Saturday, February 28, 2015

அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாறு...

அருள் சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாறு


எல்லாம் அய்யன் அருள்.

சிவ மயம். விஷ்ணு சகாயம்.

எல்லோருக்கும் வணக்கம். 

திருநெல்வேலி மாவட்டம்,  என்றும் மங்காப்புகழ் கொண்டு நல்குணமும், வளமும் பொங்கும் எங்கள் ஜமீன்சிங்கம்பட்டி சமஸ்தான பொறுப்பில் உள்ள அகத்தியர் முதலான பல சித்தர்களும் வாழும் புண்ணிய பூமியும், தென்கைலாயமும் ஆன பொதிகைமலையில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் மூலநதியான காரையாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சொரிமுத்தையனார் கோயிலில் குடிகொண்டுள்ள அமிர்த பாலன், பூதராஜா, சட்டநாதன், ஷேத்திரபாலன் என்றெல்லாம் வணங்கப்படும் எங்கள் குலதெய்வம் அருள் மிகு  சங்கிலிபூதத்தார் சுவாமி திருவரலாறு குறித்த எனக்கு தெரிந்த விபரங்களை இறைவன் இட்ட ஆணைப்படி எழுத முனைந்துள்ளேன்.


அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலி பூதத்தாரைப் பற்றியும் அவருடைய பிரணவ மந்திரத்தை பற்றியும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

மானான மகாதேவா சங்கிலிநாதா
மாசற்ற வூஞ்சலுடக் கதிகாரிவாயே
அதிகாரி அடவிவனக் காத்தாள்வாவா
ஐங்கரனே சங்கரனே சதாசிவமேவாவா
மதியுடைய தழைமரங் காய்கனிகள்
மகத்தான புஷ்பமலர் வாடைவாவா
பதியுடைய பழிகார பூசைகொள்ளும்
பால்முகத்தில் நின்றுவிளை யாடும்பூதா
மதியுடைய வண்ணல் சங்கிலியேவாடா
மாசற்ற குலதெய்வப் பூதம்வாயே.

இவ்வாறு பக்தர்கள் மனமுருகி வேண்டி வாவென்று அழைக்க சங்கிலிபூதத்தார் வந்து ஆசிர்வதிப்பார் என்றும் தாவென்ற சப்தமுடன் சாஷ்டங்கம் அளிப்பார் என்றும் அகத்தியர் கூறுகிறார்.


கோயில் கொடைவிழாக்களின் போது படிக்கப்படும் வில்லுப்பாட்டுகளில் கேட்டவற்றையும், எனது தந்தையார் மற்றும் குடும்பப் பெரியவர்கள்   மூலம் அறிந்த விபரங்களையும் எல்லோரும் அறிய இங்கு தொகுத்துள்ளேன்.



ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் சங்கொலி முழங்க விசித்திரமான, வீரியமான பலவிதமான பூதகணங்களும், அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார் கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச்சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார,ஓங்கார உருவத்தோடும், ஆரவார சப்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் மற்ற முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு ‘அமிர்த பாலன்’ என்றொரு பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் 'தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்ணையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராக்‌சஷ முத்து' என்றும் அன்பர்களால் அழைக்கப்படுகிறார். எங்கள் தாத்தா மற்றும் பல குடும்ப உறுப்பினர்களுக்கு 'ராக்‌ஷ முத்து' என்பதே பெயராகும். சென்ற தலைமுறையில் ராக்‌ஷச முத்து என்பதை 'ராமு' என்று சுருக்கியும் பெயராக இட்டு உள்ளார்கள்.

அண்டமெல்லாம் நடுங்கச் செய்த அதிபயங்கர ஆலகாலவிஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய கைலாய நாயகரும், சித்தருக்கெல்லாம் சித்தரும்,வித்தகருக்கெல்லாம் வித்தகரும்,முக்கண் மூத்தவருமான  எம்பெருமான் சிவபெருமான் பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி தன்னோட பிள்ளைகளாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு கைலாயத்தில் வைத்துக் கொண்டார். அதனால்தான்  தந்தையான முக்கண் மூர்த்தியின் நெல்லையப்பர் கோயில் மற்றும் பல சிவன் கோயில்களிலும், தாயான பார்வதியின் அம்மன் கோயில்களிலும், சகோதரர்களான முருகனது திருச்செந்தூர், வள்ளியூர் , ஐயப்ப சாஸ்தாவின் சொரிமுத்தையனார் கோயில் , மற்றும் மாமாவான பெருமாளின் நம்பி கோயில் போன்ற பல கோயில்களிலும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து பாதுகாத்து வருகிறார்.சிவபெருமானின் பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவாகிய 'பூதராஜா' சங்கிலி பூதத்தார் சுவாமியின் பெயரினை அவரது பக்தர்களின் குடும்பத்தில் வாரிசாக வரும் ஆண் பிள்ளைகளுக்கு  ‘பூதராஜா’,'பூதராசு', ‘பூதத்தான்’ ,'பூதப்பாண்டி' என்றும் பெண்பிள்ளைகளுக்கு ‘பூதம்மாள்’, ‘பூதம்’ மற்றும் தற்போதைய நவீன காலத்திற்கேற்றார் போல் ‘பூதராஜா’வை சுருக்கி ‘பூஜா’ என்றும் பெயர் சூட்டி வருகிறார்கள்.

 இப்படியாக சிவபெருமான் ஆணையின் பேரில் பூதராஜாவான நமது சங்கிலி பூதத்தார் சுவாமி மற்ற பூதகணங்கள் உதவியோடு மிகவும் சிறப்பாக கைலாய நிர்வாகம் செய்து கொண்டு இருந்தார்.ஒருமுறை சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்து விட்டு ‘பூலோகப் பயணம் போய் வருகிறேன்’ என்று கூறிச் சென்றார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. நெடுங்காலமாக பொறுத்திருந்து பார்த்த பார்வதி அன்னை ஆனவர் பூதத்தாரை அழைத்து,‘அமிர்த பாலனே, பூமிக்கு போன உங்கள் தந்தையை வெகுநாட்களாக காணவில்லையே.விபரம் ஏதும் அறிவாயா…' என்று விசாரிக்க, 'இன்னும் சிறிது நாளில் வந்து விடுவார் அன்னையே’ என்று பூதத்தார் பதில் கூறினார். இப்படியாக பல நாள்கள் கழிந்தன.

 கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அன்னை ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வாய், ஏது செய்வாய், என்று நான் அறியேன். நீயே நேராக பூலோகம் சென்று உங்கள் தந்தையை கையோடு அழைத்து வா' என்று உத்திரவிட, மீறமுடியாத  பூதத்தாரும் தந்தையைத் தேடி பூலோகம் கிளம்பினார். அப்படி அவர் தேடி வரும்போது தூரத்தில் சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வருவதை பூதத்தார் பார்த்து விட்டார். ஆனால் பூதத்தார் வருவதை சிவபெருமான் கவனிக்கவில்லை. 'ஆஹா.., நாம் கைலாயம் விட்டு கீழிறங்கி வருவதை அப்பா பார்த்தால் கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காமல், ஊர் சுற்றுவதாக தவறாக நினைத்து, கோபப்பட்டு, சத்தம் போடுவாரே.., ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டால்  பார்வதி அன்னை ஆணை இட்ட விபரம் சொல்ல வேண்டி வருமே…, நாம் சாபம் வாங்கினாலும் பரவாயில்லை, நம்மால் அன்னை பார்வதி ஏச்சும், பேச்சும் வாங்கக்கூடாது, குடும்பத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது’ என்றெல்லாம் பலவாறு எண்ணிய பூதத்தார், பாதை ஓரத்தில் கிடந்த பாம்புச்சட்டையில் புகுந்து சிவபெருமான் கண்ணில் படாமல் மறைந்து கொண்டார். இதனால்தான் சங்கிலி பூதத்தாருக்கு 'சட்டநாதன்'  (சட்டைநாதன்)  என்றொரு பெயரும் உண்டு. மேலும் சங்கிலி பூதத்தார் சுவாமி இருக்கிற இடத்தில் எல்லாம் பாம்பு இருக்கும். சுவாமி பாம்பாகத்தான் பக்தர்கள் கண்ணில் படுவார். ஆனால் யாரையும், எந்த தொந்திரவும் செய்ய மாட்டார். தன்னை வேண்டி வழிபடுகிற பக்தர்களது கனவிலும் பாம்பாகத் தான் வருவார். ஆபத்து நேரங்களில் ‘ சட்டநாதா, சங்கிலிபூதம்’ என்று அபயக்குரல் கொடுத்தால் சரசரவென்று வந்து உதவிடுவார்.

‘தாய் அறியாத சூல் உண்டோ’, ‘தந்தை அறியாத பிள்ளை உண்டோ’ சங்கிலி பூதத்தார் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக பாம்புச்சட்டையில் புகுந்ததை ஞானதிருஷ்டியில் கண்ட சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை அழைத்து, ‘மகனே, சட்டநாதா, சங்கிலிபூதம், அமிர்த பாலா, கைலாயத்தில் சிறப்பாக காவல் நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். நீதி, நேர்மை, நியாயம், நிர்வாகங்களில் சிறந்த காக்கும் கடவுளான அன்பு மைந்தன் உனக்கு இப்போது எமது அன்பு பரிசுகளாக ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரமும் தந்தோம். உன்னை வணங்குவோர் எந்தக் குறையுமின்றி அன்பிலும், அறத்திலும், செல்வத்திலும் சிறந்து விளங்குவார்கள். நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென்கைலாயமாம் பொதிகை மலை வந்து எம்மை  அடைவாய்.’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

இப்படியாக பூலோகம் வந்து சேர்ந்த பூதத்தார் ஒரு இடமென்று தங்காமல் பல புண்ணிய ஷேத்திரங்களுக்கும் பயணம் சென்றார். எனவேதான் அவருக்கு ‘ஷேத்திரபாலன்’ என்றொரு பெயரும் உண்டு.அப்படி சென்ற இடங்களில் எல்லாம் பல திருவிளையாடல்கள் செய்து மக்களினால் கோயில்கள் கட்டி கும்பிடப்படுகிறார். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட பூதத்தார் பெருங்கோபமும் கொண்டவர். பக்தர்கள் செய்யும் தவறுகளை பொறுமையோடு ஏற்று முதலில் குறிப்பால் உணர்த்துவார். அப்படி அய்யன் காட்டும் குறிப்புகளை உணராமல் மேலும் மேலும் தவறுகள் செய்யும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கிவிடுவார். ஆம். 'விதி மீறினால் விதி முடித்திடுவார்'.

