Monday, August 24, 2009

இருக்கும் இடத்திலிருந்து ஒரு கூட்டுப்பிரார்த்தனை....



அன்பு நண்பர்களே, நண்பர் திரு.செந்தில்நாதனின் இதய அறுவை சிகிச்சைக்காக பதிவர் உலகமே ஒன்றுகூடினோம்.


வருகிற வியாழக்கிழமை அன்று (27 Aug 2009) திரு.செந்தில்நாதனுக்கு VAD (Ventricular Assist Device) அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறி நமது செந்தில்நாதன் மீண்டும் முழு தெம்புடன் நலமுடன் வாழவும் நாம் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். இனம், மதம் கடந்த கூட்டுப் பிரார்த்தனைக்கு என்றுமே பலன் உண்டு. அந்த நம்பிக்கையில் நாமும் பிரார்த்திப்போம். உதவிக்காக ஒன்றிணைந்தது போலவே பிரார்த்திக்கவும் ஒன்றிணைவோம். .


அறுவை சிகிச்சை விபரம்:

நாள்: 27 ஆகஸ்ட் 2009


நேரம்: காலை எட்டு மணி சிங்கப்பூர் நேரம்(இந்திய நேரப்படி காலை ஐந்தரை மணி)


சிகிச்சைக்கான குறைந்தபட்ச நேரம்: ஏழு மணி நேரங்கள்.


நண்பர்கள் அனைவரையும் சிகிச்சை நடக்கும் நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் இணையும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

7 comments:

- யெஸ்.பாலபாரதி said...

செந்தில் நலமுடன் வீடு திரும்புவார்.. நம்புக்கை இருக்கிறது.. ராசா

ஜோசப் பால்ராஜ் said...

உங்கள் நண்பிற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் அனைவரின் வேண்டுதலால் அண்ணண் பூரண நலமடைவார்.

*இயற்கை ராஜி* said...

செந்தில் நாதன் அண்ணா குணமடைய நிச்சயமாய் பிரார்த்த்னைகள் உண்டு

Jerry Eshananda said...

இந்த கூட்டு பிரார்த்தனையில் என் குடும்பத்துடன் பங்கெடுக்கிறேன்.

Bhuvanesh said...

கண்டிப்பா கலந்துக்கறேன் ராஜ சார் !
அவர் கண்டிப்பாக நலம் பெறுவார் !

நீங்கள் அனைவரும் செய்வது நல்ல முயற்சி ! உங்கள் மனிதத்துக்கு ஒரு சல்யூட்!!

இரசிகை said...

naanum athil.........

சந்தனமுல்லை said...

பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு! எனது பிரார்த்தனைகளும்!!