![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaWpyhIRN7ZBvZKEMyOLzhm-q-BuQ8M7w67JWTvQTms3iHErUmbBaOipuStFN4ESbFuk4X0bDsPGKTSeh6Ic9v5YBSAJoc-X815MzMsQHD2wcZdR9Xrwvp2PyF_Iyoh6jlO7Dc/s400/iya.jpg)
அடர்மழை நாளொன்றில்
அலுப்போடும்
கொஞ்சம் சலிப்போடும்
ஒரு பயணம்....
மழைநீர் தள்ளும்
வைப்பர் போல
மனநினைவுகள்
தள்ள முயல்கிறேன்...
இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
விரட்டும் மனமோகம்....
கார்மேகம் கலைந்தாலும்
நான் கண்ட
கனவுகள் கலையாது....
அடாது பெய்யும்
மழைபோல் விடாது
தொடரும் நினைவுகள்....
மழைநீர் வடிந்தாலும்
என் மனநினைவுகள்
வடியாது...
வெள்ளநீர்
விலகினாலும்
விலகாது
வீண் நினைவுகள்...
என்னோட இந்த கவிதை தனிமைக்கொடுமையில் விளைந்த சோகத்தின் வெளிப்பாடுன்னா கவிதாக்கா கவிதை சுகராக கீதம். இனிமையான எதிர்க்கவிதை புனைந்த கவிதாக்காவிற்கு வாழ்த்துக்கள்.