பல இடங்கள் சுற்றி பர்வத மலைக்கு வந்த பூதத்தாருக்கு ஆள்நடமாட்டமில்லாத அந்த இடத்தின் அழகும், அமைதியும் பிடித்து போய் விட அந்த மலையிலே மிகவும் பிரமாண்டமாக, ஓங்கி, உயர்ந்து, வளர்ந்த சந்தன தேக்கு மரத்தில் குடி அமைத்து தியான நிஷ்டையில் இருந்து வந்தார். பர்வதமலையடிவார ஊரில் முத்து செட்டி, சீனி செட்டி, முத்துராக்கன் செட்டி என்ற மூன்று சகோதரர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள். திரைகடலோடி திரவியம் தேட எண்ணம் கொண்ட மூவரும் கடல் கடந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு செல்ல வல்லம் (கப்பல்) செய்ய முடிவெடுத்து மரம் தேடி பர்வத மலைக்கு வந்தனர்.

ஆள், அம்பு, ஆசாரிகள், கருவிகளோடு பல இடங்களில் சுற்றி அலைந்தும் பொருத்தமான மரம் கிடைக்காத செட்டி சகோதரர்களின் கண்ணில் சங்கிலி பூதத்தார் குடியிருக்கும் வானளாவ ஓங்கி, உயர்ந்த பிரமாண்டமான சந்தன தேக்கு மரம் பட்டது. அழைத்து வந்த ஆசாரிகளும் வல்லம் செய்ய அனைத்து அம்சங்களும் கொண்ட மரம், இந்த மரம்தான் என உறுதி செய்ய மரத்தை வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட ஆரவாரக்கூச்சல்களினால் நிஷ்டை கலைந்த பூதத்தார் காட்டிய குறிப்புகளை உணராத செட்டி சகோதரர்கள் மரத்தை வெட்ட ஆரம்பிக்க, கடுங்கோபம் கொண்ட பூதத்தாரின் திருவிளையாடலால் மரத்தின் மீது முதல் வெட்டு விழும் முன்பே கோடாரிக் காம்பு உடைந்து, தெறித்து கோடாரியானது மரவெட்டியின் தலையை துண்டாக்கி தலை வேறு, முண்டம் வேறாக்கியது. 

ஆனால் எடுத்த காரியத்தில் பிடிவாதம் கொண்ட அந்த அகங்கார, ஆணவ செட்டி சகோதரர்கள் மந்திரவாதியை அழைத்து மேற்கொண்டு இடையூறுகள் ஏற்படாமல் இருக்க மாந்திரீகம் செய்து, கருங்கிடா வெட்டி பலியிட்டு தந்திர பூஜைகள் செய்ய சுத்த வீர சைவரான சங்கிலி பூதத்தார் இரத்தத்தீட்டு பட்டதால் மரத்தை விட்டு இறங்கி வெளியேறினார். பின் மரமானது வெட்டப் பட்டு, வல்லம் கட்டப்பட்டு கடலில் இறக்கி வெள்ளோட்டமும் விடப்பட்டது.பின் முறையான ஹோமங்கள் வளர்த்து, பூஜைகள் செய்து தீட்டெல்லாம் கழிக்கப்பட்டு பொருள்களை ஏற்றி புறப்பட்ட கப்பலில் பெருங்கோபத்தோடும், ஆவேசத்தோடும் ஏறிய பூதத்தார் நடுக்கடலில் கடும்புயலாய், பெருமழையாய், கொடும் சூறாவளியாய் உருமாறி, சங்கிலியால் ஓங்கி அடித்து, கப்பலை தாக்கி, சிதைத்து, பல துண்டு, துண்டுகளாக்கி   ஆணவ செட்டி சகோதரர்களையும் கடலில் மூழ்கடித்து அழித்து விட்டு திருச்செந்தூரில் கரை ஏறினார்.

அடக்க முடியாத ஆவேசத்தோடும், ஆக்ரோஷத்தோடும் திருச்செந்தூர் வந்த பூதத்தாரை அமைதிப்படுத்திய சகோதரரான சுப்பிரமணிய சுவாமி திருச்செந்தூர் கோயில் மூலஸ்தானத்திலும், கோபுர வாசலிலும், பக்தர்கள் தங்கும் மடங்களிலும் , கடற்கரையில் நாழிக்கிணற்றிலும், மற்றும் ஊருக்கு உள்ளேயும், வெளியேயுமாக இருபத்தி ஒன்று நிலையங்களை உருவாக்கி கோவிலுக்கும், வரும் பக்தர்களுக்கும், காவல் தெய்வமாக பூதத்தாரை இருக்கச் செய்தார்.திருச்செந்தூர் சென்றால் தவறாமல் பாருங்கள். மூடி வைக்கப்பட்டிருக்கும் ராஜகோபுரக் கதவின் இடது பக்கத்தில்  சங்கிலி பூதத்தாருக்கு துடியான  நிலையம் (பெரிய சிலை கொண்ட சிறிய கோயில்) இருக்கும். 

கைலாயத்திலும்,பர்வத மலையிலும் குளுமையாக இருந்த பூதத்தாருக்கு கடற்கரை சூடு பிடிக்காமலும், நியாய தர்மத்தில் சிறந்த வீரபாகுத் தேவருக்குப் பின் புதிதாக வந்த ஊழல் தர்மகர்த்தாவான பழனியாப்பிள்ளை போட்ட கல், மண் கலந்த நைவேத்தியங்களாலும் வயிற்றுவலி வந்துவிட முருகரிடம் தகவல் கூறிவிட்டு, தவறு செய்த தர்மகர்த்தாவையும் தண்டித்து விட்டு குளுமையான இடமான களக்காடு மலைக்கு வந்து, சலசலத்து ஓடும் நம்பியாற்றில் மூழ்கி குளித்து, உடல் சூட்டை தணிக்க வசதியாக, ஆற்றங்கரை மேலிருந்த பாறையில் சங்கிலியால் ஓங்கி அடித்து ஒரு கசத்தை (ஆற்றுக்குள் இருக்கும் ஆழம் அறியமுடியா இடம் ) உருவாக்கி நம்பியாற்றின் கரையில் மூன்று நிலையங்கள் அமைத்து  அமர்கிறார்.

சங்கிலியால்  ஓங்கி அடிக்கும் சத்தமும், கடும்பாறையானது பொடிபட்டு கசத்தில் நீர் பொங்கிப் பிராவாகமாய் பெருக்கெடுக்கும் சப்தமும் கேட்டு, கோயிலுக்கு வெளியே வந்து பார்த்த மலை நம்பி பெருமாள் ' யார், என்ன'வென்று விசாரிக்க, பூதத்தாரும், ‘நான் சிவனின் பிள்ளை. நீங்கள் என் மாமா, நான் உங்களது மருமகன்’ என்று எல்லா விபரமும் சொல்ல பெருமாளும், தாயாரும் பூதத்தாரின் வயிற்றுவலி நோயை குணமாக்கி, ஆசிர்வாதம் செய்து, திருக்குறுங்குடியில் உள்ள கீழ்நம்பி கோயிலுக்கும், ஊருக்கும் காவலாக  இருக்கச்சொல்லி அனுப்பினார்கள். அன்போடு அழைத்து, ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட கீழ்நம்பி பெருமாளும் பூதத்தாருக்கு திருக்குறுங்குடி கோயிலையும், ஊரையும் சுற்றி ஏழு நிலையங்கள் அமைத்து கொடுத்து நித்யபூஜைகளுக்கும் ஏற்பாடு பண்ணி கொடுத்தார்.

இப்படியாக திருக்குறுங்குடியில் பூதத்தார் காவல் நிர்வாகம் செய்து வரும் நேரத்தில்  கிட்டுநாபுரத்தில் வசித்து வந்த தொழுநம்பி என்னும் பூசாரி கீழ்நம்பி கோயில் பெருமாளுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் பூஜை, புனஸ்காரங்களை பொறுப்பாக செய்து  வந்தார். அவரது மனைவி ருக்மிணியம்மாளும் சிறந்த பக்தை.பதிவிரதை. ஆச்சி, ஐயர் இருவருக்கும் எல்லா வளங்களையும் கொடுத்த இறைவன் குழந்தை வரம் மட்டும் கொடுக்கவில்லை. மந்திர, தந்திரங்களில் தேர்ந்த தொழுநம்பி தவமாய், தவமிருந்து, குழந்தை வரம் வாங்கினார். பிறந்த குழந்தைக்கு காதில் சிறுவெட்டு போன்ற குறை இருந்ததால் 'குண்டல வாசகம்' என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர். பள்ளி செல்லும் வயது வந்ததும் திண்ணைப்பள்ளியிலும் சேர்த்துவிட்டனர். அந்த காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்த கோயிலுக்கு காலையில் செல்லும் தொழுநம்பியானவர் நடையை திறந்து மூன்று கால பூஜைகளையும் முறையாக நைவேத்தியங்களோடு செய்து விட்டு அந்தி பூஜை முடித்தபின் கோயில் நடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்.அதன்பின் கோவில் காவல் தெய்வமான சங்கிலி பூதமானவர் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு மறுநாள் காலையில் பெருமாள், தாயாரின் திருப்பள்ளி எழுச்சிக்குப் பின் கதவின் உள்பூட்டு,தாழ்பாள்களை விலக்கி விடுவார்.

ஒருநாள் குழந்தை குண்டலவாசகத்திற்கு பள்ளி விடுமுறை. தெருவில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையானவன் தூரத்தில் தொழுநம்பி கோயிலுக்கு புறப்பட்டு செல்வதை கண்டு அவனும் தொடர்ந்து ஓடினான். ‘அப்பா,அப்பா’ என்று அழைத்தவாறு அன்பு மகன் ஓடி வருவதை பாதி வழி தூரம் தாண்டியபின் தான் தொழுநம்பி கவனித்தார். ’ஆஹா,இவனை மறுபடியும் கொண்டு போய் வீட்டுக்கு வந்தால் பூஜை நேரம் தப்பி விடுமே. அப்படிச் செய்தால் அது பெரும் குற்றமாயிற்றே… ஆண்டவனுக்கு அறிந்தே செய்யும் இழுக்காயிற்றே...‘ என்றெல்லாம் குழம்பி பின் தெளிந்தவனாக குழந்தையையும் அழைத்துக்கொண்டு கோயில் நோக்கி சென்றான்.

