Friday, August 28, 2009

நட்பிற்கு நன்றிகளும்,முதல் விருதும்.......

நல்லதொரு தகவல். நேற்றைய அறுவை சிகிச்சைக்குப் பின் மயக்கத்தில் இருந்த நண்பர் திரு.செந்தில் நாதன் தற்போது கண்விழித்து விட்டார். அவரது மனைவி சென்று பார்த்துள்ளார். உலகம் முழுதும் இருந்து தங்கள் அன்பையும், வாழ்த்துக்களையும், பிரார்தனைகளையும் தெரிவித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மாற்று இதயம் கிடைத்ததும் இதய மாற்று அறுவை சிகிச்சையையும் இதேபோல் வெற்றிகரமாக நடந்து திரு.செந்தில் நாதன் முழுமையாக குணமடைந்திட உங்கள் உதவிகளையும், அன்பையும், வேண்டுதல்களையும் தொடர்ந்திடுங்கள்.

இதுவரை எல்லாம் இனிதாக நடந்தது.இனி நடப்பவையும் எளிதாக நடைபெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.

இன்னுமொரு இனிய செய்தி: நண்பர் திரு.கடையம் ஆனந்த் அன்புடன் சுவையான பதிவர் விருது (Scrumptious Blog Award) கொடுத்துள்ளார்.

வலையுலகம் வந்து வாங்கிய முதல் விருது என்பதால் மகிழ்ச்சியையும், இன்னும் சுவையாக பலபதிவுகள் இடவேண்டும் என்ற ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. நன்றி திரு.ஆனந்த்.

விருது விதிகளின்படி எனக்கு கிடைத்துள்ள இந்த விருதினை இன்னும் பத்து பேருக்கு கொடுத்து சிறப்பிக்கவேண்டுமாம். நான் விருது கொடுக்க விரும்பும் நண்பர்கள்.

1. 'காதல் மழை' லோகு
2. டக்ளஸ்
3. ஜாக்கி சேகர்
4. ரசிகை
5. விக்னேஷ்வரி
6. சந்தோஷ்
7. இரும்புத்திரை அரவிந்த்
8. கானா பிரபா
9. சி.கருணாகரசு
10. திரு.கலாப்ரியா

மற்றும் பல நண்பர்களுக்கும் கொடுக்க ஆசைதான். அடுத்து வரும் விருதுகளை விடுபட்டவருக்கு வழங்கி சிறப்பிப்பேன்.

நன்றி. வணக்கம்.



9 comments:

லோகு said...

செந்தில் நாதன் முற்றிலும் குணமடைய வேண்டுகிறேன்..
*******
நன்றி..நன்றி.. நன்றி.. எல்லா புகழும் இறைவனுக்கே..

ஆனா scrupmptious அப்படின்னா என்ன அர்த்தம்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்..

சி.கருணாகரசு said...

தங்களின் (செந்தில் நாதன்) பதிவுக்கு நன்றி.

தங்களின் விருதுக்கு மிக்க நன்றி. இதுதான் முதல் விருது...மகிழ்சி!

விக்னேஷ்வரி said...

செந்தில்நாதன் விரைவில் பூரண நலமடைய தொடர்ந்து பிரார்த்திக்கிறேன்.

தங்கள் அன்பிற்கும், விருதிற்கும் நன்றி.

Raju said...

விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி அண்ணே..!
:)

இரசிகை said...

2 gud news.......

senthil naathan sir kku "get well soon wishes....."
iraivanukku nantri..):

yenakku intha award ithuthaan 1st time.koduththatharkku mikka nantri...

niraya yezhuthungal........
vazhththukkal..!!

Jackiesekar said...

நன்றி துபாய் ராஜா ...

நீங்கள் குறிப்பிட்டது போல் செந்தில் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டு்கின்றேன்...

நீங்கள் என் மீது வைத்திருக்கும் பாசத்திற்க்கும் புரிதலுக்கும் என் நன்றிகள்

அன்புடன்
ஜாக்கிசேகர்

கானா பிரபா said...

தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ராஜா, இன்று போல் என்றும் இருப்போம்.

செந்தில் நாதன் விரைவில் பழைய தெம்போடு வருவார்.

இரும்புத்திரை said...

எனக்கு விருதா ? நன்றி நன்றி

சிங்கைநாதன் பதிவு எழுதுவார் நாம பின்னூட்டம் போடுறோம்.

சந்தனமுல்லை said...

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது - பதிவர்களால் சாத்தியப்பட்ட இந்நிகழ்வு!

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள், தங்களுக்கும் !! :-)