வலையில் ஏற்றிக் கொண்டு இருக்கிறார்களோ என்றொரு குழப்பம்.அந்த வலைப்பதிவின் பல பதிவுகளையும் படித்தபின் தான் தெளிந்தேன்.

திரு.ஜவர்லால் அவர்களது ‘இதயம் பேத்துகிறது’ வலைப்பூ தான் அது.ஆம் அப்படியே அந்த காலத்தில் பிரபல எழுத்தாளர் திரு.சுஜாதா எழுதிய படைப்புகளை படிப்பது போலவே குறும்பும், சுவாரசிய நடையும் கொண்ட வசீகரீக்கும் எழுத்துக்களால் வசியப்படுத்தினார். புகைப்படத்திலும் அச்சு அசலாக திரு.சுஜாதா போன்றே முகத்தோற்றம் என்பதால் தான் ஆரம்பத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியும்,குழப்பமும். தற்செயலாக படிக்க நேர்ந்த அவரது வலைப்பூவை அன்றுமுதல் தவறாமல் தொடர்ந்து படித்தும், பின்னூட்டம் இட்டும் வருகிறேன்.

பணிப்பளுவால் உடல் அலுப்பாகி, மனம் களைப்படையும் போதெல்லாம் நண்பர்கள் பதிவுகள் படித்து மனம் உற்சாகமாகி சுறுசுறுப்படைவது எனது பழக்கம். நான் ஈடுபட்டிருக்கும் திட்டப்பணிகள் கடந்த மூன்று மாதகாலமாக இரவு பகல் பாராமல் தீவிரமாக நடப்பதால் வலைப்பக்கம் ஒதுங்கவும், பதிவுகளை படிக்கவும் முடியவில்லை. படித்தாலும் பின்னூட்டம் இட நேரமில்லை.

பல நாள் இடைவெளிக்குப் பின் திரு.ஜவர்லால் அவர்களின் வலைப்பூவிற்கு சென்று அவரது ஜப்பான் பயண தொடர்பதிவைப் படித்தேன். முந்தைய பாகங்கள் மற்றும் படிக்காத பல பதிவுகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நான் எழுத ஆரம்பித்த உல்லாச பயணப்பதிவு நான்கு பதிவிற்கு மேல நகரமாட்டேன் என அடம்பிடிக்கிறது. அன்னாரோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்ற ஒரு அலுவல் சார்ந்த பயணத்தை அவருக்கே உரிய நகைச்சுவை நடையில் மிகவும் சிறப்பாக அழகான புகைப்படங்கள் மற்றும் தகவல்கKளுடன் சுவாரசியமாக பதிவிட்டு வருகிறார்.நான் பணிபுரிவதும் ஜப்பான் நிறுவனம் என்பதால் ஜப்பானிய மொழி சிறிது தெரியும் என்பதால் அவரை கலாய்த்து பின்னூட்டம் இட்டேன். அவரும் அதனை பெருந்தன்மையாக ஏற்று பதில் சொல்லி இருந்தார்.

வலையுலகம் மூலம் பழகிய பல நண்பர்களுடன் சாட்டிங் தொடர்பு உள்ளது. பெரும்பாலும் எல்லோரிடமும் பேசியும் இருக்கிறேன். சரி சாரிடமும் பேசி விடலாம் என்று முடிவு செய்து அவர் அலைபேசி எண் வேண்டி கடந்த வியாழன் தனிமடல் இட்டேன். தொடர்பு எண்ணை தெரியப்படுத்தி உடன் பதில் அனுப்பி இருந்தார். ஞாயிறு காலை இந்திய நேரம் காலை பத்து மணிக்கு பேசுவதாக பதில் அனுப்பிவிட்டு இரண்டு நாள்களாக மிகுந்த குறுகுறுப்போடு இருந்தேன். அவசர பயணம் கிளம்பியதால் அவரோ என் பதில் மடல் பார்க்கவில்லை என்பது எனக்கு தெரியாது.

ஞாயிறு காலை நான் அழைக்கும்போது பயணம் முடித்து திரும்பி கொண்டு இருந்தார். “யார்“ என்றவரிடம், “உங்கள் ரசிகன் ராஜா” என்றேன். தனியாக சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையில் கார் ஓட்டி சென்று கொண்டிருந்தவர் சாலை ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு கால் மணி நேரம் பேசினார். பல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். அவரது பல பதிவுகள் குறித்த தகவல்களை புள்ளி விவரமாக கூறியதில் மிக்க மகிழ்ச்சி அடைந்து உற்சாகமாகப் பேசினார். தொடர்ந்து பல சுவாரசிய பகிர்வுகளை பதிவுகளாக இட வேண்டும் என வேண்டி விடைபெறும் பொழுது அவருக்கு ஒரு விருது வழங்க விருப்பம் உள்ளதாக தெரிவித்தேன். “அப்படியா, என்ன சொல்லுங்கள்” என்றார். ‘வலையுலக சுஜாதா’ என்று என் மனமகிழ்வை விருதாக வழங்கி சிறப்பித்தேன்.