கோயில்நடை திறந்து குழந்தையை ஒரு ஓரமாக உட்கார்ந்து விளையாடச் சொல்லிவிட்டு ஆயத்த வேலைகளில் இறங்கினான் தொழுநம்பி. வெகுதூரம் நடந்து வந்ததால் தாகத்தால் பீடிக்கப்பட்ட குழந்தையானவன் ‘அப்பா,குடிக்க ஏதாவது கொடு’ என்று கேட்க நம்பியும் சுவாமிகளின் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாலை மகனுக்கு கொடுக்க முனைந்தான். கோவிலின் காவல் பொறுப்பான பூதத்தார் எவ்வளவோ குறிப்புகள் காட்டியும் உணராமல்  மகனுக்கு பாலை புகட்டியும் விட்டான். சிறிது நேரம் கழித்து குழந்தை 'பசிக்கிறது' எனக் கேட்க மீண்டும் பூதத்தாரின் குறிப்புகளையும், கோயிலின் ஆகமவிதிகளையும் மீறி பூஜைக்கு வைத்திருந்த பழத்தினை குழந்தை குடித்து மீதி வைத்திருந்த பாலுடன் பிசைந்து பஞ்சாமிர்தமாக்கி ஊட்டி விட்டான். அதன்பின் சிறிதுநேரம் அங்குமிங்கும் ஓடியாடி விளையாடிய குழந்தை குண்டலவாசகமானவன் நடந்து வந்த களைப்பாலும், பால், பஞ்சாமிர்தம் உண்ட அலுப்பினாலும் ஓரமாய் படுத்து தூங்கி விட்டான். வழக்கம்போல செய்யும் முறையான பூஜை போல் அல்லாமல் பால், பழமின்றி பெருமாளுக்கும், தாயாருக்கும், பூதத்தார் உள்ளிட்ட ஏனைய பரிவார தெய்வங்களுக்கும்,தேவதைகளுக்கும்  ஏனோ,தானோ என்று ஒப்பிற்கு பூஜை செய்த தொழுநம்பியானவன் குழந்தை கூட வந்ததையும், கோயிலினுள் தூங்கி கொண்டிருப்பதையும் மறந்து கதவை பூட்டிவிட்டு வழக்கமான பாதையில் நடந்து வீட்டை அடைந்தான்.

வீட்டிற்கு வந்து கை, கால், முகம் கழுவி ஆசனப்பலகையில் அமர்ந்து ருக்மிணியம்மாள் எடுத்து வைத்த உணவை பிசைந்து முதல் கவளத்தை வாயில் வைக்கப்போனவன், ‘குழந்தை குண்டலவாசகனையும் சாப்பிடக் கூப்பிடேன்.சேர்ந்து சாப்பிடுகிறேன்’ என்று கூற,  ‘காலையில் நீங்கள் கோயிலுக்குச் செல்லும்போது உங்கள் கூட வந்ததாகத்தானே அவனது நண்பர்களும், செல்லும் வழியில் கண்டவர்களும் கூறினார்கள். எங்கே மறுபடியும் வந்து தெருவில் விளையாடிக் கொன்டிருக்கிறானா’ என்று ருக்மிணி ஆச்சியானவள் எதிர் கேள்வி எழுப்பினாள்.

அதன்பின்னரே கோயிலிலேயே குழந்தையை விட்டு வந்தது நினைவிற்கு வர மனைவியிடம் மெதுவாக விபரம் கூறி ‘ பயப்படாதே, குழந்தையை பெருமாளும், தாயாரும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். விடிந்ததும் சென்று அழைத்து வந்து விடுகிறேன்.’ என்று கூற  கொதித்து எழுந்த  அந்த தாயோ ‘தவமாய்,தவமிருந்து பெற்ற குழந்தையை கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் விட்டு வந்து விட்டு காலையில் சென்று அழைத்து வருகிறேன் என்று கூறி பெற்றவள் என் வயிறு துடிக்கச் செய்கிறாயே. நீயெல்லாம் ஒரு தகப்பனா.. நீ இப்போதே சென்று என் குழந்தையை அழைத்து வரவில்லை என்றால் நானே செல்வேன். அல்லது உடனே என் உயிர் துறப்பேன்…’ என்று மேலும் பல கடுஞ்சொற்கள் பேசி நம்பியை கலங்க அடித்தாள்.

சரி இவளிடம் இதற்கு மேல் பேசி எந்த பிரயோஜனமும்  இல்லை என்று முடிவெடுத்த நம்பியும் மேலும் தாமதியாமல் வீட்டை விட்டு உடனே கிளம்பி கொடும் மிருகங்களான புலி,சிறுத்தை,கரடி,நரி தாக்காதவாறு அந்தக் கடும்காட்டில் வாழும் மொத்த மிருகங்களின் வாயையையும் கட்டும் மந்திர உச்சாடனம் ஜபித்து வசிய மைகளோடும், மருந்துகளோடும் களக்காடு வனம் புகுந்.து கோயிலை அடைந்தான்.

 கோயிலுக்கு மீண்டும் நம்பி வந்த காரணம் அறிந்த காவல் தெய்வமான சங்கிலி பூதத்தாரும் ‘ நம்பி , நீ வந்த காரணம் யாம் அறிவோம்..காலையில் உன் மகனை உன்னிடமே ஒப்படைப்பேன். கவலையின்றி திரும்பிச் செல்’ என்று கூறினார்.

நம்பியும் ‘சங்கிலி பூதத்தாரே இப்போது என் மகனை நான் அழைத்துச் செல்லவில்லை என்றால் என் மனைவி உடன் உயிர் துறப்பாள். அதன் பின் நானும், என் மகனும் மிகவும் கஷ்டப்படுவோம். உன்னத தாயும், உண்மையான பத்தினியுமான அவளது சாபமும் என்னையும், எனது பரம்பரையையும் பீடிக்கும். எனவே கருணை கொண்டு, தயவு செய்து கதவு திறந்து விடுங்கள்.’ என்று வேண்டினான்.

‘நம்பியே, உன் நிலை அறிவோம். ஆனால் ஆகம விதிப்படி கோயில் கதவைப் பூட்டி, பெருமாளும், தாயாரும் பள்ளியறைக்கு சென்ற பின் மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சிக்கு பின் தானே கோயில் கதவை திறக்க முடியும். விதிமுறை அறிந்த நாம் இருவருமே அதனை மீறுவது தர்மம் அல்ல. உன் மகனை இப்போது இருப்பதை விட இரண்டு பிடி சேர்த்து வளர்த்து நிறைந்த கல்வியோடும், குறையாத செல்வத்தோடும் அவன் பெருவாழ்வு வாழும் வகையில் ஆசி வழங்கி நாளை காலையில் திருப்பி தருகிறேன்.வீடு சென்று இல்லாளை ஆறுதல் கூறி சமாதானப்படுத்து.’  என்று தேறுதல் வார்த்தைகள் கூறினார்.

ஆனால் பூதத்தாரின் வார்த்தைகளில் சமாதானமடையாத நம்பியானவன் தன்னிடமிருந்த சாவி கொண்டு கோயில் நடை திறக்க முனைந்தான்.

‘நம்பியே… இன்று காலையில் இருந்தே பல விதிமீறல்கள் செய்து வந்தாய். உன் மகன் பொருட்டு அனைத்தையும் மன்னித்தோம்.ஆனால் இப்போது நீ செய்ய முயல்வது மன்னிக்கமுடியாத தவறு. மேல்கொண்டு என் கோபம் கிளப்பாமல் உடனே இவ்விடம் விட்டு புறப்படு.இல்லையென்றால் நடப்பவை நல்லவைகளாக இருக்காது’ என்று பூதத்தார் எச்சரித்தார்.

மனம்பிறழ்ந்த நம்பியோ,’ஏ பூதமே, என்னையே எச்சரிக்கிறாயா… என்னை விட ஆகம விதிகளும், வேதங்களும் அறிந்தவனோ நீ… உன்னை என்ன செய்கிறேன் பார். நான் படித்த மந்திரங்களினால் உன்னைக் கட்டி, கோயில் கதவைத் திறந்து, என் மகனை இப்போதே அழைத்துச் செல்வேன். உன்னால் முடிந்ததை செய்.’ என்று பூதத்தாரிடம் சவால்  விட்டு மந்திரத்தினால் கோயில் கதவின் உள்ளிருந்த மேல்தாழ்ப்பாளை விலக்க, பூதத்தாரோ கீழ்தாழ்ப்பாள் போட்டார். அவன் கீழ்தாழ்ப்பாள் விலக்கும்போது பூதத்தார் தந்திரமாக மேல்தாழ்ப்பாள் போட்டார்.
 
இப்படி மாறி, மாறி தடுத்தும் தொழுநம்பியானவன் மந்திர வேலைகளின் மூலம் மீண்டும், மீண்டும் கோயில் கதவைத் திறக்க முயற்சிக்க கடும்கோபமும், ஆக்ரோஷமும் கொண்ட சங்கிலி பூதத்தார், ‘சரி நம்பி. கதவருகே வந்து உனது மேல் துண்டை விரித்து நில். உன் மகனைத் தருகிறேன். உன் விருப்பப்படியே வாங்கிச் செல்’. என்று கூறி எப்படி நம்பியானவன் பாலிலே, பழத்தை பிசைந்து பஞ்சாமிர்தம் ஆக்கினானோ அதுபோல பூதத்தாரும் தூங்கிக் கொண்டு இருந்த அந்த பச்சிளம் பாலகனை, பால் மணம் மாறா குழந்தையை, கை வேறு, கால் வேறாக பிய்த்து,ரத்தமும், சதையுமாக  பிசைந்து கதவு சாவித்துவாரம் வழியாக கோவிலுக்கு வெளியே வீசினார்.

‘ஆஹா பூதமே…என்ன காரியம் செய்தாய்..என்னை பழிவாங்க என் மகனையா கொன்றாய்.. பொழுது விடிவதற்குள் உன்னை மந்திர மை, மருந்துப் புகை போட்டு பிடித்து பாதாளக் குகையில் அடைத்து என் அடிமை ஆக்குகிறேன் பார்’ என்று சூளுரைத்து சபதம் செய்தான் தலைக்கனத்தால் தன் மகனை இழந்த தொழுநம்பி.

