Tuesday, November 15, 2011

பால் காய்ச்சும்.... பதிவர் சந்திப்பும்...

திடீரென முடிவு செய்தாலும் திருப்தியாக முடிந்த புதுமனை புகுவிழாவின் சில  புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

விழா தினத்தன்று காலை வண்ண ஒளி விளக்குகள், அலங்காரப் பந்தல், பூ மாலை மற்றும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த வீடு



கணபதி ஹோமம் ஏற்பாடுகள்



பூஜை முடிந்து ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம்


புதுப்பானையில்  தேங்காய் உடைப்பு


புதுப்பானையில் பால் விடும்  ராஜாவும், பூஜாவும்


வாழ்வெல்லாம் வளம் பொங்க வாழ்த்தி பால் விடும் எனது தாயும், தந்தையும்


 உற்றார்,உறவினர்களும், நண்பர்களும்  விழாவிற்கு வருகை தந்து வாழ்த்த மகிழ்ச்சியுடன்  இனிதே நிறைவடைந்தது.


விழாவிற்கு வரமுடியாத பதிவுலக நண்பர்கள் நேரில் சந்திக்க  வேண்டுமென்று  திரு.அ.ரா.சங்கரலிங்கம் மூலம் அன்பு அழைப்பு விடுக்க துணைவியாரோடு சென்று அனைவரையும் சந்தித்து வந்தேன்.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஜன்னத்தில் அருமையான சந்திப்பு.அன்றுதான் முதல்முறை சந்தித்தாலும் பலநாள் பிரிந்த உறவுகளை சந்தித்தது போன்ற உணர்வு. இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.

சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பல துறைகளில் பிரகாசிப்பவர்கள் என்றாலும் நேரம் ஒதுக்கி சந்திப்பிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.

சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அன்பு உள்ளங்கள்
திரு.ராமலிங்கம்
திரு. காளிமுத்து
ஹோட்டல் ஜன்னத் அதிபர் திரு.திவான்

நான், எனது துணைவி

ஆக மொத்தம் பன்னிரெண்டு பேர்.


திரு.ராமலிங்கம், உயர்திரு. சகாதேவன் ஐயா, திரு.ஜோதிராஜ்


அன்பும்,பண்பும், பாசமும், பணிவும் நிறைந்த திரு.ஞானேந்திரன்


மேலதிகப் படங்களுக்கும், தகவல்களுக்கும் திரு.அ.ரா.சங்கரலிங்கம் மற்றும் திரு.கே.ஆர்.விஜயன்  இருவர் பதிவுகளையும் பாருங்கள்.

நன்றி. வணக்கம்.