திரு.சுஜாதா அவர்களுக்கும்,திரு.ஜவர்லால் அவர்களுக்கும் நான் கண்ட ஒற்றுமைகள். இருவருமே பொறியியல் துறை சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் இருந்து பணி நிமித்தமாக பெங்களூரு சென்றவர்கள் என்பதால் பொருத்தமான விருது வழங்கியதாகவே நினைக்கிறேன்.

எங்களது அலைபேசி உரையாடல் குறித்த திரு.ஜவர்லால் அவர்கள் பதிவின் சுட்டி.

கடந்த ஜூலை 10ம் தேதி முதல் பதிவிட ஆரம்பித்த அவரது வலைப்பூ மிககுறுகிய காலத்தில் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டு சாதனை படைத்து உள்ளது. ஆம், 165 நாள்களுக்குள் 1,00,000 பார்வை என்பது மிகப்பெரும் சாதனை. சராசரியாக நாளொன்றுக்கு 600 வாசகர்கள் அவரது படைப்புகளை படித்து மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

பதிவிட வந்த முதல் மாதத்திலே சர்வதேச சிறந்த புதுமுக பதிவர் விருது பெற்றதும் , 10,000 பார்வைகளும் அவரது பல்சுவை பதிவுகளுக்கு நல்ல சான்றுகள்.

எழுத்து மட்டுமல்லாமல் அஷ்டாவதானி என்று கூறினாலும் பொருந்தும் என்பதற்கு அவரது இசையறிவும், ஆர்வமும், குரல் வளமும், புகைப்பட மிக்ஸிங்குகளும் நல்ல சாட்சிகள். அவரே சொந்தமாக இசையமைத்து , இனிமையாக சொந்தக்குரலில் பாடியுள்ள பாரதியாரின் பாயும் ஒலி நீ எனக்கு பாடல் மயக்கம் தரும் அமுதசுவை. ஒளி,ஒலியும் மிக துல்லியம்.
தாய்மொழி பேச,படிக்க,எழுத வழியில்லாத அயல்நாடுகளில் வாழு(டு)ம் என் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அன்னாரைப் போன்றோருக்கு எங்களால் முடிந்த கைம்மாறு இது போன்ற பாராட்டுக்கள் தான்.
எனதிந்த பாராட்டு பதிவினைப் படிக்கும் ஒத்த ரசனையுள்ளவர்கள் அன்பு நண்பர்களாகிய நீங்களும் அன்னாரது பல்சுவை பதிவுகளையும் படித்து பெருமகிழ்ச்சி அடையவேண்டும் என்பதே என் ஆசை.

அன்னாரைப் போன்று என்னை பெரிதும் கவர்ந்த பதிவர்களை பற்றி தொடர்ந்து எழுதலாம் எனவும் உள்ளேன்.

Tuesday, December 22, 2009

குழந்தை கை பொம்மை

குழந்தை கை பொம்மை
போல் குலுக்குகிறாய்
என் மனதை...
அன்பே உன்
முரட்டு அன்பினால்
உலுக்குகிறாய்
உயிரெ(ல்)லாம்
என் உணர்வெ(ல்)லாம்...
------------------------------------
காதல் கன்னிப் பேய்
உன்னைக் கண்டு
பிழைத்த எனக்கு

கள்ளமில்லா
பிள்ளைப்பேய்
கண்டென்ன பயம்.
-------------------------------------
காதல் விளையாட்டில்
நீயொரு பொம்மை
நானொரு பொம்மை

கலங்காதே கண்ணெ
என்னருமை பெண்ணே
காலக்குழந்தை
இணைத்திடும் நம்மை.
--------------------------------

ஏதுமறியா குழந்தை
போல் இருந்தாய்
காதலிக்கும் போது...

ஏதும் செய்யமுடியா
பொம்மை ஆக்கினாய்
என்னை கல்யாணத்திற்கு பின் ....
-------------------------------------------
பணிப்பளுவால் எழுத முடியாமல் நீண்ட நாள்களாக தவித்த என் கவிமனதை கவிதை எழுத தூண்டிய தோழி ஹேமாவிற்கு நன்றி.

Wednesday, December 16, 2009

ஆஞ்சநேயர் ஜெயந்தியும், மார்கழி மாதப்பிறப்பும்...

இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியும், மார்கழி மாதப்பிறப்பும் ஒரே நாளில் வந்துள்ளன. மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். பள்ளி பருவத்தில் எல்லா வீடுகளிலும் காலையில் வண்ணப்பொடிகளால் கோலமிட்டு, கோலத்தின் நடுவில் தினம் ஒரு பூ வைப்பதை பார்த்து வியந்தது, அரையாண்டு தேர்வு விடுமுறையில் காலையிலே எழுந்து பனி,குளிர் பாராமல் குளித்து, கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்து சுடச்சுட கையில் வாங்கிய வெண்பொங்கல்,சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை காலை உணவாகவே சாப்பிட்டது என பல நிகழ்ச்சிகள் பசுமையாக உள்ளத்தில் வந்து போகின்றன.

சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டர் என்பதால் ஆஞ்சநேயர் மீது சிறுவயது முதலே மிகப்பிரியம். இராமாயணம்,மகாபாரதம் இரண்டு இதிகாசங்களிலுமே இவரது பங்களிப்பு இருப்பது எப்போதும் மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம்.

கடந்த இரண்டு மாதமாக பணிப்பளு அதிகம். இருக்கையில் அமர நேரமில்லை. வலைப்பக்கம் வரமுடியாமல் வேலை அதிகமாக இருந்ததால் நள்ளிரவில்தான் நண்பர்களின் பதிவுகளை படிக்க முடிந்தது என்றாலும் பின்னூட்டம் இட முடியாத படி அலுப்பு. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. மார்கழி மாதம் போல் மனதில் எப்போதும் குளிர்ச்சி நிலவவும், தொய்வில்லாமல் தொடர்ந்து பதிவுகள் எழுதிடவும் ஆஞ்சநேயர் அருள்வாராக.


Tuesday, December 01, 2009

இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.



எல்லோருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Friday, November 27, 2009

இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.



கொல்லு சனா எந்தூ .தையஃப்.

இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.


Thursday, November 19, 2009

பிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ. நெடுமாற‌ன் க‌ண்டன‌ம்

பிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ. நெடுமாற‌ன் க‌ண்டன‌ம் (நீண்ட அறிக்கை) .

விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகு‌றி‌த்து இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ. நெடுமாற‌ன் இ‌ன்று ‌அறிக்கை விடுத்துள்ளார்.அவ்வறிக்கையில், ‘’‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீது மு‌ற்‌றிலு‌ம் உ‌ண்மை‌யி‌ல்லாத கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்களை‌க் கூ‌றி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌நீ‌ண்ட அ‌றி‌க்கை ஒ‌ன்‌றினை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார். ஆனால் அம்மாநாட்டில் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகுமரன், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பத்மநாபா, பிளாட் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீது வீண்பழியைச் சுமத்தியிருக்கிறார்.
அந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் என்ற முறையில் இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாமல் புலிகள் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தையின் போது பிரபாகரன் தாமாகவே வெளியேறினார் என்று ரணில் கூறியுள்ள பொய்யான தகவலையே தனக்கு ஆதாரமாக கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் ஆறுகட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் இலங்கை அரசு 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழுத் திட்டத்தை அறிவித்தது. இதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படவில்லை. இந்த அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசிடமே இருக்கும். இத்திட்டத்தை பரிசீலனை செய்து ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டம் ஒன்றை அளிக்க ஒப்புக்கொண்டனர்.அதற்காக உலகெங்கிலுமுள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் பிறநாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்பின்னரே மாற்றுத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டுமென பிரபாகரன் கருதினார்.
அதற்கிணங்க புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழு உலக நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஈழத்தமிழர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

பிறகு டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் உள்ள கூட்டாட்சி முறைப்பற்றி நேரில் கண்டறிந்தது. அதன் பிறகு உருவாக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று நார்வே பிரதிநிதிகள் மூலமாக சிங்கள அரசுக்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார். இந்த உண்மையை ரணில் அடியோடு மறைத்து கூறிய பொய்யையே கருணாநிதி திரும்பவும் கூறியுள்ளார். புலிகள் அளித்த மாற்றுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிங்கள அரசு ஏற்க மறுத்த காரணத்தினால்தான் பேச்சுவார்த்தை முறிந்தது.

பேச்சுவார்த்தை தொடங்கியபோதே தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக கூட்டாட்சி முறையை பரிசீலிக்க விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டது மிகப்பெரிய விட்டுக்கொடுத்தல் ஆகும். ஆனால் சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையிலிருந்து விலகி நிற்க மறுத்ததுதான் பேச்சுவார்த்தை முறிவுக்கு காரணமே தவிர பிரபாகரன் காரணம் அல்ல.

2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். டோக்கியோவில் ஜப்பானிய அரசு முன் நின்று நடத்திய சக தலைமை நாடுகளின் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதால் விடுதலைப்புலிகள் அம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. அழைப்பில்லாத மாநாட்டில் புலிகள் கலந்துகொள்ளவில்லை என்று கூறுவதைப்போன்ற அறியாமை வேறு இருக்க முடியாது.

பாங்காக், டோக்கியோ, பெர்லின், ஒஸ்லோ ஆகிய நான்கு இடங்களில் நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆனால் இரண்டாம் முறையாக டோக்கியாவில் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தைக்கு புலிகளை அழைக்காதது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தவறை மூடி மறைத்து ரணில் கூறியவற்றையே கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளை அவதூறு செய்வதாகும்.

1989ஆம் ஆண்டில் ராசீவ் காந்தி கருணாநிதியையும் மாறனையும் அழைத்துப் பேசி பிரபாகரனுடன் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசி முடிவு காண வழிகாணுங்கள் என்று கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறார். அதற்கிணங்க இவர் செய்தது என்ன? இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியதற்காக வைகோ அவர்கள் மீது அடாத பழியை இவர் சுமத்தினார். புலிகள் உதவியோடு தன்னைக் கொலை செய்யச் சதி நடைபெறுவதாகவும் புலம்பினார். இத்தகையவரா அப்பிரச்சினை தீருவதற்கு வழிகாணுபவர்?