‘அடோய் நம்பி. யாரிடம் சபதம் செய்கிறாய்.இப்போது கூறுகிறேன் கேள். உன் கண் முன்னே இந்த ஊர் நீங்கிச் செல்வேன். அதற்கு ஆதாரமாக ஆலயத்தின் அணையாவிளக்கு அணைந்திருக்கும். மேலும் கோயில் விருட்சமான மருதமரத்தின் வலது பக்கத்தையும், கோயில் கோட்டை மதில் சுவரில் உள்ள ஏழு வரிசைக்கற்களையும், சிதைத்து, சரித்து செல்வேன். அடையாளத்தை வந்து சரி பார்த்து கொள்.’என்று கூறி திருக்குறுங்குடியிலிருந்து கிளம்பி பூதத்தான் குடியிருப்பு வழியாக களக்காடுமலை தாண்டி தென்பொதிகை மலை ஏறி காரையாற்றங்கரையில் உள்ள அருள்மிகு சொரிமுத்தையனார் கோயில் மூலவரும், தானே சுயம்பாக அவதரித்த சர்வேஸ்வரருமான மகாலிங்க சுவாமிகளின் அனுமதியோடு மணி முழுங்கி மரத்தடியில் வந்து குடியேறினார்.

 இவ்வாறாக அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தாரானவர், கைலாயத்தில் இருந்து கிளம்பும் போது சிவபெருமான் இட்ட ஆணைப்படி பல ஷேத்திரங்கள் பயணம் செய்து தென்கைலாயமான பொதிகை மலை சொரிமுத்தையனார் கோயில் வந்து மணிமுழுங்கி மரத்தடி, மேற்கு வாசல், மூலஸ்தானம், மடப்பள்ளி மற்றும் வனத்தினுள்ளாக ஐந்து நிலையங்கள் அமைத்து சுயம்புலிங்கமாக அமைந்துள்ள தந்தை சிவனான மகாலிங்க சுவாமி, மூத்த சகோதரரும், முழுமுதற் கடவுளுமான விநாயகர், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம் மற்றும் சபரிமலை சாஸ்தாவுக்கெல்லாம் மூலசாஸ்தாவான பொன் சொரிமுத்து ஐயனார் மற்றும் கும்பாமுனி  ( அகத்தியர்), பாதாளமுனி, சுடலை மாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, தூசி மாடசுவாமி, தூண்டில் மாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பொம்மக்கா, திம்மக்கா சமேத பட்டவராயன், பிரம்மரட்சதை அம்மன், பேச்சி அம்மன்  போன்ற பரிவார தெய்வங்கள் மற்றும் தேவதைகளோடு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

எல்லாம் அய்யன் அருள். சிவமயம். விஷ்ணு சகாயம்.

நன்றி. வணக்கம்.


அருள்மிகு சங்கிலி பூதத்தார் சுவாமி சம்பந்தப்பட்ட அதிசயங்களும் ஆதாரங்களும்...

1.திருக்குறுங்குடி கோயிலில் பூதத்தாரால் சிதைக்கப்பட்ட கோவில் கோட்டை மதில் சுவரின் ஏழு வரிசைக் கற்களை  கோவில் நிர்வாகத்தினர் பல்வேறு கால கட்டங்களில் சீரமைக்க முயற்சித்தும் இன்று வரை முடியாமலே இருக்கிறது.

2. களக்காடு திருக்குறுங்குடி மலைநம்பி கோயில் சங்கிலி பூதத்தார் ஆலய திருவிழாவின் போது சாமி கொண்டாடிகள் நம்பியாற்றில் சுவாமி சங்கிலிபூதத்தாரால் உருவாக்கப்பட்ட ஆழம் அறிய முடியாத கசத்தில் குதித்து சங்கிலி எடுத்து வருவர். சொரிமுத்தையனார் கோயிலிலிலும் இதே போன்று ஆழமான கசம் உள்ளது.

3.சுத்த சைவரான பூதத்தாருக்கு பிரியமானவற்றில் முக்கியமானவை வடை மாலை,  எலுமிச்சை மாலை, வாழைப்பழக்குலை, பானகரம், வார்ப்புப் பாயாசம், முற்றிலும் காய்கறிகளான ஆசாரப்படைப்பு  மற்றும் பச்சரிசியை ஊறவைத்து கையால் இடித்து மாவாக்கி வெல்லம் கலந்து உருண்டையாக செய்து பின் நடுவில்  குழி ஏற்படுத்தி எண்ணெய் விட்டு திரிபோட்டு சுவாமி முன் தீபம் ஏற்றப்படும் வேண்டுதல் மாவிளக்கு.  

4. பூதத்தார் சுத்த சைவமாக இருந்தாலும் அவர் குடி கொண்டுள்ள கோயில்களில் மற்ற தெய்வங்களுக்காக நடக்கும் உயிர்ப்பலிகள் மற்றும் அசைவப்படைப்புகளை கண்டு  கொள்வதில்லை. அவரது பக்தர்கள் புலால் உண்ணுவதையும் தடுப்பதில்லை. விழாக்காலங்களில் அவரது பக்தர்களே அசைவம் தவிர்த்து தீவிர விரதம் மேற்கொள்கின்றனர்.

5.வள்ளியூர் முருகன் கோவில்,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் பல கோயில்களில் பூதத்தார் இருக்கிறார். எல்லா இடத்திற்கும் அவர் எப்படி  சென்றார் என்பது போன்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்  ஆதாரங்கள் திருத்தமாகவும், தெளிவாகவும் உள்ளன. அவரது பெயரிலே 'பூதப்பாண்டி', பூதத்தான் குடியிருப்பு போன்ற ஊர்களும் உள்ளன. சொரிமுத்தையனார் கோயிலில் பூதத்தாரை ஆதாரமாக வைத்து கட்டப்பட்ட அனைத்து கோயில்களுக்கும் திருவிழாவின் போது சொரிமுத்தையனார் கோயிலில் இருந்தே சங்கிலி அல்லது தீர்த்தக்குடம் எடுத்து செல்லப்படுகிறது.  

6. அவரது எல்லாக் கோயில்களிலும் பீடத்தின் கீழ் இரும்புச் சங்கிலி வைக்கப்பட்டிருக்கும். அருள் வந்து ஆடும் பக்தர்கள் அந்த சங்கிலிகளால் நெஞ்சில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டாலும் வலிப்பதுமில்லை. கண்ணிப்போவதோ, இரத்தக்காயங்களோ ஏற்படுவதுமில்லை.

7.அடர்ந்த வனப்பகுதியும், களக்காடு - முண்டன்துறை புலிகள் சரணாலயமும் ஆகிய சொரிமுத்தையனார் கோயிலுக்கு ஆண்டு முழுதும் மக்கள் சென்று வருகின்றனர். வருடாவருடம் விமரிசையாக நடக்கும் ஆடிஅமாவாசை திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள், குடும்பத்தோடு சென்று தற்காலிக குடில்கள் அமைத்து பத்து நாள்களுக்கும் மேல் தங்கி வருகின்றனர்.ஆனால் இதுவரை எவரையுமே மிருகங்கள் தாக்கியது இல்லை. காவல் தெய்வமான சங்கிலி பூதத்தாரே பக்தர்கள் கண்ணில் படாமல் கொடிய மிருகங்களை தடுத்தாண்டு வருகிறார்.

8. கோயிலுக்குச் செல்லும் தற்போதைய பாபநாசம் வழியான மலைப்பாதையானது போடப்படுவதற்கு முன் அனைத்து ஊர் மக்களும், சிங்கம்பட்டி ஜமீனால் காட்டுபகுதியில் அமைக்கப்பட்ட காட்டுப்பாதை வழியாகவே சென்று வந்தனர். இப்போதும் சிங்கம்பட்டி மற்றும் அக்கம்பக்க கிராம மக்கள் வனத்துறையினர் அனுமதியோடு இந்த வழியை பயன்படுத்தி கோயிலுக்கு சென்று வருகின்றனர்.  பூதத்தார் பொதிகை மலை வந்த காட்டுப்பாதை வழியாகவே வருடாவருடம் ஆடிஅமாவாசைதோறும் நடைபயணமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி அருகே உள்ள கிராமத்தில் இருந்து சொரிமுத்தையனார் கோவிலுக்கு சாமிகொண்டாடிகளால் வல்லயம் ( வெண்கல மணிகள் பிணைக்கப்பட்டு பூண் இடப்பட்ட குத்தீட்டி / வேல்கம்பு ) கொண்டு வரப்படுகிறது. இன்று வரை எவர் கண்ணிலும் எந்த மிருகமும் பட்டதில்லை.

9.சிங்கம்பட்டி அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் கோயிலில் பல நூற்றாண்டுகளாய் மூன்றுநாள் திருவிழாவாக சிறப்பாக நடந்து வரும் மாசி மாத சிவராத்திரி திருவிழாவிற்காக இந்த காட்டு வழியாகவே சங்கிலி எடுத்து வரப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு அவ்வாறு சங்கிலி எடுக்கச்சென்ற 90 வயதான முதிய சாமிகொண்டாடி இரவு நேரமாகியும் திரும்பாததால் காட்டினுள் சென்று தேடிப் பார்க்கலாம் என்று கோயில் நிவாகத்தினர் முடிவெடுத்து புறப்பட முயன்ற போது காட்டில் வழி தெரியாமல் சென்றுவிட்ட அந்த பெரியவரை ஆடு ஒன்று  வழிகாட்டி கோயிலுக்கு அழைத்து வந்தது. பின் திருவிழா முடியும் வரை கோயிலில் சங்கிலி பூதத்தாரின் பிரமாண்ட பீடத்தின் அருகிலே இருந்த அந்த ஆடு பின் யார் கண்ணிலும் படாமல் மறைந்து போனது. சங்கிலி பூதத்தாரே ஆடு வடிவில் வந்து சென்றதாக அனைத்து நெல்லை மாவட்ட பத்திரிக்கை பதிப்புகளிலும் பரபரப்புச் செய்தியாக வந்தது. வேட்டையாடும் கொடும் மிருகங்கள் வாழும் கடும்காட்டில்  ஆடு அலைவது என்பது ஆச்சரியமான அதிசயமாகும். 


