Tuesday, October 18, 2011

வேண்டும்….வேண்டும்...


                   பற்றற்ற வாழ்க்கைக்கு பழக வேண்டும். 
            முற்றற்ற நிலைக்கு முயல வேண்டும்.
              குற்றற்ற சொல், செயல் புரிய வேண்டும்.


         திக்கற்ற திசையெலாம் திரிய வேண்டும்.
தென்பட்ட தெய்வமெலாம் வணங்க வேண்டும். 
புண்பட்ட மனமெலாம் உதவ வேண்டும்.
கண்பட்ட மொழி, கலையெலாம் பயிலவேண்டும்
பண்பட்ட பலகுணம் பார்க்க வேண்டும்.


மானம் மறை உடை உடுத்த வேண்டும்.
ஞானம் தரும் உணவு படுத்த வேண்டும்.
ஈனமில்லா இடத்தில் உடல் கிடத்த வேண்டும்.

வேண்டும்... வேண்டும் என்ற எண்ணம்
வேண்டாம் என்ற எண்ணம் வேண்டும்.


இறந்த காலம் எளிதாய் கடந்துவிட்டோம்.   
வரும்காலம் வருத்தமின்றி வாழவேண்டும்
    நிகழ்காலம் நேர்மையாய் நாம் நடந்து கொண்டால்....  

8 comments:

vasu balaji said...

நல்லாருக்கு ராஜா

துபாய் ராஜா said...

// வானம்பாடிகள்said...

நல்லாருக்கு ராஜா //

வரவிற்கும், கருத்திற்கும் நன்றிங்க ஐயா...

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லாருக்கு ராஜா

'பரிவை' சே.குமார் said...

நல்லாருக்கு.

ஹேமா said...

மனதில் திருப்தி இருந்தாலே போதும்.இத்தனை வேண்டுக்களையும் வேண்டிவிடலாம் !

துபாய் ராஜா said...

நண்பர்கள் ஸ்டார்ஜன், சே.குமார் வரவிற்கும், கருத்திற்கும் நன்றி.

துபாய் ராஜா said...

// ஹேமாsaid...

மனதில் திருப்தி இருந்தாலே போதும்.இத்தனை வேண்டுக்களையும் வேண்டிவிடலாம் ! //

ஹேமா, கனநாளுக்கு பின்னான வருகைக்கும், கருத்திற்கும் நன்றியும் மகிழ்ச்சிகளும்...

ஆடுமாடு said...

நல்லாருக்கு அண்ணாச்சி