![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCGQ-_T4wbWko9tJ4AODizJmoj9AT66J-NZHWcYMto_cUVtyev-5koUGwSmWg0Lr04bJbow3XCkcc5hb4XMiwrkKPw-xWknOfh7P0tw05cj9W7_51wi27cbc8VEGZJkahZnwAT/s400/HappyNewYear.jpg)
Thursday, December 31, 2009
Saturday, December 26, 2009
’வலையுலக சுஜாதா’ - திரு.ஜவர்லால் அவர்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்.
திரு.ஜவர்லால் அவர்களது ‘இதயம் பேத்துகிறது’ வலைப்பூ தான் அது.ஆம் அப்படியே அந்த காலத்தில் பிரபல எழுத்தாளர் திரு.சுஜாதா எழுதிய படைப்புகளை படிப்பது போலவே குறும்பும், சுவாரசிய நடையும் கொண்ட வசீகரீக்கும் எழுத்துக்களால் வசியப்படுத்தினார். புகைப்படத்திலும் அச்சு அசலாக திரு.சுஜாதா போன்றே முகத்தோற்றம் என்பதால் தான் ஆரம்பத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியும்,குழப்பமும். தற்செயலாக படிக்க நேர்ந்த அவரது வலைப்பூவை அன்றுமுதல் தவறாமல் தொடர்ந்து படித்தும், பின்னூட்டம் இட்டும் வருகிறேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlfQ7_9pARd8dbCWxczvmb_MPJJE-PgkpxX12dggiAtbMUpB7ID6Ld5xDPoJ83_XPvwiQb8A6G4znSKj4dsWLe8RlG5YOtL9d4dff0-ksXIGultHnl5LooVNNt0Prxj-ctB60q/s400/nanri1.jpg)
பல நாள் இடைவெளிக்குப் பின் திரு.ஜவர்லால் அவர்களின் வலைப்பூவிற்கு சென்று அவரது ஜப்பான் பயண தொடர்பதிவைப் படித்தேன். முந்தைய பாகங்கள் மற்றும் படிக்காத பல பதிவுகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நான் எழுத ஆரம்பித்த உல்லாச பயணப்பதிவு நான்கு பதிவிற்கு மேல நகரமாட்டேன் என அடம்பிடிக்கிறது. அன்னாரோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்ற ஒரு அலுவல் சார்ந்த பயணத்தை அவருக்கே உரிய நகைச்சுவை நடையில் மிகவும் சிறப்பாக அழகான புகைப்படங்கள் மற்றும் தகவல்கKளுடன் சுவாரசியமாக பதிவிட்டு வருகிறார்.நான் பணிபுரிவதும் ஜப்பான் நிறுவனம் என்பதால் ஜப்பானிய மொழி சிறிது தெரியும் என்பதால் அவரை கலாய்த்து பின்னூட்டம் இட்டேன். அவரும் அதனை பெருந்தன்மையாக ஏற்று பதில் சொல்லி இருந்தார்.
வலையுலகம் மூலம் பழகிய பல நண்பர்களுடன் சாட்டிங் தொடர்பு உள்ளது. பெரும்பாலும் எல்லோரிடமும் பேசியும் இருக்கிறேன். சரி சாரிடமும் பேசி விடலாம் என்று முடிவு செய்து அவர் அலைபேசி எண் வேண்டி கடந்த வியாழன் தனிமடல் இட்டேன். தொடர்பு எண்ணை தெரியப்படுத்தி உடன் பதில் அனுப்பி இருந்தார். ஞாயிறு காலை இந்திய நேரம் காலை பத்து மணிக்கு பேசுவதாக பதில் அனுப்பிவிட்டு இரண்டு நாள்களாக மிகுந்த குறுகுறுப்போடு இருந்தேன். அவசர பயணம் கிளம்பியதால் அவரோ என் பதில் மடல் பார்க்கவில்லை என்பது எனக்கு தெரியாது.
ஞாயிறு காலை நான் அழைக்கும்போது பயணம் முடித்து திரும்பி கொண்டு இருந்தார். “யார்“ என்றவரிடம், “உங்கள் ரசிகன் ராஜா” என்றேன். தனியாக சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையில் கார் ஓட்டி சென்று கொண்டிருந்தவர் சாலை ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு கால் மணி நேரம் பேசினார். பல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். அவரது பல பதிவுகள் குறித்த தகவல்களை புள்ளி விவரமாக கூறியதில் மிக்க மகிழ்ச்சி அடைந்து உற்சாகமாகப் பேசினார். தொடர்ந்து பல சுவாரசிய பகிர்வுகளை பதிவுகளாக இட வேண்டும் என வேண்டி விடைபெறும் பொழுது அவருக்கு ஒரு விருது வழங்க விருப்பம் உள்ளதாக தெரிவித்தேன். “அப்படியா, என்ன சொல்லுங்கள்” என்றார். ‘வலையுலக சுஜாதா’ என்று என் மனமகிழ்வை விருதாக வழங்கி சிறப்பித்தேன்.