பிரதமராக வி.பி.சிங் இருக்கும்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கேற்ப இந்திய அரசு நடந்துகொள்ளும் என்று கூறி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது இவர் செய்தது என்ன?

ஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளான புலிகளுடன் மற்ற துரோக இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு இவர் செய்த முயற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டு அதைச் சீர்குலைத்தவர் கருணாநிதியே ஆவார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதற்கு புலிகள் தவறிவிட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டாகும். போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும் பிரபாகரனும் கையெழுத்திட்டனர். ஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் பிரதமராக இருந்த ரணில் அந்த உடன்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார். இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்தார். உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தார். புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த சதிச் செய்தார். இந்தக் காரணங்களினால் அவரை தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்த‌ப் பயனும் விளையப்போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர். தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை.

திரும்பத் திரும்பச் சகோதரச் சண்டை என்னும் புளித்துப்போனப் பொய்யையே கருணாநிதி கூறிவருகிறார். போராளி இயக்கங்களுக்குள் மோதலைத் திட்டமிட்டு உருவாக்கியது இந்திய உளவுத் துறையே என்ற உண்மையை மறைப்பதற்கு அவர் இவ்வாறு செய்கிறார். அவருடைய சொந்தக் கட்சியில் முக்கியமான தலைவர்கள் பலர் உட்கட்சி சண்டையில் படுகொலை செய்யப்பட்டதை தடுக்க முடியாத இவர் சகோதரச் சண்டையைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்.

இலங்கைப் போரில் சிங்களப் படைக்கு இந்தியா இராணுவ ரீதியாக அளித்த உதவிகளை அறிந்திருந்தும் அதைத் தடுத்து நிறுத்த முன்வராமல் மறைப்பதற்கு துணைநின்ற துரோகத்தை மறைத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை. உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கப் போவதுமில்லை’’என்று தெரிவித்துள்ளார்.

இணைய மடல் மூலம் இச்செய்தி அறிக்கையை அனுப்பிய அமீரக நண்பர் அமிர்தா பிரின்ஸ் அவர்களுக்கு நன்றி.

Tuesday, November 17, 2009

உயிர் காப்பான் தோழன்

உயிர் காப்பான் தோழன் என்ற பழமொழிக்கேற்ப தன் உயிரை துச்சமென மதித்து நண்பன் உயிர் காக்க விளைந்திட்ட உண்மை நண்பனைப் பற்றிய செய்தி.

தேனி : தேனி அருகே நண்பனை கடித்த பாம்பை, உயிரோடு பிடித்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு ஓடிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்த சுகுமார் மகன் குமார்(18), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகுராஜா(21). இருவரும் நண்பர்கள். குமார் எங்கு சென்றாலும் அழகுராஜாவை அழைத்துக் கொண்டு தான் செல்வாராம். நேற்று மதியம் நண்பர்கள் இருவரும் அரண்மனைபுதூர் பாலம் அருகே வைகை ஆற்றில் குளிக்கச்சென்றனர். குளித்து விட்டு கரைக்கு வந்தபோது குமாரை, கல் இடுக்கிற்குள் இருந்த ஆறு அடி நீள நல்லபாம்பு கடித்தது. நண்பன் துடித்ததை பார்த்த அழகுராஜா பாம்பை பயமின்றி பிடித்தார். குமாரை ஆட்டோவில் 6 கி.மீ. தூரத்தில் உள்ள தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாம்புடன் ஆஸ்பத்திரி நோக்கி அழகுராஜா ஓடினார்.



இரண்டு கி.மீ. தூரம் ஓடிய பின் அங்கு வந்த இன்னொரு ஆட்டோவில் ஏறி ஆஸ்பத்திரியை அடைந்தார். அங்கிருந்த நோயாளிகளும், நர்சுகளும் பயத்தில் விலகி ஓடினர். குமாரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். டாக்டர்களிடம் பாம்பை காட்டியபின் அழகுராஜா அதை அடித்துக் கொன்றார்.

நண்பனை காப்பாற்றும் வேகத்தில் இருந்த அழகுராஜா, பாம்பை கழுத்தை பிடித்து தூக்கி சென்றதில் பாம்பின் பல் அவர் கையிலும் பதிந்ததை கூட பார்க்கவில்லை. இதை பார்த்த டாக்டர்கள் அவருக்கும் சிகிச்சை அளித்தனர். அழகுராஜா கூறுகையில்; ""நண்பனை பாம்பு கடித்தவிட்டதே என்ற ஆத்திரத்தில், செய்வதறியாது பாம்பை பிடித்துவிட்டேன். கடித்த பாம்பை காட்டினால் தான் அதற்கு தகுந்தாற்போல் டாக்டர் சிகிச்சையளிக்கமுடியும் என்பதால், நண்பனை அந்த வழியே வந்த ஆட்டோவில் ஏற்றிவிட்டு விட்டு, பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்தேன். அந்த நேரத்தில் எனக்கு எப்படித்தான் அந்த தைரியம் வந்தது என தெரியவில்லை' என்றார்.

