Saturday, September 24, 2011

கண்டவர் விண்டிலர்….



அனுநித்தம் கனவில் வந்திட்ட
அழகுமுத்தம் பல தந்திட்ட
கனதினம் பிரிந்திட்ட
காதலி தொலைவில் வந்திட
கண்கள் நோக்கிட
காதல் பெருக்கிட
இதயநீர் இளகிட
இமைகள் நனைந்திட
உதடுகள் ஒட்டிட
உள்நாக்கு உலர்ந்திட
கட்டி அணைத்திட
கைகள் துடித்திட
கண்ணியம் தடுத்திட
அருகே அழைத்திட
அவள் பெயரும் மறந்திட
ஏதேதோ என்னுள் நடந்திட
உலகமொழியெலாம்
ஒரு வார்த்தை இல்லை
தன்நிலை மறந்திட்ட
என்நிலை விளக்கிட….



8 comments:

ஆடுமாடு said...

அட அட அட ஏன் இப்படி?
சினேகா கோவிச்சுக்கப் போவுது அண்ணாச்சி.

துபாய் ராஜா said...

கோச்சுகிட்டாதான் சமாதானப்படுத்த ரெண்டு பேருக்கும் பொதுவான ஆளு நீங்க இருக்கியல்லா அண்ணாச்சி. :))

குறையொன்றுமில்லை. said...

கவிதையா?/ ஒகே, ஓகே.

துபாய் ராஜா said...

// Lakshmi said...
கவிதையா?/ ஒகே, ஓகே.//

நீங்க சொன்னா சரிதான் அம்மா.. :))

'பரிவை' சே.குமார் said...

அருமை.... அருமை.... அருமை...

உணவு உலகம் said...

அருமையான கவிதை.

துபாய் ராஜா said...

// சே.குமார்Sep 25, 2011 11:35 AM

அருமை.... அருமை.... அருமை...//

நன்றி... நன்றி..நன்றி.

துபாய் ராஜா said...

// FOOD மொழிந்தது...

அருமையான கவிதை.//

ரசிப்பிற்கும்,ரசனையான கருத்திற்கும் நன்றி சித்தப்பா சார்.