திரு.சுஜாதா அவர்களுக்கும்,திரு.ஜவர்லால் அவர்களுக்கும் நான் கண்ட ஒற்றுமைகள். இருவருமே பொறியியல் துறை சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் இருந்து பணி நிமித்தமாக பெங்களூரு சென்றவர்கள் என்பதால் பொருத்தமான விருது வழங்கியதாகவே நினைக்கிறேன்.
எங்களது அலைபேசி உரையாடல் குறித்த திரு.ஜவர்லால் அவர்கள் பதிவின் சுட்டி.
கடந்த ஜூலை 10ம் தேதி முதல் பதிவிட ஆரம்பித்த அவரது வலைப்பூ மிககுறுகிய காலத்தில் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டு சாதனை படைத்து உள்ளது. ஆம், 165 நாள்களுக்குள் 1,00,000 பார்வை என்பது மிகப்பெரும் சாதனை. சராசரியாக நாளொன்றுக்கு 600 வாசகர்கள் அவரது படைப்புகளை படித்து மகிழ்ச்சி கொள்கிறார்கள்.
பதிவிட வந்த முதல் மாதத்திலே சர்வதேச சிறந்த புதுமுக பதிவர் விருது பெற்றதும் , 10,000 பார்வைகளும் அவரது பல்சுவை பதிவுகளுக்கு நல்ல சான்றுகள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA1UmDRQwc5BQGsvEssCUvEd35fpk7guDBvz20lsM9bxbhQ-_xRb0TDAuxB2PFU1_3FLeUzz80UnUMA1zLrCs3QN37OX_6qBNs0L-R01FJaHfjCPs_ld5AG-I3LBuDZkOANm0P/s400/Nanri.jpg)
அன்னாரைப் போன்று என்னை பெரிதும் கவர்ந்த பதிவர்களை பற்றி தொடர்ந்து எழுதலாம் எனவும் உள்ளேன்.
Tuesday, December 22, 2009
குழந்தை கை பொம்மை
உன்னைக் கண்டு
பிழைத்த எனக்கு
கள்ளமில்லா
பிள்ளைப்பேய்
கண்டென்ன பயம்.
நீயொரு பொம்மை
நானொரு பொம்மை
கலங்காதே கண்ணெ
என்னருமை பெண்ணே
காலக்குழந்தை
இணைத்திடும் நம்மை.
ஏதுமறியா குழந்தை
போல் இருந்தாய்
காதலிக்கும் போது...
ஏதும் செய்யமுடியா
பொம்மை ஆக்கினாய்
என்னை கல்யாணத்திற்கு பின் ....
Wednesday, December 16, 2009
ஆஞ்சநேயர் ஜெயந்தியும், மார்கழி மாதப்பிறப்பும்...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitPvseh2SNnC6o8xpdxOQtZ2K5Mv1VModb4qrXWWF_R4UzsGffx9f69Ddb5ah4Pzd6TRauKWfhxJazvc6dL5Q4sRUslpCKJOlXAFFJyXev7LISjyDazplUCv5CKhUxIByQv-bk/s400/Aanjr.bmp)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqXcUGO4d11aiqAuPOhdxXI8oSYtvwB8FI4xRLTMydWGs9vBMmdZCTv7sYWoTVuxUI0MrWwjoTN_6DEwX9rBUiYIdZGMmu5aWXfavvg7r9pQFQDrbJwSsup9PLN_I5-QMt1ZVQ/s400/Margali.bmp)
Tuesday, December 01, 2009
Friday, November 27, 2009
இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Thursday, November 19, 2009
பிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ. நெடுமாறன் கண்டனம்
பிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ. நெடுமாறன் கண்டனம் (நீண்ட அறிக்கை) .
விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.அவ்வறிக்கையில், ‘’விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையில்லாத குற்றச்சாட்டுக்களைக் கூறி முதலமைச்சர் கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார். ஆனால் அம்மாநாட்டில் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகுமரன், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பத்மநாபா, பிளாட் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீது வீண்பழியைச் சுமத்தியிருக்கிறார்.
