Monday, August 21, 2006

கவர்ச்சி


நிலாக்கன்னியிடம்
அப்படி என்ன
கவ்ர்ச்சி ??!!.

அவளைச்
சுற்றிமட்டும்
அத்தனை
நட்சத்திரக்காளையர்கள் !!.

21 comments:

கைப்புள்ள said...

//அவளைச்
சுற்றிமட்டும்
அத்தனை
நட்சத்திரக்காளையர்கள் !!//

ஹைக்கூ நல்லாருக்குங்க.

துபாய் ராஜா said...

//ஹைக்கூ நல்லாருக்குங்க.//

நன்றி கைப்பு.

Unknown said...

எத்தனை நட்சத்திரக் காளையர்கள் சுற்றிவந்தாலும், நிலாக்கன்னி காதல் ஒளி வாங்குவது என்னவோ சூரியக்காதலனிடம் இருந்து மட்டுமே!!!

( என்னங்க துபாய்ராசா கல்யாணம் ஆன பின்னாடி கவிதையெல்லாம் தானா வருது போல? ;))) )

துபாய் ராஜா said...

//எத்தனை நட்சத்திரக் காளையர்கள் சுற்றிவந்தாலும், நிலாக்கன்னி காதல் ஒளி வாங்குவது என்னவோ சூரியக்காதலனிடம் இருந்து மட்டுமே!//

ஆம் அருள்.காதல் பற்றிய உங்கள் கருத்தே தனிதான்.அது என்றுமே
இனிக்கும் கனிதான்.

துபாய் ராஜா said...

//( என்னங்க துபாய்ராசா கல்யாணம் ஆன பின்னாடி கவிதையெல்லாம் தானா வருது போல? ;))) ) //

அருள்,இதெல்லாம் எப்பவோ எழுதுனது.இப்பதான் எடுத்து விட
நேரம் கிடைத்தது.இனி வரிசையாக வரும் பாருங்கள்.

நவீன் ப்ரகாஷ் said...

//அவளைச்
சுற்றிமட்டும்
அத்தனை
நட்சத்திரக்காளையர்கள் !!//

:))

aaradhana said...

நீங்க துபாய் ராஜாவா, அல்லாது துபாய் சேட்டா.?

உங்கள் நண்பன்(சரா) said...

யோவ் துபாய் அதான் கல்யாணமாய்டுச்சில்ல இன்னும் என்ன காதல் கவிரிச்சி கவித?
அக்காகிட்ட போட்டு விடனுமா?


//அவளைச்
சுற்றிமட்டும்
அத்தனை
நட்சத்திரக்காளையர்கள் !!. //

நல்ல வரிகள் தொடர்ந்து எழுதவும்...


அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

ராசா என்ன இது?
இப்படி களம் இறங்க ஆரம்பித்து வீட்டீர்கள்.
ரொம்ப நல்லா இருக்கு ராசா.
ராசாவின் ராஜா சபை ஆரம்பித்து விட்டது.

நெல்லைக் கிறுக்கன் said...

ஏ கலக்குதீரே வே... உம்ம கல்யாணத்த பத்தி கானாபிரபா சொல்லப் போய் தான் தெரியும்... இல்லறம் நல்லறமாக வாழ்த்துதேன் வே...

துபாய் ராஜா said...

Naveen Prakash said...
//அவளைச்
சுற்றிமட்டும்
அத்தனை
நட்சத்திரக்காளையர்கள் !!//

:))

நன்றி நவீன் பிரகாஷ்.அடிக்கடி நம்ம
சபை பக்கம் வாங்க. :-))

துபாய் ராஜா said...

//aaradhana said...
நீங்க துபாய் ராஜாவா, அல்லது
துபாய் சேட்டா.? //

அன்புஆராதனா,துபாயில'சேட்'டுலாம்
கிடையாது.'ஷேக்'குங்கதான்.நான் நம்ம
ஊரு 'ராஜா' தான்.

(ஆமா,சமீபத்தில 'நாயகன்' படம் பார்த்தீங்களா என்ன ??!! :)) )

துபாய் ராஜா said...

// உங்கள் நண்பன் said...
யோவ் துபாய் அதான் கல்யாணமாய்டுச்சில்ல இன்னும் என்ன காதல் கவிரிச்சி கவித?
அக்காகிட்ட போட்டு விடனுமா?//

மாப்பிள்ளை சரவணா,உங்க அக்கா பிரிவு தாங்காமத்தான் இதெல்லாம்.

/நல்ல வரிகள் தொடர்ந்து எழுதவும்.../

நன்றி நண்பா.

துபாய் ராஜா said...

//நாகை சிவா said...
ராசா என்ன இது?இப்படி களம் இறங்க ஆரம்பித்து வீட்டீர்கள்.ரொம்ப நல்லா இருக்கு ராசா.ராசாவின் ராஜா சபை ஆரம்பித்து விட்டது.//

ஆம் சிவா.நம்ம சபையில் தொடர்ந்து
கலந்து கொள்ளுங்கள்.

துபாய் ராஜா said...

//நெல்லைகிறுக்கன் said...
ஏ கலக்குதீரே வே... உம்ம கல்யாணத்த பத்தி கானாபிரபா சொல்லப் போய் தான் தெரியும்... இல்லறம் நல்லறமாக வாழ்த்துதேன் வே... //

வாழ்த்துக்களுக்கு நன்றி நம்ம ஊரு
நண்பரே.(ஆமா,தாழையூத்துல உங்க
வீடு எங்க ??)

Unknown said...

ராஜா.. நல்லாயிருக்குய்யா கவிதை.. இன்னும் எழுதுமய்யா.

துபாய் ராஜா said...

// Dev said...
ராஜா.. நல்லாயிருக்குய்யா கவிதை.. இன்னும் எழுதுமய்யா.//

நன்றி தேவ்.நிறைய இருக்கிறது.இனி வரிசையாக வரும் பாருங்கள்.

நெல்லைக் கிறுக்கன் said...

தாழயூத்துல 7 வருசத்துக்கு முன்னாடி இருந்தோம். பஜாருக்குப் பக்கத்தில இருக்குத பூந்தோட்டத் தெருல தான் நம்ம வீடு.. நீரும் தாழயூத்தா....?

நாமக்கல் சிபி said...

நல்லா இருக்கே!

துபாய் ராஜா said...

// நாமக்கல் சிபி @15516963 said...

நல்லா இருக்கே! //

நன்றி நாம்க்கல்லாரே.

நன்மனம் said...

நல்ல கவிதை!