Saturday, October 01, 2011

காரணம் என்னடி...



கட்டி அணைத்து
முத்தம் கொடுத்தால்
கன்னங்கள் சிவக்கும்
சரிதான்....


ஆனால்
எட்டி நின்று 
ரசிக்கும்போது கூட
நித்தம்
உன் கன்னங்கள்
  சிவப்பதன்
காரணம் என்னடி...

------------------------

மோதலின் போது
ஒரு கன்னத்தில்
அறைந்தால்
மறுகன்னத்தை காட்டு
    தத்துவம் சொல்லும் நீ.....


மிகுந்த காதலின்போது
உன்னொரு கன்னத்தில்
முத்தமிட்டால்
மறுகன்னம் காட்ட
மறுப்பதன்
காரணம் என்னடி...


11 comments:

vasu balaji said...

:) ahaa

முனைவர் இரா.குணசீலன் said...

நயமாக ஒரு கவிதை..

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை.

ராஜாவுக்கு சிரிப்பழகி மேலதான் பிரியமோ...
எல்லாக் கவிதைகளும் சினேகமாய் சிரிக்கிறதே...

துபாய் ராஜா said...

// வானம்பாடிகள்said...

:) ahaa //

வரவிற்கும் கருத்திற்கும் நன்றி பாலா சார்.

துபாய் ராஜா said...

//முனைவர்.இரா.குணசீலன்said...

நயமாக ஒரு கவிதை..//

வரவிற்கும் நல்லதொரு கருத்திற்கும் நன்றி பேராசிரியரே...

துபாய் ராஜா said...

// சே.குமார்said...

கவிதை அருமை.

ராஜாவுக்கு சிரிப்பழகி மேலதான் பிரியமோ...
எல்லாக் கவிதைகளும் சினேகமாய் சிரிக்கிறதே... //

வரவிற்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே. சினேகமான சிரிப்பழகியின் படம் காரணம் எனது ஆரம்பகால பதிவுகளை படித்தால் படித்தால் புரியும் தோழரே... :))

உணவு உலகம் said...

காதல் ரசம்.

உணவு உலகம் said...

ஆனாலும் ஆசை அதிகம்தான்.

துபாய் ராஜா said...

// FOOD said...

காதல் ரசம்.//

//FOOD said...

ஆனாலும் ஆசை அதிகம்தான்..//

போங்க சித்தப்பா சார். எனக்கு வெட்கம், வெட்கமா வருது. :))

சி.பி.செந்தில்குமார் said...

rhyme is neet

துபாய் ராஜா said...

// சி.பி.செந்தில்குமார்said...

rhyme is neet//

Thanx for ur Comment.