Monday, January 26, 2015

கன்னிப்பொறி...




பள்ளி
சென்று
படித்ததெலாம்
மறந்து
போனது…


கள்ளி
உன்
கடைக்கண்
பார்வை
பட்டவுடன்…..




கணிப்பொறியில் 
கண்டேன் 
விடை 
பல
கணக்கு… 


கன்னி உன் 
கண்பொறி
தடை 
தாண்ட 
மட்டும் 
ஏன் 
இத்தனை 
பிணக்கு….


Monday, January 19, 2015

மீண்டும்.....


அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பத்தாண்டுகளுக்கு மேல் பதிவுலகில் இருந்தாலும் பணிப்பளுவின் காரணமாக தொடர்ச்சியாக எழுதுவதும், பதிவுத்தளத்தில் இயங்குவதும் இயலாததாகவே இருக்கிறது. பொதுவாக கட்டுமான திட்டப்பணிகளில் அன்றாடப்பணிகளே திட்டமிட முடியாதவை என்னும் பொழுது எழுதுவதற்கு என தனியாக நேரம் ஒதுக்குவது என்பது மிகமிகக் கடினமானதே. அதிலும் அயல்நாட்டுப்பணியில் ஓய்வு கிடைக்கும்போது ஊருக்குச் செல்வதைதான் மனம் விரும்புகிறதே தவிர உட்கார்ந்து எழுத தோன்றுவதே இல்லை.




எழுதத்தான் முடியவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போது மற்ற நண்பர்கள் பதிவுகளை படிப்பதும்,பகிர்வதும், பின்னூட்டக் கருத்துக்கள் இடுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவே எனது எழுத்தார்வம்  நீர்த்துப்போகாமல் நிலைத்து நிற்க முக்கிய காரணமாகவும், மூலாதாரமாகவும் இருக்கிறது. 

எல்லாம் வல்ல இறையருளின் அருளோடும், தமிழ்த்தாயின் துணையோடும்,   இந்த ஆண்டில் மீண்டும் எனது அனுபவங்களை பதிவுகளாக ஏற்ற எண்ணி எழுத்து ஏர் பிடிக்க உள்ளேன் தங்கள் அன்போடும், ஆதரவோடும்…..

நன்றி. வணக்கம்.