செய்தியின் சுட்டி http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=82 அளித்த அமீரக நண்பர் ஆசிர் தேவதாசனுக்கு நன்றி.

Wednesday, November 11, 2009

உபதேசம்...


அடுத்த வீட்டுச் சுவரில்
அவன் எழுதினான்.
நல்லது செய்தல்
ஆற்றீராயினும்
அல்லது செய்யாதீர்.

Wednesday, November 04, 2009

என்னவளே....

படித்து வியந்த அகநானூறு புறநானூறு நிகழச்சிகளெல்லாம் மறந்தேன். என்னவளே உன் முகநானூறு உணர்ச்சிகள் கண்டபின்....

சூரியனை கண்டால் மலரும் தாமரை சந்திரனை கண்டால் மலரும் அல்லி என்னவளே உன்னை நினைத்தாலே மலருதே என் முகம்....

நல்லபாம்பின் பல்பட்டால் ஒரு முறைதான் உயிர்போகும் என்னவளே நல்லழகுப்பெண் உன்பார்வை பட்டு பலமுறை போகுதே என்னுயிர்....

Saturday, October 31, 2009

ஏதோ நினைவுகள்...


அடர்மழை நாளொன்றில்
அலுப்போடும்
கொஞ்சம் சலிப்போடும்
ஒரு பயணம்....

மழைநீர் தள்ளும்
வைப்பர் போல
மனநினைவுகள்
தள்ள முயல்கிறேன்...

இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
விரட்டும் மனமோகம்....

கார்மேகம் கலைந்தாலும்
நான் கண்ட
கனவுகள் கலையாது....

அடாது பெய்யும்
மழைபோல் விடாது
தொடரும் நினைவுகள்....

மழைநீர் வடிந்தாலும்
என் மனநினைவுகள்
வடியாது...

வெள்ளநீர்
விலகினாலும்
விலகாது
வீண் நினைவுகள்...
என்னோட இந்த கவிதை தனிமைக்கொடுமையில் விளைந்த சோகத்தின் வெளிப்பாடுன்னா கவிதாக்கா கவிதை சுகராக கீதம். இனிமையான எதிர்க்கவிதை புனைந்த கவிதாக்காவிற்கு வாழ்த்துக்கள்.

Sunday, October 25, 2009

எகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 5 – அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.


எதிர்பாராத விதமாக அவசர விடுமுறையில் சென்ற சக துறைநண்பரின் பணியும் நம் தலைமேல் விழுந்து பணிப்பழு பாரமாய் அழுத்துகிறது. பதிவிட எவ்வளவோ விஷ்யங்கள் இருந்தாலும் எழுத நேரமில்லை. நண்பர்கள் தொடர்வருகையும், அண்ணாச்சி கிளியனூர் இஸ்மத் அளித்த விருதும், நண்பர் பிரபாகரின் அருமையான அறிமுகமும் பதிவுகளையும், பகிர்வுகளையும் இன்னும் சிறப்பாக படைக்கவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியை கூட்டியுள்ளன. எனவே இந்த பயணத்தொடரை சாதாரணமாக எழுதாமல் சென்ற இடங்கள் குறித்த பல சிறப்பு தகவல்களையும் சேர்த்து  தரலாம் என உள்ளேன்.



இந்த பாகத்தில் அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.

பாகம் 5 – அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.



எட்டு தேசங்களின் இடையே ஓடும் நைல் நதியில் அஸ்வான் பேரணை ஆப்பிரிக்கா கண்டத்தின் வடகிழக்கே எகிப்து நாட்டில் 4187 மைல் தூரமோடும் உலகிலே எல்லாவற்றிலும் மிக நீளமான நைல் நதியில் அஸ்வான் பேரணை கட்டப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நதி அமேஸான், நைல் நதியை விட நீளத்தில் (3900 மைல்) சற்று சிறியதே. நீல நைல், வெண்ணிற நைல், அத்பாரா எனப்படும் மூன்று மூல நதிகள் ஒன்றாய் இணைந்து, பிரதம நதியான நீள நைல் எகிப்து நாட்டில் ஓடி மத்தியதரைக் கடல் சங்கம அரங்கில் புகுந்து கலக்கிறது. 

நைல் நதி ஓட்டத்திலே ஓர் உலக விந்தை! நீல நைல் இதியோப்பியா, ஸயர், கெனியா, டான்ஜினியா, ரவாண்டா, புருண்டி ஆகிய நாடுகளின் வழியாகவும், வெண்ணிற நைல் யுகாண்டா, சூடான் வழியாகவும், பிரதம நைல் இறுதியில் எகிப்து வழியாகவும், ஆக எட்டு தேசங்களின் வழியாக ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. நமது நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே நதிநீர் பங்கீடு பிரச்சினையாக இருக்கும் போது நைல் நதியில் அல்லது அதன் மூல நதிகளில், பல நாடுகளின் உடன்பாடு, ஒப்பந்தம் பெற்றுப் பேரணைகள் கட்டுவதோ, கால்வாய்கள் வெட்டுவதோ எத்துணைச் சிக்கலான, சிரமான இமாலய முயற்சிகள்.



