Thursday, August 27, 2009

செந்தில்,செந்தில்........

நண்பர் பதிவர் செந்தில்நாதனுக்கு இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடந்து வரும் VAD Fixing அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இணையப்பதிவர் அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம்.
நட்பின்
இதயம் திருந்த
இதயம் திறந்து
இதயம் நிறைந்த
இறையை
இரந்துவோம்.

--------------------------------

இரத்தமும் சதையும்
கொண்டது
மற்றவர் இதயம்.
இணையநட்பின் கதையை
சொல்லிடும்
உங்கள் இதயம்.

----------------------------------

எல்லோர் இதயமும்
‘லப் டப்’ ‘லப் டப்’
என்றே துடிக்கும்.
இணையத்தமிழ்பதிவர்
இதயமெல்லாம் இன்று
‘செந்தில்’ ‘செந்தில்’
என்றே துடிக்கும்.

4 comments:

அ. நம்பி said...

//இணையத் தமிழ்பதிவர் இதயமெல்லாம் இன்று
‘செந்தில்’ ‘செந்தில்’என்றே துடிக்கும்.//

உண்மை; மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

Anonymous said...

செந்தில்நாதன் நலம் பெற பிரார்த்தனைகள்

சந்தனமுல்லை said...

எனது பிரார்த்தனைகளும்!

:-) கவிதையை ரசித்தேன்!

விக்னேஷ்வரி said...

பிரார்த்திக்கிறேன்.