Saturday, September 26, 2009

மீண்டு(ம்).......



படங்கள், பதிவு எல்லாம் ரெடி பண்ணி வச்சாச்சு. திடீர்னு ஒரு வைரஸ் வந்து ஆபிஸ்ல பாதிபேர் சிஸ்டத்தை காலி பண்ணிடுச்சு. மூணு நாளா ஒரே போராட்டம். பல தடவை ஃபார்மட் பண்ணியும் சரிவரலை. இப்போதான் பரவாயில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணிணியில் எழுதி வச்சிருந்த பல கவிதைகள், அனுபவங்கள், கதைகளுக்கான குறிப்புகள், சேகரித்த படங்கள் எல்லாம் காலி. நல்லவேளை சில குறிப்புகள் டைரில எழுதி வச்சிருந்தாலும் இழந்தது ஏராளம்.


இப்போ எல்லாமே முதல்ல இருந்து தொடங்கணும். விடமாட்டம்ல......

சுற்றும் வரை பூமி.
சுடும் வரை நெருப்பு.
போராடும்வரை மனிதன்.

அதுவும் நாம தாமிரபரணி தண்ணி குடிச்ச தன்மானத்தமிழன். விடுவோமா. எத்தனை முறை விழுந்தாலும் வீறு கொண்டு எழுவோம்ல. விரைவில் விட்டதை எல்லாம் பிடிப்போம் நல்லபடியாக நண்பர்கள் உங்கள் ஆதரவோடு.....

10 comments:

கலகலப்ரியா said...

வாங்க வாங்க..

//சுற்றும் வரை பூமி.
சுடும் வரை நெருப்பு.
போராடுவரை மனிதன்.//

வந்த உடனே காப்பியடிக்கராங்களே..

துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...
வாங்க வாங்க..

//சுற்றும் வரை பூமி.
சுடும் வரை நெருப்பு.
போராடுவரை மனிதன்.//

வந்த உடனே காப்பியடிக்கராங்களே..//

'ப்ரியா'க்கா இது உங்களை மாதிரியே எனக்கும் பிடிச்ச வைரமுத்துவோட வைரவரிகளுங்கோ..... :))

ஹேமா said...

ராஜா,வந்தாச்சா.நீங்க சுகம்தானே.

//அதுவும் நாம தாமிரபரணி தண்ணி குடிச்ச தன்மானத்தமிழன். விடுவோமா. எத்தனை முறை விழுந்தாலும் வீறு கொண்டு எழுவோம்ல. விரைவில் விட்டதை எல்லாம் பிடிப்போம் நல்லபடியாக நண்பர்கள் உங்கள் ஆதரவோடு.....//

ஒண்ணும் யோசிக்காதீங்க.
எல்லாம் வெற்றிதான்.

பிரபாகர் said...

வாங்க ராஜா...

எப்போவும் பேக்கப் எடுத்து வெச்சிடுங்க ஒரு சேஃப்டிக்கு...

மைல்ல ட்ரfடா ஸ்டோர் பண்ணிட்டா போக வாய்ப்பில்ல...

பயண அனுபவங்களை எழுதுங்க... காத்திருக்கிறோம்...

பிரபாகர்.

vasu balaji said...

/எத்தனை முறை விழுந்தாலும் வீறு கொண்டு எழுவோம்ல. விரைவில் விட்டதை எல்லாம் பிடிப்போம் நல்லபடியாக நண்பர்கள் உங்கள் ஆதரவோடு...../

அது. தட்ஸ் த ஸ்பிரிட். அசத்துங்க ராஜா

Starjan (ஸ்டார்ஜன்) said...

திருநெல்வேலிக்காரங்க நாம ...

சந்தனமுல்லை said...

/விரைவில் விட்டதை எல்லாம் பிடிப்போம் நல்லபடியாக நண்பர்கள் உங்கள் ஆதரவோடு...../

:-) வாழ்த்துகள்!

கிளியனூர் இஸ்மத் said...

ராஜா....வந்துட்டீங்களா.....சிஸ்டத்துல வைரஸ்வந்தால் என்ன?.......நீங்க டிஎன்ஏ ஆச்சே....கலக்குங்க.............

தேவன் மாயம் said...

/விரைவில் விட்டதை எல்லாம் பிடிப்போம் நல்லபடியாக நண்பர்கள் உங்கள் ஆதரவோடு...../

வாங்க வாங்க!

க.பாலாசி said...

வாருங்கள் நண்பரே....தொடருங்கள்...