அந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் என்ற முறையில் இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாமல் புலிகள் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தையின் போது பிரபாகரன் தாமாகவே வெளியேறினார் என்று ரணில் கூறியுள்ள பொய்யான தகவலையே தனக்கு ஆதாரமாக கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் ஆறுகட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் இலங்கை அரசு 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழுத் திட்டத்தை அறிவித்தது. இதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படவில்லை. இந்த அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசிடமே இருக்கும். இத்திட்டத்தை பரிசீலனை செய்து ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டம் ஒன்றை அளிக்க ஒப்புக்கொண்டனர்.அதற்காக உலகெங்கிலுமுள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் பிறநாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்பின்னரே மாற்றுத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டுமென பிரபாகரன் கருதினார்.
அதற்கிணங்க புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழு உலக நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஈழத்தமிழர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
பிறகு டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் உள்ள கூட்டாட்சி முறைப்பற்றி நேரில் கண்டறிந்தது. அதன் பிறகு உருவாக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று நார்வே பிரதிநிதிகள் மூலமாக சிங்கள அரசுக்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார். இந்த உண்மையை ரணில் அடியோடு மறைத்து கூறிய பொய்யையே கருணாநிதி திரும்பவும் கூறியுள்ளார். புலிகள் அளித்த மாற்றுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிங்கள அரசு ஏற்க மறுத்த காரணத்தினால்தான் பேச்சுவார்த்தை முறிந்தது.
பேச்சுவார்த்தை தொடங்கியபோதே தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக கூட்டாட்சி முறையை பரிசீலிக்க விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டது மிகப்பெரிய விட்டுக்கொடுத்தல் ஆகும். ஆனால் சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையிலிருந்து விலகி நிற்க மறுத்ததுதான் பேச்சுவார்த்தை முறிவுக்கு காரணமே தவிர பிரபாகரன் காரணம் அல்ல.
2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். டோக்கியோவில் ஜப்பானிய அரசு முன் நின்று நடத்திய சக தலைமை நாடுகளின் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதால் விடுதலைப்புலிகள் அம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. அழைப்பில்லாத மாநாட்டில் புலிகள் கலந்துகொள்ளவில்லை என்று கூறுவதைப்போன்ற அறியாமை வேறு இருக்க முடியாது.
பாங்காக், டோக்கியோ, பெர்லின், ஒஸ்லோ ஆகிய நான்கு இடங்களில் நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆனால் இரண்டாம் முறையாக டோக்கியாவில் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தைக்கு புலிகளை அழைக்காதது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தவறை மூடி மறைத்து ரணில் கூறியவற்றையே கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளை அவதூறு செய்வதாகும்.
1989ஆம் ஆண்டில் ராசீவ் காந்தி கருணாநிதியையும் மாறனையும் அழைத்துப் பேசி பிரபாகரனுடன் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசி முடிவு காண வழிகாணுங்கள் என்று கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறார். அதற்கிணங்க இவர் செய்தது என்ன? இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியதற்காக வைகோ அவர்கள் மீது அடாத பழியை இவர் சுமத்தினார். புலிகள் உதவியோடு தன்னைக் கொலை செய்யச் சதி நடைபெறுவதாகவும் புலம்பினார். இத்தகையவரா அப்பிரச்சினை தீருவதற்கு வழிகாணுபவர்?
பிரதமராக வி.பி.சிங் இருக்கும்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கேற்ப இந்திய அரசு நடந்துகொள்ளும் என்று கூறி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது இவர் செய்தது என்ன?
ஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளான புலிகளுடன் மற்ற துரோக இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு இவர் செய்த முயற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டு அதைச் சீர்குலைத்தவர் கருணாநிதியே ஆவார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதற்கு புலிகள் தவறிவிட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டாகும். போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும் பிரபாகரனும் கையெழுத்திட்டனர். ஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் பிரதமராக இருந்த ரணில் அந்த உடன்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார். இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்தார். உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தார். புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த சதிச் செய்தார். இந்தக் காரணங்களினால் அவரை தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர். தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை.
