Friday, October 09, 2009

வாழ்த்துக்களுக்கு நன்றி. நன்றி.. நன்றி...


நூறாவது பதிவிற்கு வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. மகிழ்ச்சியாகவும் அதே நேரம் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உற்றார், உறவினர், ஊர், பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, மக்கள், நல்லது, கெட்டது அனைத்தையும் இழந்து வெளிநாடுகளில் வாழு(டு)ம் எங்களைப் போன்றோருக்கு உங்கள் அன்பும் ஆதரவுமே வேதனைகளை மறந்து நண்பர்கள் பலர் நம்மோடு இருக்கின்றனர் என்ற உவப்பையும் தொடர்ந்து எழுத ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

பிரிவுத்துயர் குறித்த எனது கவிதைகள்
தூரமே காதலைப் பெருக்கும்...
பதிவுலற்கு வந்து ஆண்டுகள் ஐந்தானாலும், இந்த ஆண்டுதான் அருமையான ஆண்டாக தொன்றுகிறது. 25வது, 50வது, 100வது பதிவுகள் இட்டதும், புதிய, புதிய நண்பர்கள் அறிமுகமானது எல்லாமே இந்த ஆண்டில்தான். உங்கள் அனைவரது எதிர்பார்ப்பிற்கும் ஏற்றவாறு எழுதவேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி நிற்கிறது. மீண்டும் ஒருமுறை எனது வலைப்பூவிற்கு தொடர்ந்து வருகை தரும் அன்பு நண்பர்களுக்கும், வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. நன்றி. நன்றி.

என்றென்றும் அன்புடன்
அன்பன்
துபாய் ராஜா.

8 comments:

பிரபாகர் said...

உங்களின் நன்றிக்கு ஒரு நன்றி... (சும்மா போட்டு வெப்போம்ல)

பிரபாகர்.

venkat said...

\\வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. நன்றி. நன்றி.//
வாழ்துக்கு நன்றியா?
நன்றி
தொடரட்டும்....

vasu balaji said...

அதானே. =))

ஹேமா said...

உங்கள் அன்புக்கும் நன்றி ராஜா.

லோகு said...

நீங்க போற ஸ்பீடை பார்த்த இந்த வருசமே 200 அடிச்சுடுவீங்க போல..

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

பரவால்ல பரவால்ல.. =))

இரசிகை said...

vazhthukal....