Tuesday, September 15, 2009

அண்ணா,அண்ணா,அண்ணா....




தலைவர்கள்
தொண்டர்களை
உருவாக்குகிறார்கள்.
சிறந்த தலைவர்கள்
சிறந்த தலைவர்களை
உருவாக்குகிறார்கள்.


என்ற அரசியல் மொழிக்கேற்ப சிறந்த தலைவராக வாழ்ந்தவர் திரு.அறிஞர் அண்ணா. சிறந்த எழுத்தாளரான அவரது கதைகள் பல நாடகங்களாக வெளிவந்து புதிய சரித்திரம் படைத்தன. பேச்சுவன்மை மிக்கவர். முதல்வராக இருந்தபோது 'சென்னை மாகாணம்' என்றிருந்ததை 'தமிழ்நாடு' என்று பெயர்மாற்றி தமிழர் உள்ளமெலாம் உவகை அடையச் செய்தவர். தமிழகத்தில் இன்றளவும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட காரணமானவர். எண்ணற்ற புகழ் மாலைகள் பல ஏந்தியவர். அன்னாரது நூற்றாண்டு நிறைவு நாளான இன்று மட்டுமல்ல என்றென்றும் தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்திருப்பார்.


3 comments:

லோகு said...

சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு

நையாண்டி நைனா said...

ok.. double visil.

ஹேமா said...

மறைந்தாலும் மறையாத மூத்தவர்கள்.
வாழ்த்துவோம் வணங்கி.