திரும்பத் திரும்பச் சகோதரச் சண்டை என்னும் புளித்துப்போனப் பொய்யையே கருணாநிதி கூறிவருகிறார். போராளி இயக்கங்களுக்குள் மோதலைத் திட்டமிட்டு உருவாக்கியது இந்திய உளவுத் துறையே என்ற உண்மையை மறைப்பதற்கு அவர் இவ்வாறு செய்கிறார். அவருடைய சொந்தக் கட்சியில் முக்கியமான தலைவர்கள் பலர் உட்கட்சி சண்டையில் படுகொலை செய்யப்பட்டதை தடுக்க முடியாத இவர் சகோதரச் சண்டையைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்.
இலங்கைப் போரில் சிங்களப் படைக்கு இந்தியா இராணுவ ரீதியாக அளித்த உதவிகளை அறிந்திருந்தும் அதைத் தடுத்து நிறுத்த முன்வராமல் மறைப்பதற்கு துணைநின்ற துரோகத்தை மறைத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை. உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கப் போவதுமில்லை’’என்று தெரிவித்துள்ளார்.
இணைய மடல் மூலம் இச்செய்தி அறிக்கையை அனுப்பிய அமீரக நண்பர் அமிர்தா பிரின்ஸ் அவர்களுக்கு நன்றி.
Tuesday, November 17, 2009
உயிர் காப்பான் தோழன்
தேனி : தேனி அருகே நண்பனை கடித்த பாம்பை, உயிரோடு பிடித்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு ஓடிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்த சுகுமார் மகன் குமார்(18), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகுராஜா(21). இருவரும் நண்பர்கள். குமார் எங்கு சென்றாலும் அழகுராஜாவை அழைத்துக் கொண்டு தான் செல்வாராம். நேற்று மதியம் நண்பர்கள் இருவரும் அரண்மனைபுதூர் பாலம் அருகே வைகை ஆற்றில் குளிக்கச்சென்றனர். குளித்து விட்டு கரைக்கு வந்தபோது குமாரை, கல் இடுக்கிற்குள் இருந்த ஆறு அடி நீள நல்லபாம்பு கடித்தது. நண்பன் துடித்ததை பார்த்த அழகுராஜா பாம்பை பயமின்றி பிடித்தார். குமாரை ஆட்டோவில் 6 கி.மீ. தூரத்தில் உள்ள தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாம்புடன் ஆஸ்பத்திரி நோக்கி அழகுராஜா ஓடினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv_9uRPS42dbxLhsUrtydZOsxV7sREFMohr8BIOeaGFB6bFD-4GMlygK1Ky9suwpe1JL09xhYWCZ6VzR2bptq1z44h-kcq-_A2tcpmQDAd9HE5wpw4wHdC2nqeyk1jIiqcX40T/s400/F.jpg)
இரண்டு கி.மீ. தூரம் ஓடிய பின் அங்கு வந்த இன்னொரு ஆட்டோவில் ஏறி ஆஸ்பத்திரியை அடைந்தார். அங்கிருந்த நோயாளிகளும், நர்சுகளும் பயத்தில் விலகி ஓடினர். குமாரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். டாக்டர்களிடம் பாம்பை காட்டியபின் அழகுராஜா அதை அடித்துக் கொன்றார்.
நண்பனை காப்பாற்றும் வேகத்தில் இருந்த அழகுராஜா, பாம்பை கழுத்தை பிடித்து தூக்கி சென்றதில் பாம்பின் பல் அவர் கையிலும் பதிந்ததை கூட பார்க்கவில்லை. இதை பார்த்த டாக்டர்கள் அவருக்கும் சிகிச்சை அளித்தனர். அழகுராஜா கூறுகையில்; ""நண்பனை பாம்பு கடித்தவிட்டதே என்ற ஆத்திரத்தில், செய்வதறியாது பாம்பை பிடித்துவிட்டேன். கடித்த பாம்பை காட்டினால் தான் அதற்கு தகுந்தாற்போல் டாக்டர் சிகிச்சையளிக்கமுடியும் என்பதால், நண்பனை அந்த வழியே வந்த ஆட்டோவில் ஏற்றிவிட்டு விட்டு, பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்தேன். அந்த நேரத்தில் எனக்கு எப்படித்தான் அந்த தைரியம் வந்தது என தெரியவில்லை' என்றார்.
செய்தியின் சுட்டி http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=82 அளித்த அமீரக நண்பர் ஆசிர் தேவதாசனுக்கு நன்றி.
Wednesday, November 11, 2009
Wednesday, November 04, 2009
என்னவளே....
