Friday, June 02, 2006

தோ நானும் வந்துட்டேன்.... - (துபாய்) ராஜா


அன்பு வலைப்பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் வணக்கம்.

எனது பெயர் ராஜா.சொந்த ஊர் திருநெல்வேலி .மின் மற்றும் மின்னணு பொறியியல் படித்தவன்.தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறேன்.

எல்லாம் உன்னோட 'ப்ரொபைல்லே' பார்த்தாச்சு. விஷயத்திற்கு வா என்கிறீர்களா!!. தோ வந்துட்டேன்!!!!.

கடந்த பல ஆண்டுகளாக 'வலை உலகில்' வளைய வருபவன் என்றாலும் 'தமிழ்மணம்' அறிமுகமானது சற்று தாமதமாகத்தான்.

'தமிழ்மணம்' அறிமுகமானவுடன் எல்லோரது பதிவுகளையும் படித்து மட்டும் வந்தேன்.பின் படித்த பதிவுகளுக்கு பின்னூட்டம் இட ஆரம்பித்தேன். பலரது அறிமுகமும், நட்பும் கிடைத்தது. என்னையும் சில நண்பர்கள் எழுத தூண்டினார்கள்.

வலைப்பதிவர்கள் பலரும் தங்களது சொந்த அனுபவங்களையே சுவையாக எழுதி வருவதை கண்டேன். சிறுவயதிலும் மற்றும் பணி காரணமாகவும் எனக்கு ஏற்பட்ட பயணங்கள்,பலதரப்பட்ட சூழ்நிலைகள், சந்தித்த மக்கள் ஆகிய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இப்போது வந்துள்ளேன், 


உங்களது அன்பும்,ஆதரவும் எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையில் இனி நானும் உங்களோடு.......!!!!!

அன்புடன்,

(துபாய்) ராஜா.

28 comments:

Anonymous said...

vaanga Dubai raja...

Testing Comments..

துபாய் ராஜா said...

வரவேற்புக்கு நன்றி ஞானியார்!!!!.

Anonymous said...

Welcome

Anonymous said...

Heartly welcome

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்க வாங்க துபாய் ராசா :)) வந்து ஜோதியிலே ஐக்கியமாகுங்க !!

பேரல் பேரலாக அனுபவங்களையும் லிட்டர் லிட்டராக மேட்டர்களையும் அள்ளித்தெளிங்க!!

வாழ்த்துக்கள் :))

துபாய் ராஜா said...

வரவேற்ற 'அனானி' நண்பர்களுக்கு நன்றி!!!.

துபாய் ராஜா said...

/வாங்க வாங்க துபாய் ராசா :)) வந்து ஜோதியிலே ஐக்கியமாகுங்க!!/

ஆமா பாண்டி!இனி கொழுந்துவிட்டு
எரியவேண்டியதுதான்!!:-))))))).

/பேரல் பேரலாக அனுபவங்களையும் லிட்டர் லிட்டராக மேட்டர்களையும் அள்ளித்தெளிங்க!!/

ம்.அதெல்லாம் உறைஉறையாய் ஊறல் இருக்கு.ச்சும்மா ஊத்தித்
தள்ளிருவோம்.

வரவேற்புக்கு நன்றி பாண்டி!!!.

லக்கிலுக் said...

வணக்கம் ராஜா...

உங்கள் பதிவுகளைக் காண ஆவலாக இருக்கிறேன்....

- யெஸ்.பாலபாரதி said...

வாங்க..வாங்க...ராசா... வாங்க...

பரஞ்சோதி said...

நம்ம ஊருக்காரரா, வாங்க வாங்க. உங்களை வரவேற்பதில் ரொம்ப சந்தோசமாக இருக்குது.

யப்பூ இங்கே நம்ம ஊர்க்காரங்க நெறைய பேரு இருக்காங்க.

- பரஞ்சோதி

துபாய் ராஜா said...

வணக்கம் திரு.லக்கிலுக்.தங்கள்
படைப்புகளின் பரம ரசிகன் நான்.
வரவேற்பிற்கு மிக்க நன்றி.

Anonymous said...

வாங்க!வாங்க!துபாய் ராஜா.
'வருத்தப்படாத வாலிபர் சங்க வளைகுடா கிளை' வளர்ச்சி எப்படி
இருக்கு??????!!!!!!!.

துபாய் ராஜா said...

/வாங்க!வாங்க!துபாய் ராஜா.
'வருத்தப்படாத வாலிபர் சங்க வளைகுடா கிளை' வளர்ச்சி எப்படி
இருக்கு??????!!!!!!!./

வரவேற்பிற்கு நன்றி திரு.அனானி.
சங்கவேலையெல்லாம் அமோகமாப்
போயிட்டிருக்கு.

ஜோ/Joe said...

துபாய் ராஜா,
பின்னூட்டங்கள் வழி சந்தித்த உங்களை இனி பதிவுகள் வழி சந்திக்க இருப்பது மகிழ்ச்சி..வருக!

சின்னக்குட்டி said...

வணக்கம் துபாய் ராஜா...வாங்கோ.....டெல்லி கணேஸ், கோவை சரளா என்ற மாதிரி....நல்ல அறிமுகமான ஆள் தானே......

நன்மனம் said...

வாங்க! வாங்க!


