Tuesday, September 27, 2011

காதல் காலம்



தை, மாசி
கன்னியவள்
தைத்திட்டாள்
என் மனதில்
கதை
   பல பேசி...



பங்குனி, சித்திரை
பந்தம் கொண்டவள்
படுத்திய பாட்டில்
பங்கம் கண்டது
     என் நித்திரை.....



வைகாசி, ஆனி
எங்கள் காதல்
ஏறியது இனிதே
பல ஏணி....



ஆடி, ஆவணி
இணைந்தே
பாடிட்டார்
இருவீட்டாரும்
  எதிர்லாவணி....



புரட்டாசி, ஐப்பசி
புதுவாழ்வில்
இறங்கிட்டோம்
புறந்தள்ளி
     பல சதி.....



கார்த்திகை, மார்கழி
காதல் களியில்
புது உறவொன்று
உருவாக
இனி
எங்கள் வாழ்வில்
தினம், தினம்
தீபாவளி.




4 comments:

'பரிவை' சே.குமார் said...

மாதங்களில் அவள் கவிதையாய் மலர்ந்திருக்கிறாள்.

உணவு உலகம் said...

தினம் தினம் தீபாவளி.தித்திக்கட்டும்.

துபாய் ராஜா said...

// சே.குமார்said...
மாதங்களில் அவள் கவிதையாய் மலர்ந்திருக்கிறாள்.//

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே...

துபாய் ராஜா said...

//FOOD said...
தினம் தினம் தீபாவளி.தித்திக்கட்டும்.//

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி சித்தப்பா சார்...