Tuesday, October 06, 2015

காதல் பா(ர்)வை



உலையில் கொதிக்கும் 
அரிசி போல 
ஒய்யாரி நீ 
பார்க்கையில்
 என் நிலையில் 
பல மாற்றங்கள்...

உருட்டி விழித்திடும் 
காதல் கன்னி
 உன் கண்வரிசை 
காட்டிடும் 
சில தோற்றங்கள்...

உற்று நோக்கிட்டாலும்
காதல் மாணவன் 
எனக்கு 
எப்போதும் புரிந்திடா 
கணித தேற்றங்கள்...

துணிந்து தோழி நீ
 துணை வந்தால் 
துல்லியமாய் ஏறிடலாம் 
நம் வாழ்வில் 
பல ஏற்றங்கள்…

7 comments:

KILLERGEE Devakottai said...


அருமை நண்பரே ரசித்தேன் வாழ்த்துகள்

எல்லாம் சரிதான் இதெல்லாம் இப்போ காலாவதியாகிப்போச்சே... அதாவது இப்போதைக்கும்... தங்களுக்கு சரியா வருதா ? சின்னோண்டு டவுட்டு அதான் கேட்டேன்.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

Nagendra Bharathi said...

அருமை

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே ரசித்தேன் வாழ்த்துகள்

எல்லாம் சரிதான் இதெல்லாம் இப்போ காலாவதியாகிப்போச்சே... அதாவது இப்போதைக்கும்... தங்களுக்கு சரியா வருதா ? சின்னோண்டு டவுட்டு அதான் கேட்டேன். //

இப்'போதை'க்கு மட்டுமல்ல எப்'போதை'க்கும் பெண்களின் பார்வையின் பொருள் மட்டும் எவருக்கும் விளங்குவதில்லையே நண்பரே... :))

எனவேதான் கவிஞர்கள் நாங்கள்,
'கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை.
காத்திருந்தால் பெண் கனிவதில்லை.
ஒரு முகம் மறைய
ஒரு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை...' என அந்த காலம் முதல் இந்த காலம் வரை எல்லோர் சார்பாகவும் புலம்பித் திரிகிறோம்... :))

இப்போ நண்பரின் டவுட்டு அவுட்டாயிருக்கும்ன்னு நினைக்கிறேன்... :))

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே ரசித்தேன் வாழ்த்துகள்

எல்லாம் சரிதான் இதெல்லாம் இப்போ காலாவதியாகிப்போச்சே... அதாவது இப்போதைக்கும்... தங்களுக்கு சரியா வருதா ? சின்னோண்டு டவுட்டு அதான் கேட்டேன். //

இப்'போதை'க்கு மட்டுமல்ல எப்'போதை'க்கும் பெண்களின் பார்வையின் பொருள் மட்டும் எவருக்கும் விளங்குவதில்லையே நண்பரே... :))

எனவேதான் கவிஞர்கள் நாங்கள்,
'கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை.
காத்திருந்தால் பெண் கனிவதில்லை.
ஒரு முகம் மறைய
ஒரு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை...' என அந்த காலம் முதல் இந்த காலம் வரை எல்லோர் சார்பாகவும் புலம்பித் திரிகிறோம்... :))

இப்போ நண்பரின் டவுட்டு அவுட்டாயிருக்கும்ன்னு நினைக்கிறேன்... :))

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
ரசித்தேன் நண்பரே

துபாய் ராஜா said...

// கரந்தை ஜெயக்குமார் said...

அருமை.ரசித்தேன் நண்பரே... //

ஊக்க கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா...