Showing posts with label கவிதை/நட்பு/சமூகம். Show all posts
Showing posts with label கவிதை/நட்பு/சமூகம். Show all posts

Wednesday, December 14, 2011

நண்பனே… என் நண்பனே…



உலகப்பந்தெங்கும்
உருண்டு  கொண்டிருந்தாலும்
கண்டம் விட்டு பல கண்டம்
பறந்து கொண்டிருந்தாலும்
ஏற்றம் இறக்கம்
எத்தனை நான் கண்டாலும்...

என் நண்பனே….

வாழ்வின்
பல தருணங்களில்
நீ என்னை
வாழ்த்தும் போதெல்லாம்
வருத்தப்படவைக்கிறாய்...

நான் உன்னை எப்போதும்
வாழ்த்தியதில்லையென….


சூழ்நிலைகள் என்னை
சுற்ற விட்டிருக்கலாம்...
சுகதுக்கங்களில் நான்
சுழன்றிருக்கலாம்…

அல்லது

என் நண்பனே….

சுத்தமாக உன்னை 
நான் மறந்து கூட
போயிருக்கலாம்….


எது எப்படி ஆனாலும்
என் வாழ்வில் வந்த
ஓராயிரம் உறவுகளில்
ஒன்றாய்
உன்னை நான்
நினைத்திருந்தாலும்….


நண்பனே… என் நண்பனே…

உன் உடலொட்டிய
உயிராய்தான்
என்னை நினைக்கிறாய்…
உணர்வால் நனைக்கிறாய்…

Tuesday, February 02, 2010

இனி எல்லாம் சுகமே....


கனவுகள் பல நான் கண்டேன். அது தினம் தினம் கலைந்திட கண்டேன்.

இருட்டினில் எழுதினேன் என் சோகம். அதை யாரும் கண்டிடக்கூடாது என்றொரு தாகம்.

மணிக்கொரு ஆசையை நான் வளர்த்தேன். அவை நொடிக்கொன்றாய் உடைந்ததை அறிந்தே வாழ்ந்தேன்.

விட்டில்பூச்சிக்கு ஒளியின் மேல் ஆசை. கேட்கும் வழி இழந்த செவிக்கு ஒலியின் மேல் ஆசை.

கேட்டு கேட்டு ஓய்ந்து விட்டன என் காதுகள். இனி கேட்கவே கேட்காதோ என நெஞ்சுக்குள் கதறல்கள்.

அறிவியல் ஆயிரம் கண்டுபிடித்தது என கூறியது பல குரல்கள். என் வலி தீர வழி கண்டிருக்குமோ என மனதில் பல நாள் குமுறல்கள்.

நண்பர்கள் செய்யும் கேலியையெல்லாம் கேட்டு அதை எதிர்கிண்டல் செய்யும் நாள்தான் எனக்கில்லையோ என ஏங்கிடும் ஏங்கிடும் என் மனது. தினம் தூங்கிடும் தூங்கிடும் கண்கள் கனத்து.

நெஞ்சோடு அமைதி கொண்டேன் நான் இன்று. இறுதிமுடிவிற்கு வருகின்றது என் சோகம் என்று.

விடிகின்ற விடியல் எனக்காகத்தான். இனி எப்போதும் இந்த காதுகளில் இசைமழைதான்.

------------------------------------------

உடன் பணிபுரியும் அன்பு நண்பர் பாஸ்கர் எழுதிய கவிதை இது. நண்பர் கலைரசனை மிக்கவர். புகைப்படங்கள் எடுப்பதில் மிக்க ஆர்வம் கொண்டவர். எதிர்பாராத விபத்தில் செவித்திறன் குறைந்தமையால் பெரும் அவதிப்பட்டவர் சென்ற வாரம் இங்கு எகிப்திலே நவீன லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நான்கு நாட்கள் ஓய்வில் வீட்டில் தனியாக இருக்கும்போது எழுதிய கவிதை. என்னை மிகவும் பாதித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நண்பர் சீக்கிரம் நலம் பெற எல்லாம்வல்ல இறைவன் அருள்வானாக.

Thursday, August 27, 2009

செந்தில்,செந்தில்........

நண்பர் பதிவர் செந்தில்நாதனுக்கு இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடந்து வரும் VAD Fixing அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இணையப்பதிவர் அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம்.
நட்பின்
இதயம் திருந்த
இதயம் திறந்து
இதயம் நிறைந்த
இறையை
இரந்துவோம்.

--------------------------------

இரத்தமும் சதையும்
கொண்டது
மற்றவர் இதயம்.
இணையநட்பின் கதையை
சொல்லிடும்
உங்கள் இதயம்.

----------------------------------

எல்லோர் இதயமும்
‘லப் டப்’ ‘லப் டப்’
என்றே துடிக்கும்.
இணையத்தமிழ்பதிவர்
இதயமெல்லாம் இன்று
‘செந்தில்’ ‘செந்தில்’
என்றே துடிக்கும்.