10. திருவரலாற்றின் படி திருக்கைலாயத்தில் இருந்து கிளம்பி திருச்செந்தூர் வழியாக திருக்குறுங்குடி வரும்வரை சிவனின் சைவசின்னமான திருநீறு அணிந்திருந்தார். வைணவத்தலமான பெருமாளின் திருக்குறுங்குடி நம்பி கோயிலில் வைணவ அடையாளமான திருநாமம் ஏந்தினார். திருக்குறுங்குடியில் இருந்து சொரிமுத்தையனார் கோயில் வந்ததால் அங்கும், சொரிமுத்தையனார் கோயிலை ஆதாரமாக கொண்ட மற்ற கோயில்களிலும் திருநாமத்தோடே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

11.வரும் காலங்களில் எல்லாம் வல்ல இறைவன் திருவருளோடு கீழ்க்கண்ட பதிவுகளை எழுத எண்ணியுள்ளேன்.
அ) சுவாமி சங்கிலி பூதத்தார் தென்கைலாயமாம் பொதிகை மலையில் இருந்து இறங்கி        திருநெல்வேலி மாநகரம் வந்த கதை.
ஆ) குலதெய்வமானது முதல் இன்று வரை எங்கள் குடும்பத்திலும்,ஊரிலும் செய்து வரும் பல அதிசயங்கள் .
இ) அண்டை மாநிலமான கேரளா உள்பட  கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் மற்றும் பல  இடங்களுக்கும் சென்ற கதை.
ஈ) மற்ற பரிவார தெய்வங்களும், தேவதைகளுமான கும்பாமுனி (அகத்தியர்), பாதாளமுனி, சுடலை மாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, தூசி மாடசுவாமி, தூண்டில் மாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பொம்மக்கா, திம்மக்கா சமேத பட்டவராயன், பிரம்மரட்சதை அம்மன், பேச்சி அம்மன் கதைகள்.


எல்லாம் அய்யன் அருள்.

சிவ மயம். விஷ்ணு சகாயம்.


நன்றி. வணக்கம்.



சுவாமி சங்குலி பூதத்தார் குறித்த கீழே உள்ள பதிவுகளின் மீதும் சொடுக்கி படிக்கவும்.

சுவாமி சங்கிலி பூதத்தார் தென்கைலாயமாம் பொதிகை மலையில் இருந்து இறங்கி திருநெல்வேலி மாநகரம் வந்த கதை




Wednesday, February 25, 2015

காதல் கரிசனம்



நீ  வெட்கப்பட்டு  பார்த்தால்
நான்  தூக்கம் கெட்டு போகிறேன்…

நீ ஓரக்கண்ணால் பார்த்தால்
நான் நேரம் மறந்து நிற்கிறேன்…

நீ கடைக்கண்ணால் பார்த்தால்
 நான் விடை தெரியாமல் திரிகிறேன்...

கண்பிரியம் காட்டிடும் பெண்ணே
திண்மனம் நெகிழ்ந்து
காதல்கருணையோடு வேண்டும்
கொஞ்சம் கரிசனம்...

முகம் காட்ட மறுக்காமல்
முன்வந்து தந்திடு
உன் முழு தரிசனம்...

கன்னி உனைக்கண்டால் அனுதினம்
அடைந்திடும் அமைதி என்மனம்.


Tuesday, February 17, 2015

கனவுக் காதல்...


கண்மூடி
சென்றேன்
கனவு தேசம்..

அங்கும் துரத்தி வந்து
தொல்லை தந்தது
தோழி உன்
காதல் நேசம்….

Saturday, February 14, 2015

காதல்...காதல்..காதல்.



கோடையில் கொசுக்கடி

அதனினும் கொடியது
உன் நினைப்படி

அன்றாடம் நீ
புழங்கும் அறையடி

அங்கெலாம் நான்
இல்லாக் குறையடி

இடுப்பிலே உனக்கு மடிப்படி

அங்கே இருந்து  தவிக்குது
 என் இதயத்துடிப்படி

ஊரெல்லாம் இருக்குது உறவடி

நீ  இல்லாமல்
என்நிலை துறவடி

அனைவரும் வியக்கும்
அழகுச்சிலையடி

அருகில் இருந்து
 ரசிக்க முடியா
நிலையடி

அனுதினம் வருகுது
காலை மாலையடி

அன்பே உன் அருகாமை
வேண்டி நான்
அரற்றுவது
கடும் பாலையடி

கன்னி நீ இருக்கும்
திசையடி

காண முடியா மனதில்
 உன் நினைவு கசையடி

பறக்க எனக்கில்லை சிறகடி 

பாவை உனை நினைத்து
பதறும் என்நிலை
ஈரம்காய்ந்த விறகடி

ஓய்வில்லா உழைப்படி
ஒப்புக்குத்தான் இந்த பிழைப்படி
போதும் பொன்னே  இந்த இழப்படி
  
வேண்டும் இறைவன் நினைப்படி
அமைப்போம் வாழ்வை நல்ல நிலைப்படி

எப்பொழுது தான் சேர்வேன் உன்னை
அப்பொழுது நான் மறப்பேன் என்னை

அந்த நாளும் வருவது எப்போது
எண்ணி ஏங்குது என்மனம் இப்போது....


இது எனது 200வது பதிவு மற்றும் பதிவுலகில் 10வது ஆண்டாகும்.

Thursday, February 12, 2015

காதல் வாஸ்து


உன்
கண்வீச்சு
 மின்னல்…. 

விரும்பி
வேண்டி
எப்போதும்
திறந்தே
கிடக்கிறது
    என்
     மன ஜன்னல்….




மீண்டும்
மீண்டும்
உன்  உறவு…

வேண்டும்
வேண்டும்
 என்றே
விட்டு விட்டு
துடிக்குது என்
இதயக்கதவு…

Monday, February 09, 2015

என் மனவீதியில்....


மண்வீதியில்
மறையலாம்
பாதச்சுவடுகள்…

என்றும்
என்
மனவீதியில்
மறையாது…

பாவை
உன்
பார்வைச்
சுவடுகள்….

Tuesday, February 03, 2015

மாயக்காரி...




நீ
சேலை
கட்டி
வரும்போது
முந்தானைச்
சிறையில்
முடிந்து
கொள்கிறாய்
என்
மனதை….



சுரிதார்
அணிந்து
வரும்போது
துப்பட்டா
வலையில்
இழுத்துச்
செல்கிறாய்
என்
நினைவை…..

Monday, January 26, 2015

கன்னிப்பொறி...




பள்ளி
சென்று
படித்ததெலாம்
மறந்து
போனது…


கள்ளி
உன்
கடைக்கண்
பார்வை
பட்டவுடன்…..




கணிப்பொறியில் 
கண்டேன் 
விடை 
பல
கணக்கு… 


கன்னி உன் 
கண்பொறி
தடை 
தாண்ட 
மட்டும் 
ஏன் 
இத்தனை 
பிணக்கு….


Monday, January 19, 2015

மீண்டும்.....


அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பத்தாண்டுகளுக்கு மேல் பதிவுலகில் இருந்தாலும் பணிப்பளுவின் காரணமாக தொடர்ச்சியாக எழுதுவதும், பதிவுத்தளத்தில் இயங்குவதும் இயலாததாகவே இருக்கிறது. பொதுவாக கட்டுமான திட்டப்பணிகளில் அன்றாடப்பணிகளே திட்டமிட முடியாதவை என்னும் பொழுது எழுதுவதற்கு என தனியாக நேரம் ஒதுக்குவது என்பது மிகமிகக் கடினமானதே. அதிலும் அயல்நாட்டுப்பணியில் ஓய்வு கிடைக்கும்போது ஊருக்குச் செல்வதைதான் மனம் விரும்புகிறதே தவிர உட்கார்ந்து எழுத தோன்றுவதே இல்லை.




எழுதத்தான் முடியவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போது மற்ற நண்பர்கள் பதிவுகளை படிப்பதும்,பகிர்வதும், பின்னூட்டக் கருத்துக்கள் இடுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவே எனது எழுத்தார்வம்  நீர்த்துப்போகாமல் நிலைத்து நிற்க முக்கிய காரணமாகவும், மூலாதாரமாகவும் இருக்கிறது. 

எல்லாம் வல்ல இறையருளின் அருளோடும், தமிழ்த்தாயின் துணையோடும்,   இந்த ஆண்டில் மீண்டும் எனது அனுபவங்களை பதிவுகளாக ஏற்ற எண்ணி எழுத்து ஏர் பிடிக்க உள்ளேன் தங்கள் அன்போடும், ஆதரவோடும்…..

நன்றி. வணக்கம்.

Saturday, May 31, 2014

அம்மான்னா சும்மாவா....

அம்மான்னா சும்மாவா....

நாடாளுமன்றத்தில் 37 தொகுதி கொடுத்து அகில இந்திய அளவில் 3வது பெரிய கட்சின்னு அங்கீகாரம் கொடுத்து அம்மா மனசை குளிர வைத்த தமிழ்நாட்டு தங்கங்களே...உங்கள் மனம் குளிரவைக்கும் அம்மாவின் அதிரடி பரிசு...

விரைவில் மாவட்டம்தோறும் எதிர்பாருங்கள்...

சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதி ஜெயிக்க வைத்தால் மக்கள் மனம் மேலும் குளிறுமாறு வார்டுதோறும் மற்றும் ரேசன் கடைகளிலும் 'எலைட் பார்' மற்றும் குளிர்ந்த பீர் கிடைக்குமாறு அம்மா வசதி செய்து தருவார்கள்... தருவார்கள்..... தருவார்கள்...


பத்திரிக்கையில் வந்த பலபேருக்கு பயன் தரும் செய்தி...



http://www.maalaimalar.com/2014/05/30135818/Nungambakkam-near-today-Beer-S.html

நுங்கம்பாக்கத்தில் இன்று பீர் விற்பனைக்கு தனிகடை திறப்பு..

சென்னை, மே 30–

டாஸ்மாக் மதுக்கடைகளில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பதால் நடுத்தர மற்றும் உயர்வருவாய் பிரிவினர் மது வாங்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இவர்களின் வசதிக்காக ‘எலைட்’ என்ற பெயரில் மதுபானக்கடையை டாஸ்மாக் திறந்துள்ளது. அங்கு உள்நாட்டு மதுபானங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை எழும்பூர் – அல்சாமால், கோயம்பேடு– டென்ஸ் கொயர், அண்ணா சாலை– ஸ்பென்சர் பிளாசா, தேனாம் பேட்டை–ரமிமால், வேளச்சேரி–பீனிக்ஸ், நுங்கம்பாக்கம்–பார்சன், நாவலூர்–கோரமண்டல் ஆகிய இடங்களில் இந்த மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பார்வசதி கிடையாது. விற்பனை மட்டும்தான்.

