Thursday, August 20, 2009

தூரமே காதலைப் பெருக்கும் !



தூரமே
காதலைப்
பெருக்கும் !

என் அன்பே !!

இந்த
உண்மையை
இன்னும்
எத்தனை
நாள்தான்
என் மனம்
பொறுக்கும் !!!




காலையிலும்
மாலையிலும்
மற்றும்
மதியத்திலும்
ஏதாவது
எழுதிக்கொண்டே
இருக்கிறேன்.

இரவில்
என் கனவில்
நீ
வரும்பொழுது
எப்படியெல்லாம்
பேசவேண்டும்
என்பதற்காக.



பிரிந்திருக்கும் போது
எழுதிய
கவிதைகளையெல்லாம்
நாம்
நெருங்கியிருக்கும் போது
சொல்ல
மறந்து விடுகிறேன்.


12 comments:

ஹேமா said...

கவிதைல காதல் காதல்ன்னு கொட்டிக்கிடக்கு.(ஒருவேளை உங்கள் துணை அருகில் இல்லையோ)அது எல்லாம் நல்லாவே இருக்கு.

ஆனா இனி மாறி மாறி நடிகைகளின் போட்டோக்கள் போட்டிங்கன்னா யாருக்கிடயாவது சொல்லியாவது.....
இருட்டடி கொடுக்க ஒழுங்கு செய்யணும்.

இரும்புத்திரை said...

intha kavithaikku ethirkavithai podalaama

romba nalla irukku

லோகு said...

கவிதைகள் அருமையா இருக்குங்க...

சினேகா விசயத்துல அடுத்து சிக்க போவது நீங்கதானா...

Raju said...

அண்ணே..கலக்குறேள்.

பெறுக்குதல்
பெருக்குதல்.

அருமை.

இரவுப்பறவை said...

//பிரிந்திருக்கும் போது
எழுதிய
கவிதைகளையெல்லாம்
நாம்
நெருங்கியிருக்கும் போது
சொல்ல
மறந்து விடுகிறேன்//

அழகு.....

Bhuvanesh said...

ஸ்நேகாவிற்கு "காதல்" டார்ச்சர் னு பேப்பர்ல படுச்சேன்.. அது நீங்க தானா?

சத்ரியன் said...

////......
பிரிந்திருக்கும் போது
எழுதிய
கவிதைகளையெல்லாம்
நாம்
நெருங்கியிருக்கும் போது
சொல்ல
மறந்து விடுகிறேன்.//

துபாய் ராஜா,

கவிதையில் காதல் மூழ்கிடும் போலிருக்கிறது.

படங்களைப் (சினேகா) பற்றி மட்டும் நான் ஒன்னும் சொல்லமாட்டேன்.

வர்ர்ர்ட்டா.....!

Muruganandan M.K. said...

"பிரிந்திருக்கும் போது
எழுதிய
கவிதைகளையெல்லாம்
நாம்
நெருங்கியிருக்கும் போது
சொல்ல
மறந்து விடுகிறேன்." அதுதான் உண்மைக் காதலின் அடையாளம்.

பிரபாகர் said...

ராஜா...

எல்லோரும் ஏற்கனவே சொன்ன விஷயங்களை உங்களது பாணியில் கலக்கலாய் பதித்திருக்கிறீர்கள்....

உறவின் அருமை பிரிவில்
உணர்ந்தேன் அவளில்லை அருகில்
இரவும் பகலும் அவளே
இன்பம் துன்பம் அவளே...

நிறைய எழுதுங்கள்...

பிரபாகர்.

இரசிகை said...

yellame azhagu.......sneha polave:)

இரசிகை said...

padangal patriya anaivar comments um superb......:)))))))

vasu balaji said...

நல்லா இருக்குங்க ராஜா. நான் அப்போ பார்க்கலை.