Thursday, April 01, 2010

படுபாவி

அடுத்த பதிவென்ன எழுதலாம்
உணவு நேரத்தின் போது
ஒரே சிந்தனை

ஆழ்ந்த யோசனைக்குப் பின்
அகப்பட்டது விஷயம்


அம்மன் கோயில் கொடையில்
ஆடு வெட்டினார்களே
அதைக் கண்டித்து
ஆறுபத்தியில்
அழகான பதிவு

நறுக்கான தலைப்பும்
கிடைத்திட்ட மகிழ்ச்சியில்
வேகவேகமாக மென்றிட்ட
வாயிலே கடுக்முடுக்


போன்லெஸ்ன்னு சொல்லி
ஏமாத்திட்டானே படுபாவி
ஹோட்டல்காரன்

31 comments:

சாந்தி மாரியப்பன் said...

நல்லா இருக்குங்க.

கண்ணா.. said...

சாப்பிடும் போதும் இதே நினைப்புதானா..

ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்

நாடோடி said...

ம‌ட்ட‌ன் க‌றியில் போன் இருந்தா தானே ந‌ல்லா இருக்கும்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆனாலும் உங்களை அந்த ஹோட்டல்காரன் இப்படி பண்ணிருக்ககூடாது.. சே சே..

'பரிவை' சே.குமார் said...

//போன்லெஸ்ன்னு சொல்லி
ஏமாத்திட்டானே படுபாவி
ஹோட்டல்காரன்//


இடுகை எழுத விடாம....

அட...

சரி விடுங்க சிரிப்பு வருதுல்ல...

மின்மினி RS said...

ஓகோ இப்படியும் யோசிக்கலாமோ.. நன்றி அண்ணே..

பொற்கோ said...

அட ! அட! அட! அங்கும் அப்படியா! நானு இங்க தான் அப்படின்னு நினைச்சேன்! படு பாவி இல்ல அவன் அடப்பாவி!

Chitra said...

அப்படி போடு!

துபாய் ராஜா said...

//அமைதிச்சாரல் மொழிந்தது...
நல்லா இருக்குங்க.//

வரவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி அமைதிச்சாரல் அக்கா...

துபாய் ராஜா said...

//கண்ணா.. said...
சாப்பிடும் போதும் இதே நினைப்புதானா..

ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்//

வே கண்ணா, கனவைத் திற.. கவிதை வரட்டும்...ங்கிறது என்னோட பாலிசி. :))

துபாய் ராஜா said...

//நாடோடி said...
ம‌ட்ட‌ன் க‌றியில் போன் இருந்தா தானே ந‌ல்லா இருக்கும்..//

சரிதான் ஸ்டீபன். ஆனா நான் சாப்பிட்டது போன்லெஸ் சிக்கன்... :))

துபாய் ராஜா said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஆனாலும் உங்களை அந்த ஹோட்டல்காரன் இப்படி பண்ணிருக்ககூடாது.. சே சே..//

என் இனமய்யா நீர் ஸ்டார்ஜன்.... :))

துபாய் ராஜா said...

//சே.குமார் said...
//போன்லெஸ்ன்னு சொல்லி
ஏமாத்திட்டானே படுபாவி
ஹோட்டல்காரன்//


இடுகை எழுத விடாம....

அட...

சரி விடுங்க சிரிப்பு வருதுல்ல...//

அல்ல்ல்லோ குமார்... நாங்க கோபப்பட்டு கவிதை எழுதினா நீங்க சிரிப்பு போலீஸ்ங்கறீங்க.... :))

துபாய் ராஜா said...

//மின்மினி said...
ஓகோ இப்படியும் யோசிக்கலாமோ.. நன்றி அண்ணே..//

வாங்க சகோதரி மின்மினி... ஒரு பதிவுலக படைப்பாளி (???!!!) தன்னைச் சுற்றி நடக்குற விஷயங்களை எப்போதும் கூர்ந்து கவனிச்சுகிட்டே இருக்கணும்.ஏதாவது மாட்டுச்சுன்னா உடனே புடிச்சு வலைல பதிஞ்சு போட்டுடணும். :))

துபாய் ராஜா said...

//பொற்கோ said...
அட ! அட! அட! அங்கும் அப்படியா! நானு இங்க தான் அப்படின்னு நினைச்சேன்! படு பாவி இல்ல அவன் அடப்பாவி!//

வாங்க பொற்கோ..முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

ஒய் பிளட்... சேம்ம்ம்ம் பிளட்... :))

துபாய் ராஜா said...

//வானம்பாடிகள் said...
:)) //

பாலா சார், நீங்க வெஜிடேரியனா... ஒன்ணுமே சொல்லாம கமுக்கமா சிரிச்சுட்டு போயிட்டிங்க.... :))

துபாய் ராஜா said...

//Chitra said...
அப்படி போடு!//

வாங்க சித்ரா அக்கா... போடு,போடுன்னு போடணும்ன்னு தான் தோணுது... :))

குலவுசனப்பிரியன் said...

//அம்மன் கோயில் கொடையில்
ஆடு வெட்டினார்களே
அதைக் கண்டித்து
ஆறுபத்தியில்
அழகான பதிவு//
பந்தியில இடம் கிடைக்காத கோபமா?

பழமைபேசி said...

இஃகிஃகி!

Jerry Eshananda said...

அடப்பாவி.

பிரபாகர் said...

போன்லெஸ்...சான்ஸ்லெஸ்...

நல்லாருக்கு ராஜா...

படிக்கிறது ராமாயணம்....நினைவுக்கு வந்தது...

பிரபாகர்...

Paleo God said...

நல்லாருக்குங்க ராஜா.

ஆடுமாடு said...

ம்ம்ம்... இப்படித்தான் இருக்கு ஒலகம்.

நல்லாருக்கு அண்ணாச்சி.

தராசு said...

கலக்கல். தொடருங்கள்

அகல்விளக்கு said...

அட...

அருமை அண்ணா....

க.பாலாசி said...

அட... நல்லாருக்குங்க... இதுதான் உண்மையும்கூட....

கானா பிரபா said...

மனிதரின் இரண்டு முகங்களைக் காட்டிய கவிதை அருமை

எறும்பு said...

அடுத்து எந்த பதிவரை சந்திக்கலாம்
உணவு நேரத்தின் போது
ஒரே சிந்தனை

ஆழ்ந்த தேடலுக்கு பிறகு
கிடைத்தது துபாய் ராஜாவின்
இந்திய விஜயம்

நறுக்கென கமெண்ட் இடும்
பதிவரை சந்திக்க காத்திருந்தால்

ஜெட் லாக், நேர மாற்றம் என்று கூறி
அருமையாக அல்வா வழங்கப்பட்டது.

நல்லா இருங்க அண்ணாச்சி

:0
;)

அண்ணாமலையான் said...

கலக்குறீங்க

Prathap Kumar S. said...

என்னத்தல ஹோட்டல் காரன் ஏப்ரல் பூல் ஆக்கிட்டான் போலருக்கு... :))

Ananya Mahadevan said...

:-))