நைல் நதியில் நான்கு பேரணைகள் (ரோஸைரஸ் அணை, சென்னார் அணை, அஸ்வான் பேரணை, ஓவன் நீர்வீழ்ச்சி அணை) கட்டப்பட்டுப் பயனளித்து வருகின்றன. நைல் நதியின் சராசரி நீரோட்ட அளவு: விநாடிக்கு 3.1 மில்லியன் லிடர் (680,000 காலன்)! அனுதினமும் ஆயிரக் கணக்கான பேர் நைல் நதிப் போக்குவரத்தில் பயணம் செய்து வருகிறார்கள். வேளாண்மை, போக்குவரத்து, சுற்றுலாப் பயணம், மீன்வளப் பிடிப்பு போன்ற முக்கிய வாழ்வு, வர்த்தக, ஊழிய, உவப்புப் பணிகள் அனைத்தும், அணைகள் அமைக்கப் பட்டதால், ஓரளவு ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும், பின்னால் அவை பெருமளவில் விருத்தி யடைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை.


1843 ஆம் ஆண்டு நைல் நதி தீரத்தில் அடுத்தடுத்து வரிசையாகக் கெய்ரோவுக்கு 12 மைல் தூரத்தில் நதிக் கீழோட்டச் சங்கமப் படுகையில் [Downstream Delta] பல திருப்பு அணைகள் கட்டத் தீர்மானிக்கப் பட்டது. அவ்விதம் செய்வதால் நதி மேலோட்ட [Upstream River] நீர் மட்டம் உயர்ந்து, வேளாண்மைக் கால்வாய்களுக்கு நீர் வெள்ளம் அனுப்ப முடியும். அத்துடன் நீர்ப் போக்குவரத்து வசதிகளையும் கட்டுப்பாடு செய்ய முடியும். 1861 ஆண்டு வரை 'சங்கம நதி அரண் ' [Delta Barrage] முழுவதும் கட்டி முடிக்கப் படாமலே இருந்தது. அதற்குப் பிறகு அதே நதி அரண் நீட்சியாகி செம்மைப் படுத்தப் பட்டது. 1901 இல் நைல் சங்கமப் பகுதி டாமைட்டா கிளையின் [Damietta Branch] பாதி தூரத்தில் ஸிஃப்டா நதி அரண் [Zifta Barrage] அந்த அமைப்புடன் சேர்க்கப் பட்டது. அடுத்து அசியட் நதி அரண் [Asyut Barrage] 1902 இல் முடிக்கப் பட்டது.


அஸ்வான் நைல் நதியின் முதல் எகிப்து நீர்வீழ்ச்சி [Cataract] ஆகும். அவ்விடத்தில் பழைய அஸ்வான் கீழ் அணையும் [Old Aswan Lower Dam], புதிய அஸ்வான் மேல் அணையும் [New Aswan Higher Dam] அஸ்வான் நகருக்கு அருகில் அமைந்துள்ளன. அஸ்வான் கீழணை (1899-1902) ஆண்டுகளில் கட்டி முடிக்கப் பட்டது. அதன் நீர்மட்டச் சக்தியை இழுத்து, 345 மெகாவாட் மின்சக்தி ஆற்றலை உற்பத்தி செய்யும் நீர்மின்சார நிலையம் ஒன்று நிறுவனமானது.


அஸ்வான் பேரணை உருவாகி வரும்போது, இடப்பெயர்ச்சியில் பாதிப்பான நபர்களின் எண்ணிக்கை 90,000! அஸ்வான் மேல் அணை கெய்ரோவுக்கு 600 மைல் நதி மேலோட்ட தூரத்திலும், கீழணைக்கு 3.6 மைல் தூர மேலோட்ட தீரத்திலும் (1960-1970) ஆண்டுகளில் அமைக்கப் பட்டது. நைல் நதி 1800 அடி அகலம் உள்ள இடத்தில் கட்டப் பட்டது, மேலணை. மேலணை நீர்மின்சக்தி நிலையத்தின் தகுதி 2100 மெகாவாட் மின்சார ஆற்றல்! பிரம்மாண்டமான அஸ்வான் மேலணையின் நீளம்: 12,000 அடி [3600 மீடர்] (2.3 மைல்)! அணையின் நீர் உயரம்: 370 அடி. மேலணையின் அடிப்பகுதி 0.6 மைல் [1 கி.மீடர்] அகலத்தில் கட்டப் பட்டிருக்கிறது! நதிநீர் மட்டத்திற்கு மேல் அணையின் விளிம்பு 330 அடி [100 மீடர்] உயரத்தில் உள்ளது.

அஸ்வான் அணைக்கரையில் சில அழகிய காட்சிகள்.




