அன்பு தந்தையே...
எந்நாளும் எங்கள்
வளர்ச்சியையே
எண்ணும் உங்கள்
சிந்தையே...
உங்களாலே இன்று
உற்சாகமாக உதைத்து
ஆடுகிறோம்
வாழ்க்கை பந்தையே...
நீங்கள்
ஏணியாய் இருந்து
ஏணியாய் இருந்து
எங்களை ஏற்றம்
காண செய்தீர்கள்...
நல்ல மாற்றம்
பல காண செய்தீர்கள்...
எத்தனை வயதானாலும்
குழந்தைகள் தான்
நாங்கள்
உங்களுக்கு...
எப்போதும் வேண்டும்
உங்கள் அன்பெனும்
ஆலமர நிழல்
எங்களுக்கு...
