Wednesday, December 14, 2011
நண்பனே… என் நண்பனே…
Tuesday, February 02, 2010
இனி எல்லாம் சுகமே....

இருட்டினில் எழுதினேன் என் சோகம். அதை யாரும் கண்டிடக்கூடாது என்றொரு தாகம்.
மணிக்கொரு ஆசையை நான் வளர்த்தேன். அவை நொடிக்கொன்றாய் உடைந்ததை அறிந்தே வாழ்ந்தேன்.
விட்டில்பூச்சிக்கு ஒளியின் மேல் ஆசை. கேட்கும் வழி இழந்த செவிக்கு ஒலியின் மேல் ஆசை.
கேட்டு கேட்டு ஓய்ந்து விட்டன என் காதுகள். இனி கேட்கவே கேட்காதோ என நெஞ்சுக்குள் கதறல்கள்.
அறிவியல் ஆயிரம் கண்டுபிடித்தது என கூறியது பல குரல்கள். என் வலி தீர வழி கண்டிருக்குமோ என மனதில் பல நாள் குமுறல்கள்.
நண்பர்கள் செய்யும் கேலியையெல்லாம் கேட்டு அதை எதிர்கிண்டல் செய்யும் நாள்தான் எனக்கில்லையோ என ஏங்கிடும் ஏங்கிடும் என் மனது. தினம் தூங்கிடும் தூங்கிடும் கண்கள் கனத்து.
நெஞ்சோடு அமைதி கொண்டேன் நான் இன்று. இறுதிமுடிவிற்கு வருகின்றது என் சோகம் என்று.
விடிகின்ற விடியல் எனக்காகத்தான். இனி எப்போதும் இந்த காதுகளில் இசைமழைதான்.
------------------------------------------
உடன் பணிபுரியும் அன்பு நண்பர் பாஸ்கர் எழுதிய கவிதை இது. நண்பர் கலைரசனை மிக்கவர். புகைப்படங்கள் எடுப்பதில் மிக்க ஆர்வம் கொண்டவர். எதிர்பாராத விபத்தில் செவித்திறன் குறைந்தமையால் பெரும் அவதிப்பட்டவர் சென்ற வாரம் இங்கு எகிப்திலே நவீன லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நான்கு நாட்கள் ஓய்வில் வீட்டில் தனியாக இருக்கும்போது எழுதிய கவிதை. என்னை மிகவும் பாதித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நண்பர் சீக்கிரம் நலம் பெற எல்லாம்வல்ல இறைவன் அருள்வானாக.
Thursday, August 27, 2009
செந்தில்,செந்தில்........
இதயம் திருந்த
இதயம் திறந்து
இதயம் நிறைந்த
இறையை
இரந்துவோம்.
--------------------------------
இரத்தமும் சதையும்
கொண்டது
மற்றவர் இதயம்.
இணையநட்பின் கதையை
சொல்லிடும்
உங்கள் இதயம்.
----------------------------------
எல்லோர் இதயமும்
‘லப் டப்’ ‘லப் டப்’
என்றே துடிக்கும்.
இணையத்தமிழ்பதிவர்
இதயமெல்லாம் இன்று
‘செந்தில்’ ‘செந்தில்’
என்றே துடிக்கும்.

