Thursday, September 10, 2009

காதல் போட்டி


கடல்
ரயில்
யானை
எத்தனை முறை
பார்த்தாலும்
சலிக்காது
என்றான்
ஒரு
பெருங்கவிஞன்.

நல்லவேளை.
அவன் உன்னைப்
பார்க்கவில்லை.

பார்த்திருந்தால்
அந்த பட்டியலில்
உன் பெயரையும்
சேர்த்து
உன்னுடனான
காதல் போட்டியில்
என்னோடு மல்லுக்கட்ட
இன்னும் பலபேரை
இழுத்து விட்டிருப்பான்.

13 comments:

Anbu said...

வோல்ட் மங்க்
வோட்கா
மானிட்டர்
மாவா
M.C
VSOP
எத்தனை முறை
அடித்தாலும்
சலிக்காது
என்றான்
ஒரு
பெருங்குடிகாரன்

நல்லவேளை.
அவன் உன்னைப்
பார்க்கவில்லை.

பார்த்திருந்தால்
அந்த பட்டியலில்
உன் பெயரையும்
சேர்த்து
உன்னுடனான
சரக்கு போட்டியில்
என்னோடு மல்லுக்கட்ட
இன்னும் பலபேரை
இழுத்து விட்டிருப்பான்.

Anbu said...

கவிதை நல்லா இருக்கு அண்ணா

துபாய் ராஜா said...

// Anbu said...
வோல்ட் மங்க்
வோட்கா
மானிட்டர்
மாவா
M.C
VSOP
எத்தனை முறை
அடித்தாலும்
சலிக்காது
என்றான்
ஒரு
பெருங்குடிகாரன்

நல்லவேளை.
அவன் உன்னைப்
பார்க்கவில்லை.

பார்த்திருந்தால்
அந்த பட்டியலில்
உன் பெயரையும்
சேர்த்து
உன்னுடனான
சரக்கு போட்டியில்
என்னோடு மல்லுக்கட்ட
இன்னும் பலபேரை
இழுத்து விட்டிருப்பான்.//

அன்புத்தம்பி,உங்க எதிர்கவிதைக்கு 'நாட்டுச்சாராயம்' அல்லது 'பனங்கள்'ளூன்னு பேரு வச்சா பொருத்தமா இருக்கும். :))

ம்ம். ஏகப்பட்ட சரக்கு பேரு தெரிஞ்சிருக்குது.நான் கூட இவ்வளவுநாள் உங்களை
'குழந்தை'ன்னுல நினைச்சுகிட்டு இருந்தேன்.... :))

Raju said...

நல்லா இருக்கு...!
:-)

ஐந்திணை said...

பின்னூட்டம் போட்ட அன்பு கவிதை நல்லாயிருக்கு ஹா ஹா ஹா

Thamira said...

மொக்கை கவுஜை..

லோகு said...

ம்ம்ம்ம்ம்... நடத்துங்க.. நடத்துங்க..

அ. நம்பி said...

//பார்த்திருந்தால்
அந்த பட்டியலில்
உன் பெயரையும்
சேர்த்து
உன்னுடனான
காதல் போட்டியில்
என்னோடு மல்லுக்கட்ட
இன்னும் பலபேரை
இழுத்து விட்டிருப்பான்.//

அப்படி என்றால் இப்போது போட்டி இல்லை என்று நினைக்கிறேன்; வாழ்த்துகள்; தொடர்ந்து நடத்துங்கள்.

தங்கராசு நாகேந்திரன் said...

//ஐந்திணை said...
பின்னூட்டம் போட்ட அன்பு கவிதை நல்லாயிருக்கு ஹா ஹா ஹா//

ரீபிட்ட்ட்டு

//ஆதிமூலகிருஷ்ணன் said...
மொக்கை கவுஜை..//
இவரு போட்ட பார்வதி நாச்சியார் மொக்கைய விடவா?.....

கவிதை நல்லா இருக்கு ராஜா
தொடருங்கள்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Anbu + Ur's good!

Jawahar said...

ராஜா, உங்கள் பெருமூச்சில் இத்தனை சிறப்பான கவிதை வருமென்றால் சுவாசத்துக்கு பதில் பெருமூச்சே எப்போதும் விடலாம்!

http://kgjawarlal.wordpress.com

ஹேமா said...

ராஜா கலக்குங்க.கவிதையும் அதுக்கு எதிர்க்கவிதையும் சூப்பர்.

அன்புடன் நான் said...

//உன்னுடனான

காதல் போட்டியில்

என்னோடு மல்லுக்கட்ட

இன்னும் பலபேரை

இழுத்து விட்டிருப்பான்//
காதலில் விழுந்த பழைய நினைவா துபாய் ராசா?.