இந்த கடைகளில் கலப்படம் இல்லாமல் மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதால் மது பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீர் பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தன. பார்களில் பீர் விற்கப்பட்டு வருவதால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

‘ஜில்‘ பீர் என்ற பெயரில் கடை மற்றும் பார் ஊழியர்கள் கொள்ளை லாபம் அடித்தனர். இதை டாஸ்மாக் உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ள எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை பகுதியில் கூட கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடக்கிறது. இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. மதுபாட்டில் ரூ.10 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு விற்கிறார்கள். அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்கும் படி வலியுறுத்தி அடிக்கடி தகராறும் நடக்கிறது.

இதற்கிடையில் ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் மதுபானங்களுடன் பீர் வகைகள் விற்க டாஸ்மாக் முடிவு செய்தது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வணிக மையங்களில் இன்று முதல் ‘பீர்’ விற்பனை தொடங்கப்படுகிறது.

பீர் மட்டும் விற்பனை செய்யக்கூடிய கடை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்சன் காம்ப்ளக்சில் இன்று தொடங்கப்படுகிறது. இந்த கடையில் வேறு எந்த மதுபானமும் கிடைக்காது. உள்நாட்டு பீர் மற்றும் வெளிநாட்டு பீர் வகைகளும் இங்கு கிடைக்கும்.

இந்த கடையில் பெரிய அளவிலான குளிர்சாதன பெட்டிகள் மூலம் ‘ஜில்’ பீர் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை விற்கப்படும். ரூ.55 முதல் ரூ.220 வரையிலான பல்வேறு கம்பெனிகளின் பீர் பானங்கள் விற்கப்படும்.

Monday, October 08, 2012

காலை உடைத்த காஞ்சனா…. - பாகம் 3


காலை உடைத்த காஞ்சனா….


பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….

படுக்கையறையின் வெளியே பரபரப்பான பேச்சுக்குரல் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்த நான் கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்க இரவு மணி பத்து என அது காட்டியது. படுக்கையில் இருந்து எழுந்தவன் வெளியில் சென்று பார்க்க மணி,சிங், சாஜன் மூவரும் ஹாலில் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.என்னைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திய சிங் எழுந்து சமையலறைக்குள் சென்று விட்டார். சாஜனும் அவர் பின்னாலே சமையலறைக்குள் நுழைந்தான். முகத்தைக் கழுவி விட்டு துண்டால் துடைத்துக் கொண்டே ஹாலில் வந்தமர்ந்த என்னிடம் ”என்ன சார், நல்ல தூக்கமா..” என்று மணி கேட்க “ஆமா மணி. நேற்று ராத்திரி டிரெயினில் தூக்கமேயில்லை. அதான் அசதியில் தூங்கிவிட்டேன்” என்றேன்.”சரியான பசி மணி.. பக்கத்தில நல்ல ஹோட்டல் எங்கே இருக்கு சொல்லு. போய் சாப்பிட்டு வரலாம்.” என நான் கேட்க “ஏன் சார்… ஹோட்டல்லாம் போய்க்கிட்டு… சிங் சார் சிக்கன் பிரியாணி பண்ணிட்டு இருக்கார். சூப்பரா இருக்கும்.இங்கேயே சாப்பிட்டுடலாம்” என்றான் மணி.

”ஏன் மணி சிங் மூஞ்சி கொடுத்தே எதுவும் பேச மாட்டேன்கிறார். என்கிட்டே மட்டும்தானா… இல்லை எல்லோர்ட்டேயும் இப்படித்தானா..” என்று மதியத்திலிருந்தே என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை மணியிடம் நான் கேட்டவுடன் “இல்லை சார்..அவர் நல்ல டைப். ரொம்ப வருஷமா இங்கே இருக்கார். திடீர்ன்னு வேற ஊருக்கு மாற்றல்ன்னதும் டல்லாயிட்டாரு. நீங்க வேற வந்துட்டீங்களா..அதான் ரொம்ப வருத்தாமாயிருக்கார்…” என அவன்  கூறினான். “என்னப்பா நான் வந்ததுனாலேயா…” என நான் குழப்பத்துடன் கேட்க,”ஆமா சார்…நீங்கதானே அவரை மாற்ற வந்த ஆளு அதான் உங்ககிட்டே எதுவும் பேசமாட்டேன்கிறார்.” என்று காரணத்தை மணி போட்டுடைத்தான்.

இந்த பிரச்சினையை இதற்கு மேல் விட்டால் தேவையில்லாத குழப்பம்தான் என முடிவெடுத்த நான் கிச்சனுக்கு சென்று,”சிங்,கொஞ்சம் ஹாலுக்கு வாங்க. உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்” என்றேன்.அவர் ஹாலுக்கு வந்ததும்,”தோ பாருங்க சிங்.நான் புதுசா இந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கேன். என்னை இந்த சைட்டுக்கு போங்கன்னு சொன்னதாலே இங்கே வந்தேன். என்னாலே உங்களுக்கு மனக்கஷ்டம் வேண்டாம்.நான் இப்பவே சென்னை ஆபிஸ் பிராஜெக்ட் மேனேஜர்ட்ட பேசி இந்த சைட் பிடிக்கலை.வேற சைட்டுக்கு மாத்திக் கொடுங்கன்னு கேட்கிறேன்.நீங்க இங்கேயயே கண்டினியூ பண்ணுங்க” எனவும்,” இல்லை சார்.இது மேலிடத்துல நாலைந்து மாசம் முன்னாடியே முடிவு பண்ணது தான். நீங்க  இல்லைன்னாலும் வேற யாராவது வந்தா நான் போக வேண்டியதுதான். உங்க மேலே எனக்கு எந்த வருத்தமும் இல்லை.ரொம்ப நாள் பழகின இடத்தை விட்டுப்போறதனாலே மனசு சரியில்லை. அதான் உங்ககிட்டே மட்டுமில்லை… ரெண்டு மூணு நாளா யார்ட்டயுமே  நான் சரியா பேசலை. மணியும், சாஜனும் கூட அதனால்தான் அவங்க ரூம்ல இருந்து என்னைப் பார்க்க இந்த நேரத்தில் வந்திருக்காங்க.. வேறெந்த காரணமும் இல்லை.” எனத் தெளிவாகக் கூறி “பிரியாணி ரெடியாயிடுச்சு. வாங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்.” என அன்புடன் அழைத்தார். சாப்பிட்டு முடித்தவுடன் “ சார் நீங்க ரெஸ்ட் எடுங்க.நாளைக்கு காலைல நான் கிளம்பறதனோலே லோக்கல் ஃபிரெண்ட்ஸ் எல்லோரையும் பார்த்து சொல்லிட்டு வந்துடுறேன்” என்று கூறி விட்டு மணி மற்றும் சாஜனுடன் வெளியே கிளம்பிச் சென்றார்.

சிறிது நேரம் டி.வி பார்த்து விட்டு நானும் உறங்கச் சென்றேன்.காலையில் ஒன்பது மணிக்கு சென்றால் போதும் என்பதால் கொஞ்சம் மெதுவாக எழுந்து குளித்து கிளம்பினேன். அதற்குள் இரவு வேலைக்குச் சென்ற பாண்டேவும், தேசிங்கும் வந்து குளித்து கிளம்பி ராஜேஷ் சிங்கை வழியனுப்ப அவருடன் இரயில் நிலையம் செல்ல தயாராய் இருந்தனர். எல்லோரும் கிளம்பி சாரஸ்தா வர அங்கு பணிக்கு செல்ல நின்று கொண்டிருந்த மணியும்,சாஜனும் எங்களை நோக்கி வந்து ராஜேஷ் சிங்கை கைகுலுக்கி வழியனுப்பினர். அந்த நேரம் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேருந்தும் வந்து விட பணிக்குச் செல்ல வேண்டிய நாங்கள் மூவரும் ஓடிச்சென்று ஏறினோம்.கடைசி இருக்கையில் சென்று அமர்ந்து திரும்பி பார்த்த போது கவாண்டே பைக்கை நிறுத்தி சிங்குடன் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது.

நாங்கள் அலுவலகம் சென்ற சிறிது நேரத்தில் கவாண்டேவும் வந்து விட நான் செய்ய வேண்டிய பணிகள் பற்றி விளக்கி கூறி பின் அன்று முழுதும் அனைத்து டிபார்ட்மெண்டுகளுக்கும் அழைத்துச் சென்று முக்கிய அலுவலர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். ஆராய்ச்சிகத்தில் மின்சாரம் பெறும் சப் ஸ்டேசன் முதல் மின்சார விநியோகம் மற்றும் எல்லா டிபார்ட்மெண்டிலும் இருந்த ஃபர்னஸ்,ஓவன், பலதரப்பட்ட மோட்டார்கள் போன்ற மின் இயந்திரங்கள், ஜெனரேட்டர், மின் விசிறிகள், விளக்குகள் போன்ற மின்சாரம் சம்பந்தப்பட்ட மின்சாதனங்கள் பராமரிப்பு அனைத்தும் எங்கள் நிறுவனத்தின் பொறுப்பு என்பதால் அந்த வாரம் முழுதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிபார்ட்மெண்டாக மணியை உடன் அழைத்துச்சென்று அங்குள்ள மின் சாதனங்கள், இயந்திரங்கள், விளக்குகளின் இணைப்புகள் வரைபடத்தில் குறிப்பிட்டது போன்று இருக்கிறதா, அல்லது யாராவது ஏதாவது மாற்றம் செய்துள்ளார்களா என சரிபார்த்தேன். மதியம் கேண்டினில் உணவு, காலை,மாலை ஆராய்ச்சி நிறுவன பேருந்தில் சென்று திரும்புதல் என அந்த வாரம் கழிந்தது.