அணை குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை



உச்ச வெள்ள அடிப்பில் அணை வழியாகச் செல்லும் நீரோட்டம்: விநாடிக்கு 11,000 கியூபிக் மீடர்! அபாய நிலைக்கு நீர் உயரம் எழும்போது, விபத்தைத் தவிர்க்க 5000 கியூபிக் மீடர் வெளியேற்றும் 'அபாயத் திறப்பு வாய்கள் ' [Emergency Spillways] அமைக்கப் பட்டுள்ளன! அஸ்வான் மேலணை எழுப்பப் பட்டதால், 6000 சதுர கி.மீடர் பரப்புள்ள, செயற்கையான நீர்த் தேக்கம் 'நாஸர் ஏரி ' [Lake Nasser] உருவாகி உள்ளது! மாபெரும் நீர்த் தேக்கமான நாஸர் ஏரி 288 மைல் [480 கி.மீடர்] நீளமும், 10 மைல் [16 கி.மீடர்] அகலமும் கொண்டு, (150-165) கியூபிக் கி.மீடர் (cubic km) நீர்க் கொள்ளளவு உடையது. 


தற்போது அஸ்வான் மேலணையில் ஒவ்வொன்றும் 175 மெகா வாட் உற்பத்தி செய்து வரும், 12 நீர் டர்பைன் யூனிட்டுகள் இயங்கி வருகின்றன (மொத்தம்: 1680 மெகா வாட்). 1967 ஆண்டு முதல் தொடர்ந்து நீர் மின்சார நிலையங்கள் மின்சக்தி பரிமாறி வருகின்றன. நிலையத்தின் உற்பத்தி உச்சமான போது, எகிப்து நாட்டின் பாதியளவு மின்சக்தி ஆற்றலைப் பங்கெடுத்து, முதன்முதல் பெரும்பான்மையான கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க வழி வகுத்தது.


அணையில் தேக்கப்பட்டுள்ள நீர்

அணையிலிருந்து வெளிவரும் நைல்நதி

Friday, October 23, 2009

பல்லவனில்....

கற்றைவாழ் சடையாள்
நெற்றிக்கண்ணினை
சிறிதே காட்ட
சீண்டுவான்
இன்னுமஞ்சான்
செருப்படி படும் வரை....

Wednesday, October 21, 2009

பணிப்பளு...


ஊற்றாக தோன்றி
ஓடையாக உருவாகி
அருவியாய் விழுந்து
ஆற்றில் கலந்து
கால்வாய் பல கடந்து
கடலில் கலக்கும்போது
காணாமல் போகிறோம்
கடைசியில் நாம்.......

Sunday, October 18, 2009

தீபாவளி சிறப்பு விருந்து...

யாரு வீட்டு பார்ட்டி.... இது எங்க வீட்டு பார்ட்டி....

தீபாவளிக்கு சிறப்பு விருந்துன்னு முடிவு பண்ணி தடபுடலா ஏற்பாடு செஞ்சு பக்காவா பார்ட்டி கொண்டாடியாச்சு.உங்கள் பார்வைக்கு சில படங்கள்.


இப்படித்தான் முதல்ல டேபிள் அலங்காரம்..

கறி, மீன், பார்பிக்யூ ரெடியாகி...











மற்ற சைவ, அசைவ உணவு வகைகளும் டேபிளுக்கு வர...











எல்லோரும் களத்துல குதிச்சு....















இளைஞர்கள் ஒரு பக்கம்....











பெரியவர்கள் ஒரு பக்கமா....











அடிச்சு ஆடி அனைத்தையும் காலி பண்ணி தீபாவளியை கொண்டாடி முடிச்சோம்.

எங்களது இல்லம் இருப்பது அபார்ட்மெண்டின் கடைசி 16வது மாடி. எங்களது அபார்ட்மெண்ட்,அழகிய கடற்கரைச்சாலை அடுத்து கடல் என்ற அருமையான அமைப்பு. எந்த அறையில் இருந்து பார்த்தாலும் கடல்தான். இனிமையான அலையோசையோடு எப்போதும் குளிர்ந்த காற்று.

எங்கள் இல்லத்திலிருந்து சில இனிய காட்சிகள்.

அலை கடலும், அழகான சாலையும்.....











நீச்சல்குளம், சாலை, கடல்..











கேமரா மூலம் சில ஒளி விளையாட்டுகள்...
































இன்னுமொரு விருது

அண்ணாச்சி திரு.கிளியனூர் இஸ்மத் அவர்கள் இன்னுமொரு விருது வழங்கி சிறப்பித்துள்ளார். எனது படைப்புகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த "உல்லாசப் பறவை விருது" வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த விருது மேலும் பல வித்தியாசமான பகிர்வுகளையும், பயண அனுவங்களையும், கவிதைகள், தொடர்கதைகள் எழுதிடவும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. அண்ணாச்சிக்கு மிக்க நன்றி.

Saturday, October 17, 2009

தீபா”வலி”






அமெரிக்க அதிபர்
மலேசிய அமைச்சர்
நாட்டின் பிரதமர்
இன்னும் பல
தலைவரெல்லாம்
தொலைக்காட்சியில்
தீபாவளி வாழ்த்து
கூறினர்
இந்திய மக்களுக்கு.....

