Tuesday, March 17, 2015

காதல் மனம்




காய்க்கும்  மரம்
கல்லடி  படும்…

காதலிக்கும்  மனம்
சொல்லடி படும்...

கல்லடி படும்  மரம்
பல கனி கொடுக்கும்...

சொல்லடி படும் மனம்
நல் கவி கொடுக்கும்...

மரம் படும்பாடு
மனம்  அறியும்...

காதல் மனம் பாடும்  பாடல்
பல மனிதர்  அறியாரே…

2 comments:

KILLERGEE Devakottai said...


சொல்லடி பட்ட கவிஞரே வருக,,,
தினம் நல்ல கவிதைகளை தருக,,,
தொடர்ந்து நான் வந்து பருக,,,

துபாய் ராஜா said...

//சொல்லடி பட்ட கவிஞரே வருக,,,
தினம் நல்ல கவிதைகளை தருக,,,
தொடர்ந்து நான் வந்து பருக,,,//

ஆஹா...கில்லர்ஜீ, உங்களது பின்னூட்டக்கருத்தே கவிதையாக இனிக்குதே...கவித்தாகம் தணிக்குதே...