 சனி, ஞாயிறு ஆராய்ச்சியகம் விடுமுறை என்பதால் உள்ளே நாங்களும், பாதுகாப்புபணியில் இருந்த இராணுவ வீரர்களும் மட்டுமே இருந்தோம். கவாண்டேவும் பத்து மணியளவில் வந்து அரைமணி நேரம் இருந்து விட்டு போய் விட்டார். மதியம் மூன்று மணியளவில் சப்ஸ்டேசன் பக்கமாக பாரா வந்த செக்யூரிட்டி இராணுவ வீரரொருவர் “ என்ன மணி, கிரிக்கெட் விளையாடப் போகலாமா…” என அழைக்க உடன் பணிக்கு இருந்த உள்ளூர்க்காரரிடம், “நீ இங்கிருந்து பார்த்துக் கொள். ஏதாவது பிரச்சினை என்றால் என் செல்லில் கூப்பிடு.உடனே வந்து விடுவோம்.” என்று கூறி விட்டு “ சார். வாங்க கிரிக்கெட் விளையாடப் போகலாம்” என்று என்னையும் அழைத்தான்.”இல்லை மணி. நீன்னா போ. நான் இங்கேயே இருக்கேன் என்றவனிடம்,” சார், இப்பவே மூணு மணி தாண்டியாச்சு. போய் ஒரு மணி நேரம் விளையாடிட்டு அப்படியே கிளம்ப சரியா இருக்கும். நீங்க விளையாட வராட்டாலும் சும்மா உட்கார்ந்து வேடிக்கையாவது பாருங்க.வாங்க..வாங்க….” என்று மணி தொடர்ந்து வற்புறுத்த நானும் அவனுடன் கிளம்பி வெளிச்சுற்று சுவருக்கு அருகே இருந்த விளையாட்டு மைதானம் வந்தோம்.

மணி அவர்களுடன் இறங்கி விளையாட நான் மைதானத்தின் ஒரு பக்க எல்லையில் இருந்த மரத்தின் அடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பத்து பேர் மட்டுமே விளையாடுவதால் ஆளுக்கு இரண்டு ஓவர் பேட்டிங். மற்றவர்கள் பவுலிங், ஃபீல்டிங். இரண்டு ஓவருக்குள் அவுட்டாகாமல் அதிக ரன் எடுப்பவரே வின்னர். மற்ற விதிமுறைகள் வழக்கம் போல.ஆட்டம் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்த நேரத்தில் நான் அமர்ந்திருந்த திசையை நோக்கி ஒருவர் ஓங்கி அடித்த பந்து என்னைத் தாண்டி வெகுதூரம் செல்ல என்னை எடுத்துத் தருமாறு கேட்டுக்கொண்டு அவர்களிடமிருந்த மற்றொரு பந்தை வைத்து விளையாட்டைத் தொடர்ந்தனர்.

பந்து விழுந்த இடத்தை நான் பார்க்காததால் உத்தேசமாக தேடிக்கொண்டு சுற்றுச்சுவரின் உள்பக்க எல்லை வரை வந்துவிட்டாலும் புற்களும், புதர்களும், சிறுகுறு செடி, கொடிகளுமாய் அடர்ந்திருந்ததால் பந்து கன்ணில் படவேயில்லை.அப்போது சற்றுத்தள்ளி சடசட,சரசரவென வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்க நரியோ, பாம்போ அல்லது வேறெதுவும் காட்டுவிலங்கோ என பதட்டமடைந்து மைதானம் நோக்கி திரும்பி நடக்கத்தொடங்கியவனை மேலும் பயந்து பதறவைத்தாள் திடீரென என்முன் வந்து வழிமறித்து நின்ற காஞ்சனா.

                                                            ( தொடரும் )
                                        
                                   பாகம் 4

Monday, October 01, 2012

காலை உடைத்த காஞ்சனா…. - பாகம் 2


கடந்த எட்டாண்டிற்கு முன் என் வாழ்வில் நடந்த இத்தனை காலமாக தைத்த முள்ளாய் என் மனதில் தழும்பேறியிருந்த இந்த நிகழ்ச்சியின் அனுபவப் பகிர்வே காலை உடைத்த காஞ்சனா….ஆகும்.


முதல் பாகமான  பாலாப்பூர் சாரஸ்தா படித்துவிட்டு பின் இரண்டாம் பாகமான இங்கு தொடரவும்.


பாகம் 2 ஆராய்ச்சி நிறுவனமும், அரசாங்க விதிகளும்….

என் அதிர்ச்சிக்கு காரணம் வரவேற்பறையில் இருந்த அதே பெண் கேமராவை சரிசெய்தவாறு புகைப்படம் எடுக்கத் தயாரானதே. ஆம். அந்தக் கடையில் அந்தப் பெண்தான் ஆல் இன் ஆல் அழகு ராணி. சுருக்கமாகச் சொன்னால் ஓனர் கம் ஊழியை.. “என்ன சார் எப்படி எடுக்கணும். கோட் போட்டா அல்லது சாதாரணமாகவா...” என்று இந்தியில் கேட்டவளிடம்,    ”சாதாரணமாத்தான்…” என பதில் கூறினேன். குறுகுறு சிரிப்புடன் கூடவே வந்து நின்ற பாண்டே என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டியவாறு  “எப்படி…” என்ற பாவனையில் தலையை அசைத்தான். போட்டோ எடுத்து முடித்து காப்பி வாங்குவதற்காக காத்திருந்த பத்து நிமிடமும் பாண்டே அவளைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான். 

ஒரு வழியாக போட்டோ வாங்கிக் கொண்டு சாரஸ்தா வந்து ஷேர் ஆட்டோவில் ஏறி சுமார் பத்து கிலோமீட்டர் பயணம் செய்து இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு துறையின் அதிமுக்கிய ஆராய்ச்சி நிறுவனம் என்று அறிவிப்பு பலகை வைத்திருந்த இடத்தில் இறங்கினோம்.சரியான பொட்டல் காடு. கண்ணில் பட்டவரை ஆள் நடமாட்டமே இல்லை.ஆராய்ச்சி நிறுவனத்தின் கோட்டை போன்ற மதில் சுவரும் பிரமாண்டமான இரண்டு பெரிய இரும்புக் கதவுகளும் அந்த இடத்தின் முக்கியத்துவத்தை சொல்லாமல் சொல்லின. கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த போது “கோன் ஹை” என்ற மிரட்டலான குரல் மிரள வைத்தது.


காம்பவுண்ட் சுவரினுள் வெளியிலிருந்து பார்த்தால் தெரியாத வகையில் அமைந்திருந்த செக்யூரிட்டி அறையில் இருந்து எழுந்து வந்த இராணுவ வீரரொருவர் “நான்தான்” என்று கூறிய பாண்டேயிடம் “ஒருமணி நேரம் முன்னாடிதானே வேலை முடித்துச் சென்றாய்...ஏன் திரும்பி வந்தாய்… இவர் யார்... எங்கே அழைத்துச் செல்கிறாய்..” என கேள்வி மேல் கேள்வியாய் அடுக்கினார்.”இவர் புதிதாக வந்துள்ள பொறியாளர். இடம் தெரியாது என்பதால் கேட் பாஸ் போட்டு உள்ளே அழைத்துப் போக வந்தேன்” என்று பதறாமல் பாண்டேவும் பதில் கூற உள்ளே செல்ல அனுமதி தந்தார்.
காட்டு மரங்கள் அடர்ந்து சூழ்ந்திருந்த சாலையில் வழியில் இருந்த விருந்தினர் இல்லம் மற்றும் விளையாட்டு மைதானத்தைக் கடந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற போது இன்னொரு காம்பவுண்ட் சுவரும் பசுமையான பின்னணியில் ஆராய்ச்சியகத்தின் பல கட்டடங்களும் கண்ணில் பட்டன. நுழைவு வாயிலின் அருகில் இருந்த செக்யூரிட்டி அலுவலகம் சென்று தற்காலிக நுழைவுச்சீட்டு எடுத்து மின்சாரத்துறையின் கட்டிடம் சென்றோம். அங்கு ஏற்கனவே காத்திருந்த மேலாளர் கவாண்டே மின்துறையின் உயரதிகாரியான திரு.மாதவராவிடம் நேர்முகத்தேர்விற்காக அழைத்துச் சென்றார்.ஆம்.ஏற்கனவே எங்கள் நிறுவனம் பலகட்டத்தேர்வுகள் முலம் என்னை தேர்வு செய்திருந்தாலும் ஆராய்ச்சியக விதிப்படி அவர்களுக்கு திருப்தி இருந்தால் மட்டுமே அங்கு பணியில் சேரமுடியும். 
 மாதவராவும் அவரது உதவியாளர் சீனிவாசராவும் எனது சான்றிதழ் நகல்களைப் பார்வையிட்டு அனுபவ ரீதியாகவும், சம்பிராதாயகமாகவும் பல கேள்விகள் கேட்டு திருப்தியடைந்தவர்களாய் கவாண்டேவைப் பார்த்து தலை அசைக்க உடனே அவரும் எனது புகைப்படம் ஒட்டிய நிரந்தர அனுமதி நுழைவுச்சீட்டில் கையொப்பமும், முத்திரையும் வாங்கிக்கொண்டார். பின் அங்கிருந்து வெளியே வந்ததும் “உணவு வேளை ஆகி விட்டது. நீங்கள் இருவரும் கேண்டீன் சென்று சாப்பிட்டுவிட்டு அப்படியே இவரை கொண்டு போய் டிபார்ட்மெண்டில் விட்டுவிட்டு நீ கிளம்பு. நான் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்” என்று கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் கவாண்டே கிளம்பிச் சென்றார். 
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பலரும் பணி புரியும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கேண்டின் என்பதால் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், விசாலமாகவும் இருந்தது. வரிசையில் நின்று உணவை வாங்கிக் கொண்டு எங்களைப் போன்ற தனியார் நிறுவன ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட மேல்மாடிக்கு பாண்டே அழைத்துச் சென்றான்.அந்த விரிந்து பரந்த அறையினுள் நுழைந்தவுடன் சுற்றும், முற்றும் பார்த்த பாண்டே எங்கள் நிறுவன சீருடை அணிந்து வலது கோடி சாப்பாட்டு மேஜைகளில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோர் நோக்கி அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி விட்டு சாப்பிடத் தொடங்கினோம்.சாப்பிட்டு முடித்ததும் மணி, காந்தி,சாஜன்,மதி என்ற அந்த நால்வரிடமும் என்னை அலுவலகம் அழைத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டு பாண்டே கிளம்பிச் சென்றான். 
மற்ற மூவரும் அவரவர் பணிக்கு சென்றுவிட மணி மட்டும் என்னை அழைத்துக்கொண்டு சிறுகுன்று போல மேடான இடத்திலிருந்த மொத்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் மின்சாரம்  விநியோகிக்கும் சப்ஸ்டேசனுடன் இணைந்த எங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான்.அந்த இடத்தில் இருந்து பார்த்தால் ஆராய்ச்சி நிறுவனத்தின் எல்லா இடமும் தெரியும் என்பதால் சப்ஸ்டேசனுக்குப் பின்னே உயரமான வாட்சிங் டவரும் இருந்தது.சப்ஸ்டேசன் உள்ளே பேனல் அறையில் அமர்ந்து லாக் புக் எழுதிக்கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்கவரிடம் “சிங் சார், இவர்தான் புதிதாக வந்திருக்கும் இன்சார்ஜ்…” என மணி என்னை அறிமுகப்படுத்த நிமிர்ந்து கூட பார்க்காமல் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாமல் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்தார். மணியோ என்னை அங்கேயிருந்த இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த அறைக்குள் சென்றுவிட்டான். அப்படியே அமைதியாக அரைமணி நேரம் கழிய திடீரென பக்கத்து அறையைப் பார்த்து “மணி. நான் கிளம்பறேன்..” என்று சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்து சென்றார் அவர்.



அவருடன் வெளியே சென்று பேசி வழியனுப்பி விட்டு வந்த மணி “அவர்தான் ராஜேஷ் சிங். கவாண்டே சாருக்கு அடுத்த இன்சார்ஜ்” என்றான்.அந்த நேரம் வெளியே மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்க எட்டிப் பார்த்த மணி “கவாண்டே சார் வந்துட்டாரு..” என்றபடி எழுந்து நின்றான்.உள்ளே வந்த கவாண்டே “மணி, ஜூலை மாத டைம் சீட்டை எடுத்துக்கொண்டு போய் எல்லா டிபார்ட்மெண்ட் H.O.D.ட்டேயும் போய் கையெழுத்து வாங்கிட்டு வந்துடு.போறதுக்கு முன்னாடி நம்ம எல்லா சப்ஸ்டேசன் டிராயிங்ஸ், புது பிராஜெக்ட் ஃபைல் எல்லாம் இவர்ட்ட ஸ்டடி பண்ண எடுத்துக் கொடுத்திடு.” என்று சொல்லி விட்டு அவரது அறையினுள் சென்றார். அவர் சொன்ன எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்துவிட்டு மணி வெளியே சென்றுவிட நானும் அவற்றைப் பார்த்து குறிப்பெடுப்பதில் மூழ்கிவிட்டேன்.  
சுமார் ஐந்து மணியளவில் மணி திரும்பி வந்ததும் கிளம்பிய கவாண்டே “நீயும் என்னுடன் மோட்டார் சைக்கிளில் வா. அறையில் விட்டுச்செல்கிறேன்”. என்று கூறி அழைத்துச் சென்றார். காலையில் ஆட்டோ வந்த பாதையில் செல்லாமல் ஆராய்ச்சி நிறுவன வெளிச்சுற்றுச் சுவரின் பக்கவாட்டில் அமைந்திருந்த மண் குறுக்குச்சாலை வழியாக பாலாப்பூர் சாரஸ்தா வந்து தங்குமில்லத்தின் வெளியில் விட்டுவிட்டு கவாண்டே புறப்பட்டுச் சென்றார்.


நான் உள்ளே நுழையும் நேரம் இரவு வேலைக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்த பாண்டேவும், தேசிங்கும் உள்ளே இருந்த படுக்கை அறையை கூட்டிச் சென்று காட்டி “நீங்கள் இந்த அறை மற்றும் அலமாரிகளை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிச் சென்றனர். அவர்கள் சென்ற பின் காலையில் கொண்டு வந்து வைத்திருந்த பயணப்பெட்டி மற்றும் பைகளை படுக்கை அறைக்கு எடுத்துச் சென்று பிரித்து உடைகள் மற்றும் தேவையான பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு படுக்கையில் படுத்தவன் முந்தைய இரவின் நெடிய இரயில் பயண அலுப்பினாலும் பகலில் ஓய்வு எடுக்காத காரணத்தினாலும் அப்படியே கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன். திடீரென படுக்கை அறைக்கு வெளியில் பரபரப்பான பேச்சுக்குரல் கேட்கவே திடுக்கிட்டு உறக்கம் கலைந்து கண் விழித்தேன்.
(தொடரும்)

பாகம் 3 

Friday, September 28, 2012

காலை உடைத்த காஞ்சனா….


உருண்டோடும் இந்த பூமிப்பந்தில் ஆச்சரியங்களும், அதிசயங்களும் மட்டுமல்ல அமானுஷ்யங்களும் நிறைந்ததுதான் பாச,பந்தங்களால் பிணைக்கப்பட்ட மானிட வாழ்க்கை. ஏற்றம், இறக்கம் எத்தனையோ கொண்ட வாழ்வின் பல கட்டங்களில் நான் சந்தித்த பல அசந்தர்ப்பமான சம்பவங்களை ஏற்கனவே





போன்ற பதிவுகளில் பகிர்ந்துள்ளேன். கடந்த எட்டாண்டிற்கு முன் என் வாழ்வில் நடந்த இத்தனை காலமாக தைத்த முள்ளாய் என் மனதில் தழும்பேறியிருந்த இந்த நிகழ்ச்சியும் மேலே குறிப்பிட்டவை  போன்ற ஒரு அனுபவப் பகிர்வே ஆகும்.
காலை உடைத்த காஞ்சனா….



பாகம் 1 – பாலாப்பூர் சாரஸ்தா


மின்னியலில் தொழில்நுட்ப படிப்பு முடித்து சென்னை சென்று வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தில் பணி நிமித்தமாக அவ்வப்போது இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று வந்தாலும் பத்தாண்டுகளாக பெரும்பாலும் தாய்த்தமிழ்நாட்டில்தான் பணி. ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிறுவனத்தின் ஆந்திர மாநில கிளைத்திட்டத்தில் நல்லதொரு வாய்ப்பு கிடைக்க 2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி ஞாயிறன்று சென்னையில் இருந்து கிளம்பி தெலுங்கு தேசம் சென்றேன். ஹைதராபாத் இரயில் நிலையத்தில் இறங்கி கிளை மேலாளரை அலைபேசியில் தொடர்பு கொண்டு செல்ல வேண்டிய இடத்தின் முகவரி வாங்கினேன். சென்னையின் தியாகராயநகர் போன்ற வணிக அங்காடிகள் நிறைந்த கோட்டி எனும் இடம் தாண்டி DRDO வழியாக பாலாப்பூர் எனும் ஊரை ஆட்டோ மூலம் அடைந்தேன்.  

பாலாப்பூர் இயற்கை வளம்மிக்க பசுமையான பல அழகான கிராமங்கள் சூழ்ந்த குடியிருப்புகள் நிறைந்த ஊர். பல சிறிய கிராமங்களும் கிளைச்சாலைகள், இணைப்புச்சாலைகளால் இணைக்கப்பட்ட நான்கு முக்கிய சாலைகளின் சந்திப்பாக (கூட்டு ரோடு) பாலாப்பூர் சாரஸ்தா (சார்+ரஸ்தா) இருந்தது. கிராமங்களில் இருந்து வரும் பால், அரிசி, கீரை, காய்கறிகள் சுத்தமாகவும், விலை குறைவாகவும் கிடைப்பதால் ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களில் வேலை செய்யும் பலரும் பாலாப்பூரில் குடும்பத்தோடு தங்கி இருந்தனர். எங்கள் திட்ட அலுவலகம் இருந்த இடம் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் RCI செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் இருந்தது. எனவே எங்கள் நிறுவனமும் பாலாப்பூரிலே தங்கும் இடம் ஏற்பாடு செய்திருந்தனர். 

நான் தங்கும் இல்லத்தை அடைந்த போது மணி காலை ஒன்பது ஆகிவிட்ட படியால் அங்கு தங்கியிருந்த அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர். அங்கு காத்திருந்த கிளை மேலாளரான கவாண்டே எனும் மராட்டியர் என்னைப் பார்த்தவுடன் “ஹிந்தி தெரியுமா” என்று கேட்கவும் “தோடா தோடா” என்றேன். இரவுப்பணிக்கு சென்ற இரண்டு பேர் வரும் வரை என்னிடம் பேசிக்கொண்டிருந்த அவர் அதில் வடமாநிலத்தை சேர்ந்தவன் போலிருந்தவனிடம் நான் குளித்து கிளம்பியவுடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் போன்றவற்றோடு அலுவலகம் அழைத்துக்கொண்டு வருமாறு கூறிச்சென்றார். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அவனது பெயர் நரேந்திர குமார் பாண்டே என்றும் தமிழ்நாட்டின் செஞ்சியைச் சேர்ந்த இன்னொருவனது பெயர் தேசிங்கு எனவும் அவர்களுடனான அறிமுகத்தின்போது அறிந்தேன். 

நீண்ட இரயில் பயணக் களைப்பிற்கு இதமான வெந்நீரில் குளித்து, கிளம்பிய நேரத்தில் தேசிங்கு காலை உணவாக உப்புமா செய்துவிட சாப்பிட்டுவிட்டு தேவையான சான்றிதழ்களோடு கிளம்பி சென்றோம்.கையில் புகைப்படம் இல்லாத காரணத்தினால் சாரஸ்தா அருகில் இருந்த ஸ்டூடியோவிற்கு பாண்டே அழைத்துச் சென்றான். “தங்கும் இடத்திலிருந்து சாரஸ்தா வரும் வழியில் பல புகைப்பட நிலையங்கள் இருக்க ஏன் இங்கு அழைத்து வந்தான்…” என்று என் மனதில் எழுந்த கேள்விக்கு வரவேற்பறையில் அமர்ந்திருந்த அழகிய இளம்பெண்ணே பதிலாய் இருந்தாள். 

கடைக்கு உள்ளே நுழைந்தவுடன் அந்த பெண்ணிடம் “க்யாஹை….கைஸாஹை….”என்று பேச ஆரம்பித்த பாண்டே என்னை புகைப்படம் எடுக்கும் அறைக்குள் சென்று தயாராகச் சொன்னான். அந்த அறையில் இருந்த பெரிய கண்ணாடி முன் நின்று தலைக்கேசம் சரியாக இருக்கிறதா எனப்பார்த்துக் கொண்டிருந்த போது வெளியில் பாண்டே அந்தப் பெண்ணுடன் சத்தமாக உரையாடுவதும் அவள் கலகலவென்று சிரிப்பதும் காதில் விழுந்தது. கைக்குட்டையால் முகத்தை லேசாக துடைத்து விட்டு கேமரா முன் இருந்த நாற்காலியில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவன் “போட்டோ எடுக்கலாமா…” என்ற குரல் கேட்டு நிமிர்ந்ததும் அதிர்ந்தேன்.

Tuesday, July 03, 2012

ம்ம்ம்முடியலை.....


 சூப்பர்மடபுரம்
மதுரையை மையமாக வைத்த மாபெரும் திரைக்காவியம்