நானும் வாழ்த்து
கூறினேன்
தொலைபேசியில்
என் இனிய
குடும்ப மக்களுக்கு.....

--------------------------------------

தீபாவளிக்கு தீபாவளி
தேங்காய் பர்பி
செய்வார் என் அம்மா.


பள்ளிக்கு
எடுத்துச்சென்று
பகிர்ந்துண்ணுவேன்
பசங்களோடு..

படிப்பு முடித்து
பலநாடுகள்
சென்றேன்
பணிக்காக..

தீபாவளியுமில்லை...
தேங்காய் பர்பியுமில்லை...

----------------------------------------

எல்லா கதவுகளையும்
இழுத்தடைத்து
இருட்டறைக்குள்
இருந்தாலும்
வீல் வீல் என
வீறிட்டு அழுகிறது
வெடிச்சத்தத்திற்கு
பயந்த குழந்தை...

-------------------------------------

Friday, October 16, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


எல்லோருக்கும்

இனிய

தீபாவளி

நல்வாழ்த்துக்கள்...

Wednesday, October 14, 2009

எகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 4 – அஸ்வான் பேரணை.

பாகம் 3

பாகம் 4 – அஸ்வான் பேரணை


எதுவுமே இல்லாத பாலைவனத்தில் எல்லா வசதிகளுடனும் எழிலாக இருந்த உணவகம்.









உணவகத்தில் சோளரொட்டியும், காரமாய் குழம்பும் இருந்தது. கொண்டு வரச்சொல்லி அமர்ந்தோம்.




















கொண்டுவந்த ரொட்டியை உணவகப் பணியாளர் அப்படியே டேபிளில் வைத்துச் செல்ல ஒட்டுநர் இருவரும் எடுத்து சாப்பிடச் சொல்ல எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நமது ஊரில் ஹோட்டல்களில் இலை ஓரம் கிழிந்தததற்கெல்லாம் எப்படி சண்டை போட்டிருக்கிறோம் இங்கே தட்டு கூட இல்லை அப்படியே வைத்து செல்கிறானே என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். சரி என்ன செய்ய இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொள்ள வேண்டியதுதான் என்றவாறு சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.












ஒன்றரைமணி நேர பயணத்திற்குபின் அஸ்வான் அணையின் முகப்பை அடைந்தோம். அங்கே இருந்த பிரமாண்ட நினைவுச்சின்னம் எங்களை மிகவும் கவரவே இறங்கி பார்க்கச்சென்றோம்.





























அஸ்வான் அணை சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டதால் நினைவுச்சின்னமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட ஸ்தூபி அது. ஐந்து பெரிய பக்கவாட்டு சுவர்களும் உச்சியில் வட்டவடிமாக இணைக்கப்பட்டிருந்தன.





























ஒரு சுவரில் எகிப்து, சோவியத் ரஷ்யா நாடுகளின் அடையாள முத்திரை சின்னங்களோடு இரண்டு நாட்டு மொழிகளிலும் குறிப்பு எழுதப்பட்டிருந்தது. மற்ற சுவர்களில் எகிப்திய ஓவியங்கள் அழகாக வரையப்பட்டிருந்தன.




















நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்கள் ஓட்டுநர் இருவரும் பணிநேர காவலாளியிடம் பேசி மேலே சென்று பார்க்க அனுமதி வாங்கி வந்தனர். லிப்டின் மூலம் மேலே சென்று பார்க்கலாம் என்று கூற கிடைத்த வாய்ப்பை விடவேண்டாம் என உடனே ஒப்புக்கொண்டோம். சுவரின் கீழ்பகுதியில் சிறிய கதவுடன் இருப்பதே லிப்ட் ஆகும். சுவர் பெரியதாக இருப்பதால் பார்க்க சிறிதாக தெரிகிறது. பத்துபேர் நிற்கும் அளவு பெரிய லிப்ட்தான்.









சோவியத் ரஷ்யா மற்றும் எகிப்து நாடுகளின் அதிகாரபூர்வ அரசாங்க அடையாளச் சின்னங்கள்.











மேல்புற வட்டவடிவ அமைப்பு.











மேலிருந்து கீழே பார்த்த சில காட்சிகள்...
வாகனங்கள் நிறுத்துமிடம்











அணையின் நடுவே ஒரு அரங்கு











அணையின் தடுப்புச்சுவரும் அதன்மேல் அமைக்கப்பட்ட அழகான சாலையும்











ஸ்தூபிக்கு வரும் பாதை - மேலிருந்து ஒரு பார்வை
வித்தியாசமான கோணத்தில் மேற்புற அமைப்பு


நினைவுச்சின்னத்தின் நினைவாக ஒரு குழுப்படம்
வித்தியாசமான கோணத்தில் கீழ்ப்புற அமைப்பு


ஸ்தூபியின் மேல்புற வட்டவடிவ அமைப்பு
அணையும், அணை சார்ந்த இடங்களும் - ஸ்தூபியின் மேலிருந்து கீழே சில காட்சிகள்













( பயணமும் படங்களும் தொடரும்.... )