Saturday, October 31, 2009
ஏதோ நினைவுகள்...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaWpyhIRN7ZBvZKEMyOLzhm-q-BuQ8M7w67JWTvQTms3iHErUmbBaOipuStFN4ESbFuk4X0bDsPGKTSeh6Ic9v5YBSAJoc-X815MzMsQHD2wcZdR9Xrwvp2PyF_Iyoh6jlO7Dc/s400/iya.jpg)
கார்மேகம் கலைந்தாலும்
Sunday, October 25, 2009
எகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 5 – அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA_WrSXTG6UJjR8aSE9_LpAbsxddCgKK7y9aKjy6aQgVPO2nIEswqRoPwzYveLGr0wOXIdzelpDjWdi5jz8GoTDBrhtFd3ZLlE9E9Fd0OTYctbrLmnfoGQCMCo1xK0kGbRB2q-/s400/2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYKqWOSTlyamVkL30a2rL3XRjquPY2IN2sXUyptjF4Bv27-NARhAs1lHxX5JCl_yXIesMXbiqi9YdrBrQCLBTA7rFBEsk1Efl8uSP2lhI49m8M3NU6R-X52CLeN1l6yYyE5or7/s400/0.jpg)
Friday, October 23, 2009
Wednesday, October 21, 2009
பணிப்பளு...
Sunday, October 18, 2009
தீபாவளி சிறப்பு விருந்து...
தீபாவளிக்கு சிறப்பு விருந்துன்னு முடிவு பண்ணி தடபுடலா ஏற்பாடு செஞ்சு பக்காவா பார்ட்டி கொண்டாடியாச்சு.உங்கள் பார்வைக்கு சில படங்கள்.
இப்படித்தான் முதல்ல டேபிள் அலங்காரம்..
கறி, மீன், பார்பிக்யூ ரெடியாகி...
மற்ற சைவ, அசைவ உணவு வகைகளும் டேபிளுக்கு வர...
எல்லோரும் களத்துல குதிச்சு....
இளைஞர்கள் ஒரு பக்கம்....
பெரியவர்கள் ஒரு பக்கமா....
அடிச்சு ஆடி அனைத்தையும் காலி பண்ணி தீபாவளியை கொண்டாடி முடிச்சோம்.
எங்களது இல்லம் இருப்பது அபார்ட்மெண்டின் கடைசி 16வது மாடி. எங்களது அபார்ட்மெண்ட்,அழகிய கடற்கரைச்சாலை அடுத்து கடல் என்ற அருமையான அமைப்பு. எந்த அறையில் இருந்து பார்த்தாலும் கடல்தான். இனிமையான அலையோசையோடு எப்போதும் குளிர்ந்த காற்று.
எங்கள் இல்லத்திலிருந்து சில இனிய காட்சிகள்.
அலை கடலும், அழகான சாலையும்.....
நீச்சல்குளம், சாலை, கடல்..
கேமரா மூலம் சில ஒளி விளையாட்டுகள்...
இன்னுமொரு விருது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDZkAGDO3oPUxRVLHfJ1X9C4hv9WYgAzhkdfXxYqZkRgEj3lgGYhK8SeKeYKB_KgqO6wy8DnCw0R0gtUIJivwrBC72MustUulQ2pB1HwfVF7EY2MjvO-vrhXtPHsPrO1WCMPEC/s400/mail.jpg)
Saturday, October 17, 2009
தீபா”வலி”
அமெரிக்க அதிபர்
மலேசிய அமைச்சர்
நாட்டின் பிரதமர்
இன்னும் பல
தலைவரெல்லாம்
தொலைக்காட்சியில்
தீபாவளி வாழ்த்து
கூறினர்
இந்திய மக்களுக்கு.....
நானும் வாழ்த்து
கூறினேன்
தொலைபேசியில்
என் இனிய
குடும்ப மக்களுக்கு.....
--------------------------------------
தீபாவளிக்கு தீபாவளி
தேங்காய் பர்பி
செய்வார் என் அம்மா.
பள்ளிக்கு
எடுத்துச்சென்று
பகிர்ந்துண்ணுவேன்
பசங்களோடு..
படிப்பு முடித்து
பலநாடுகள்
சென்றேன்
பணிக்காக..
தீபாவளியுமில்லை...
தேங்காய் பர்பியுமில்லை...
----------------------------------------
எல்லா கதவுகளையும்
இழுத்தடைத்து
இருட்டறைக்குள்
இருந்தாலும்
வீல் வீல் என
வீறிட்டு அழுகிறது
வெடிச்சத்தத்திற்கு
பயந்த குழந்தை...
-------------------------------------