(பி.கு. வாங்க! வாங்க! அப்படினு ரெண்டு தடவ போட்டா ***** வாங்கறதுக்கு வாங்கனு அர்த்தம்:-)))

இங்க எம்புட்டு பேருக்கு "எவ்வளவோ சொல்லனம்னு இருக்கு" (ராசுக்குட்டி படத்துல வர டயலாக்) அப்படீங்கறது இப்படி வரவேற்க்கறதுலயே தெரிஞ்சுடும்)

சங்க வேலைனு வந்த இதெல்லாம் சகஜமப்பானு நீங்க சொல்லறது கேட்குது.

பி.கு 2: என்னய அந்த வாங்க வாங்க லிஸ்டுல சேத்துடாதீங்க, நான் சொன்னது வருக அப்படீங்கற அர்த்தத்துல தான்:-)

துபாய் ராஜா said...

/நம்ம ஊருக்காரரா, வாங்க வாங்க. உங்களை வரவேற்பதில் ரொம்ப சந்தோசமாக இருக்குது./

வணக்கம் பரஞ்சோதி.வரவேற்பிற்கு நன்றி.உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்துள்ளேன்.அண்ணியிடமும்,
சக்தியிடமும் அன்பைத் தெரிவியுங்கள்.

//யப்பூ இங்கே நம்ம ஊர்க்காரங்க நெறைய பேரு இருக்காங்க.//

ஆமாம்.அனைவரும் விரைவில் சந்திபோம்.

துபாய் ராஜா said...

/துபாய் ராஜா,
பின்னூட்டங்கள் வழி சந்தித்த உங்களை இனி பதிவுகள் வழி சந்திக்க இருப்பது மகிழ்ச்சி..வருக!/

வரவேற்பிற்கு நன்றி ஜோ!!தங்களது
தேர்தல் செய்திக்ளும்,சீனப்பயணப்
பதிவும் அருமை.

துபாய் ராஜா said...

//"சின்னக்குட்டி said...
வணக்கம் துபாய் ராஜா
...வாங்கோ.....டெல்லி கணேஸ், கோவை சரளா என்ற மாதிரி....நல்ல அறிமுகமான ஆள் தானே......" //

வணக்கம் சின்னக்குட்டி ஐயா!தங்கள்
வரவேற்பிற்கு நன்றி.நான் தினமும்
வாசிக்கும் 'யாழ்'இணையதளம் மூலம்
தாங்களும் எனக்கு மிகவும் அறிமுகமானவர் தான்.:-))))).

துபாய் ராஜா said...

வணக்கம் நன்மனம்.வரவேற்பிற்கு நன்றி.சங்கத்தின் உளவுபிரிவு தலைவர் நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை??.
எதுவந்தாலும் முதல்ல வாங்கப்போறது நீங்கதானே??!!.:-)

துபாய் ராஜா said...

/யெஸ்.பாலபாரதி said...
வாங்க..வாங்க...ராசா... வாங்க.../

நன்றி பாலு!'கை' எப்படி இருக்கு??!!.
பதிவுகளை நம்பிக்'கையோடு' எதிர்பார்க்கிறோம்.

பொன்ஸ்~~Poorna said...

வா ராசா.. வா..

வந்தது தெரியாம போய்டுச்சு.. இல்லைன்னா முன்னயே வந்து வாழ்த்துச் சொல்லி இருப்பேன்.. இருக்கட்டும்.. இப்போத்தான் சொல்றேன்.. வந்து ஒரு கலக்கு கலக்கவும் !! :)

Chellamuthu Kuppusamy said...

உங்கள் பின்னூட்டங்கள் சிலதைக் கண்டுள்ளேன். வலைப்பதிவுலகிற்கு வரவேற்புகள்!

துபாய் ராஜா said...

வாழ்த்துகளுக்கு நன்றி பொன்ஸ்!!.
'லேட்டா' வந்தாலும் லேட்டஸ்டாதான்(???!!!!) வந்து இருக்கீங்க!!.

(என்ன இருந்தலும் சங்கத்துபங்காளிய விட்டுக்கொடுக்க கூடாதுல்ல!!:-)))

துபாய் ராஜா said...

வணக்கம் திரு.செல்லமுத்து.
வரவேற்பிற்கு நன்றி. தங்களது வலைப்பூக்களான கரையோரம்,
பங்குவணிகம்,INDIA NEXT
ஆகியவ்ற்றில் தங்களது பன்முக
பரிணாமங்களை கண்டுள்ளேன்.
வித்தியாசமான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

சின்னக்குட்டி said...

//வந்தது தெரியாம போய்டுச்சு//


வணக்கம் ராஜா...நீங்கள் தமிழ் மணத்தில் இன்னும் பின்னூட்ட ஒழுங்கு செய்யபடவில்லை போலை......செய்து விடுங்கள்... நீங்கள் வந்தது பலருக்கு தெரிய கூடியதாயிருக்கும்

துபாய் ராஜா said...

தகவலுக்கு நன்றி சின்னக்குட்டியார்!!

புதிதாக வந்தவன் என்பதால்
விதிமுறைகள் தெரியவில்லை.
நண்பர்கள் உதவியுடன் சரிசெய்துவிடுகிறேன்.

Unknown said...

ராசா,

வாங்க வாங்க

நெறைய எழுதுங்க...

தாமதமான வரவேற்புக்கு மன்னிக்கனும்...ஒரு மாசமா தமிழ்மணத்துக்கே வர முடியாத அளவுக்கு வேல :((

அன்புடன்,
அருள்.